search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers"

    • சுதந்திர தின‌நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
    • மொத்தம் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தொழிலாளா் துறையின் தஞ்சாவூா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) கமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூா், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவ னங்களில், தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் தேசிய விடுமுறை நாளான சுதந்திர தினநாளன்று (ஆகஸ்ட்15) தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அவா்களுடைய சம்மதத்துடன் இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என 133 நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

    இதில், சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள், நிறுவனங்களில் 69 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 43 முரண்பாடுகளும், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 9 முரண்பாடுகளும் என மொத்தம் 121 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

    தற்போது, கடந்த ஒரு வாரமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுமார் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் இரவு, பகலாக முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

    திருவாரூர்:  

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய சுமை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது.
    • சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மங்கலம்:

    திருப்பூர், கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் சந்தித்து வரும் தொடர் நஷ்டத்தினை தவிர்க்க தென் இந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 15-ந் தேதி முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இவர்கள் கடந்த மே மாதம் முதல் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம் செய்திருந்த நிலையில் 15-ந்தேதி முதல் முழு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதும், அதனால் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவைவிட விற்பனை விலை மிகக்குறைவாக உள்ளதுமே நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் என தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பின் கெளரவ செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு கிலோ பருத்தியின் கொள்முதல் விலை ரூ.152 முதல் ரூ.194 ஆக உள்ளது. இந்த பருத்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 40ம் நம்பர் (40's Count) தரத்திலான நூல் விலை கிலோ ரூ 235க்கு விற்கப்படுகிறது. கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது. ஆனால் அந்த நூலை உற்பத்தி செய்வதற்கான ஆள் கூலி, மின் கட்டணம், வரி உள்ளிட்ட செலவினங்களை சேர்த்து ரூ.80 வரை செலவாகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.40க்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது.

    சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் அதிகம் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் மக்கள் மத்தியில் தேவையில்லாததால் நூல்களுக்கான விலை கிடைப்பதில்லை.

    இந்தியாவில் தேவையை விட இருப்பு அதிகம் இருப்பதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கு காரணம், இந்தியாவில் உற்பத்தி செய்யும் நூல்களின் விலை, ஏற்றுமதி செய்வதற்காக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இல்லை. ஏற்கனவே உள்ள உற்பத்திச்செலவைத்தாண்டி 11 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதால், ஏற்றுமதி செய்வதற்கும் உகந்த சூழல் இல்லை என்கிறார் ஜெகதீஷ்.

    தமிழ்நாட்டில் சுமார் 600 நூற்பாலைகளில், 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அவர் , எஞ்சியுள்ள நூற்பாலைகளும் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சூழல் எப்போது மாறும் என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் நிலைமை சீரானால், மூடப்பட்டுள்ள நூற்பாலைகள் மீண்டும் திறந்து தொழில் செய்ய முடியும், இரண்டு மாதங்களுக்கு மேலானால், அவர்கள் நிரந்தரமாக மூடுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது உற்பத்தியை நிறுத்தியிருக்கும் எங்களைப்போன்ற சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் நிலையும் அதுதான் என்றார்.

    இந்நிலையில் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, கழிவுப் பஞ்சை மூலப் பொருளாகக்கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட்(ஓஇ) ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் 300 ஆலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 ஆலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறு குறு நடுத்தர நூற்பாலைகளைப்போலவே, ஓபன் எண்ட் ஆலைகளும் நஷ்டத்தில் இயக்க முடியாமல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறுகையில், மின்சாரத்திற்கான தேவை அதிகம் இருக்கும் நேரங்களில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிக மின் கட்டணம் என்பது சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மட்டுமின்றி, ஓபன் எண்ட் ஆலைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. பெரிய நிறுவனங்களால் சொந்தமாக காற்றாலை அமைத்து அதன் மூலமாகவோ, அல்லது சூரிய ஆற்றல் மூலமாகவோ மின்சாரம் சேமித்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், சிறு குறு நிறுவனங்கள் முழுக்க முழுக்க அரசின் மின்சாரத்தையே நம்பியிருக்கிறோம். அதேவேளையில், நாங்கள் 24 மணிநேரமும் செயல்படும் ஆலைகளாக உள்ளோம். அதனால் சுதந்திர இந்தியாவில் நாங்கள் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது நஷ்டத்திற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம்.

    இந்தியா ஒரே நாடாக இருந்தாலும், மாநிலத்திற்கு மாநிலம் ஜவுளிக்கொள்கைகள் வேறுபடுவதால், மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும், அதில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சல் மிகவும் குறைவு. சில காலங்களில் பருத்தி விளைச்சலே இருக்காது. ஆனால், இங்குள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறனால், மற்ற மாநிலங்களில் விளையும் பருத்தியைப் பெற்று, இங்கு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எந்தெந்த மாநிலங்களில் பருத்தி விளைகிறதோ அங்கேயே ஜவுளி உற்பத்தி தொழில் துவங்க பல்வேறு மானியங்களை அந்தந்த மாநில அரசுகள் தருவதால் அந்த மாநிலத்தில் இருப்பவர்களால் லாபகரமாக இயங்க முடிகிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் சந்தையில் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பருத்தி கொள்முதல் விலையும், நூல் உற்பத்தி செய்வதற்கான செலவும், நூல் விற்பனை விலையும் ஒன்றுதான். ஆனால், ஜவுளித்தொழிலுக்கு ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு வகையில் மானியங்கள் கொடுப்பதால், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களால் லாபகரமாக இயக்க முடிகிறது. அதாவது அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அவர்கள் பெறும் மானியத்தின் மூலம் ஈடு செய்து லாபம் ஈட்டுகிறார்கள்.இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

    பருத்தி விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், நாம் ஒரு ஹெக்டேருக்கு 350 கிலோ முதல் 450 கிலோ பருத்திதான் விளைவிக்கிறோம். ஆனால் இதே சர்வதேச அரங்கில் நம்முடன் போட்டியிடும் நாடுகளில், ஹெக்டருக்கு 750 கிலோ முதல் 1000 கிலோ வரை விளைவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பருத்தி விலை முதல் நூல் விலை வரை, அனைத்தும் குறைவானதாகவும் சர்வதேச சந்தையில் போட்டிபோடும் வகையிலும் உள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தவிர்க்க உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ள நிலையில் செய்வதறியாது தவிக்கின்றனர் திருப்பூர், கோவை மாவட்ட நூற்பாலைகளில் பணியாற்றும் நூற்பாலைத் தொழிலாளர்கள்.

    கொரோனா காலத்தில் வாங்கிய கடன்களையே தற்போதுதான் திரும்பச் செலுத்தி வந்தோம். தற்போது, ஆலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்து வரும் நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.

    தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்தில் உள்ள நூற்பாலை தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 350 முதல் ரூ.500 வரை கூலியாக வழங்கப்படுகிறது. ஒருவர் 10 வருடத்திற்கு மேல் வேலை செய்திருந்தால்தான் ரூ .500 கூலி கொடுப்பார்கள். இல்லையென்றால் ரூ .350ல் முதல் ரூ. 400 வரைதான் கூலி கிடைக்கும். இந்த கூலி உற்பத்தி காலத்தில் வழங்கப்படுவது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பளத்தை குறைத்து கொடுக்கிறார்களா அல்லது சம்பளமே இல்லை என சொல்லப்போகிறார்களா என்பது அவர்கள் மாதச்சம்பளம் கொடுக்கும்போதுதான் தெரியும் என்கின்றனர் தொழிலாளர்கள்.

    தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கேட்ட போது, தொழிலாளர்களின் நலனை தொழில் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் . அதிக நஷ்டத்தில் இயக்கிய காலத்திலேயே, தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுத்துள்ளோம். தற்போது உற்பத்தி நிறுத்தத்தால் அவ்வளவு நஷ்டம் இல்லை என்பதால் அவர்களுக்கு தேவையானதை நாங்கள் எப்போதும் பார்த்துக்கொள்வோம் என நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே நூற்பாலை பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான முறையில் வேலை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்
    • மாபெரும் பேரணியை வரும் 6-ந் தேதி நடத்தி முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் சம்பளம் வழங்கப்படவில்லை.

    பாசிக் 115, பாப்ஸ்கோ 68, அமுதசுரபி 31, ரேஷன்கடை 55, கே.வி.கே. 45, பாண்டெக்ஸ் 47, பாண்பேப் 60, ஹவுசிங்போர்டு 52, ஏஎப்டி 12 மாதம் என சம்பளம் வழங்கப்படவில்லை. பணி ஓய்வில்சென்றவர்களுக்கு பணிக்கொடையும் வழங்க வில்லை.

    இதனால் இங்கு பணிபுரிந்த ஊழியர்களின் குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன.

    இதை கண்டித்து பல கட்டபோராட்டங்களை ஊழியர்கள் சங்கத்தினர் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை மாநாடு நடத்தமுடிவு செய்யப்பட்டது.

    இதன்படி புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு இன்று சுதேசி மில் அருகே நடத்தப்பட்டது.

    மாநாட்டிற்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, எதிர்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் சி றப்புரையாற்றினர்.

    மாநாட்டில் புதுவை அரசு சார்பு நிறுவனங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக்குழு அமைத்து கலந்துபேசி தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியை வரும் 6-ந் தேதி நடத்தி முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    மாநாட்டில் பாசிக் சங்கம் முத்துராமன், ரமேஷ், பாப்ஸ்கோ சங்கம் ரமேஷ், ஜெய்சங்கர், துரைசெல்வம், பாஸ்கர பாண்டியன், அமுதசுரபி சிவஞானம், பிரபு, விற்பனைக்குழு சண்முகம், கே.வி.கே. யோகேஷ், கதிரேசன், ரேஷன்கடை சங்கம் முருகானந்தம், பிரேம் ஆனந்த், பி.ஆர்.டி.சி. ராஜேந்திரன், திருக்குமரன், பாண்டெக்ஸ் அழகப்பன், சிவக்குமார், பி.ஆர்.டி.சி.சக்திசிவம், பாஸ்கரன், வீட்டுவசதி வாரியம் அண்ணாதுரை, ராஜா, பாண்டெக்ஸ் முருகன், நெடுஞ்செழின், பாண்பேப் அண்ணாமலை, ராமதாஸ், பஞ்சாலை தொழிலாளர் சங்கம் ஏழுமலை, ஜெயசதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன் வாழ்த்தி பேசினர். 

    • விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது.
    • மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பூர் :

    ஆதரவற்றவர்களுக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் உணவளித்து சேவையாற்றும் அட்சயபாத்திரம் அமைப்பு 2019 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திருப்பூரில் 15 மண்டலங்களாக பிரித்து 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றவர், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்குவது, பராமரிப்பது என சேவையாற்றி வருகின்றனர்.

    அட்சய பாத்திரம் அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சிறப்பு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மங்கலம், ஆண்டிபாளையம் பாரடைஸ் அரங்கில் அன்னம் பகிர்ந்திடு, சாய்ந்திட தோள்கொடு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    உலக நல வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அட்சயபாத்திரம் ஆலோசனை குழு தலைவர் மோகன்கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜன் ஆகியோர் சமூக பணிகளை விளக்கி பேசினர்.

    அறக்கட்டளையின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி வெளியே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இனி புதிய சமையல் கூடம் உருவாக்கி தரமான உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் பங்களிப்புடன், இலவச இரவு நேர உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள், தொழிலாளர் பயன்பெறும் வகையில் குறைந்தவிலையில் மதிய உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைவரும் வாசித்து ஏற்றனா்.
    • கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலா்களும் வாசித்து ஏற்றனா்.

    பின்னா், சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் குளோரி குணசீலி, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
    • வருகிற 13-ந்தேதி சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மாவட்ட தொழிலாளர் நல வாரிய கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாள ர்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம், கண்கண்ணாடி, முடக்கு ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தொழிலா ளர் நல வாரியம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 700-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் 1 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் நேரில் வந்து நலவாரிய அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் ஆதார் கார்டில் செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும். பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மின் ஊழியர் மத்திய  அமைப்பு   மாவட்ட மாநாடு நடந்தது. 

    இதில் ஒய்வுபெற்ற நல அமைப்பு மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் குருவேல்  தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வண்ணமுத்து சிறப்புரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் கணேசன் வரவேற்றார். 

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வரவேற்பு குழுத் தலைவர் ராமன் ஆகியோர் பேசினர்.  

    மாவட்ட தலைவராக உமாநாத், மாவட்ட செயலாளராக கருணாநிதி,  பொருளாளராக மோக னசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழி லாளர்களை    நிரந்தரம் செய்ய வேண்டும்.  தொழி லாளர்களுக்கு தினந்தோறும் கூலி ரூ.380 வழங்க வேண்டும்.     பகுதிநேர தொழிலாளர்களை முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் மீட்டர்களை கணக்கீடு செய்யும் மதிப்பீட்டாளர் காலிபணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய மின்வாரிய அலுவ லகங்களை புதிதாக கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் உள்ள  காலாவதியான கணினியை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ×