search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவரங்கள்"

    • வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கார்னரில் செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடு களினால்ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023 -2024 -ம் ஆண்டிற்கான சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) பயிருக்கு15.11.2023 மற்றும் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு 31.10.2023-ம் தேதி வரையிலும்,உளுந்து பயிருக்கு 15.11.2023 வரையும், மணிலா பயிருக்கு 30.12.2023, கரும்பு பயிருக்கு30.3.2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29.02.2024, கத்தரி மற்றும்வெங்காயம் பயிருக்கு 31.01.2024 தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடுசெய்து கொள்ளலாம்.

    மேலும், காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.487- ம்,மக்கா ச்சோளத்திற்கு ரூ.296-ம், பருத்தி ரூ.484-ம், உளுந்து பயிருக்கு ரூ.207-ம், மணிலாபயிருக்கு ரூ.427, கரும்பு பயிருக்கு ரூ.2,717, மரவள்ளி பயிருக்கு ரூ.1,499, கத்தரி பயிருக்குரூ.808 மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ.884 காப்பீட்டுத் தொகையை பொது சேவை மைய ங்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்தேசிய காப்பீட்டு இணைய தளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில்செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவை யானஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல்(பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம்மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும் போது விவசாயின் பெயர் மற்றும்விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகியவிவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கள்ளக் குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இணைந்து பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
    • மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வட்டாரம் தளிக்கோட்டை பஞ்சாயத்து 2023- 24 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் இவ்வாண்டு ஒரு சிறப்பு திட்டமாக ஒவ்வொரு மண் மாதிரி தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு பெறப்பட்ட மண் மாதிரிகள் குறித்து அனைத்து விபரங்களும் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மண்மாதிரி பையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் என வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட குறிப்பு குறியீடு அட்டை ஸ்கேன் செய்து இடப்படுகிறது.

    இதன் மூலம் மண் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் இந்த தனிப்பட்ட குறிப்பு குறியீட்டினை உரிய கருவி மூலம் ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவு செய்யப்படுகிறது.

    விவசாயிகள் தங்களுடைய செல்போன் எண்ணினை பதிவு செய்தவுடன் அவர்களுடைய மண் மாதிரிக்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நேரடியாக அவர்களுடைய செல்போனில் பார்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் தமிழ்நாடு மண்வள செயலின் மூலம் தங்களுடைய செல்போன் எண் மற்றும் சர்வே எண்ணினை பதிவுசெய்து கடந்த வருடத்தில் வழங்கிய மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.

    எனவே இவ்வருடம் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவிக்கோட்டை நெம்மேலி, கன்னியாகுறிச்சி, பெரிய கோட்டை, சொக்கநாவூர், அண்டமி மற்றும் தளிக்கோட்டை கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை வேளாண் உதவி அலுவலரிடம் தனிப்பட்ட குறிப்பு குறியீட்டுடன் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.

    • விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் போர்வையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலர் மக்களோடு மக்களாக கலந்துள்ளனர்.
    • மாநகர போலீசார், புதிய சாப்ட்வேர் ஒன்றை தயார் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலத்தவர் வேலை வாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தொழிலாளர் போர்வையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலர் மக்களோடு மக்களாக கலந்துள்ளனர்.இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகர போலீசார், புதிய சாப்ட்வேர் ஒன்றை தயார் செய்தனர்.

    தொழில்துறையினரின் ஒத்துழைப்போடு வெளி நாடு, மாநிலத்தை சேர்ந்த 28 ஆயிரம் பேர், புறநகரில், 7 ஆயிரம் பேர் என 35 ஆயிரம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். பின் மீண்டும் வர துவங்கினர். இதனால் புள்ளிவிவரங்கள் முறையாக இல்லாமல் இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில் நகரங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வருவாய்த்துறை, போலீசார், தொழிலாளர் நலத்துறை இணைந்து விவரம் சேகரிக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருப்பூரில் போலீஸ் நிலையம் வாரியாக உள்ள நிறுவனங்கள், ஓட்டல், கடைகளில் வேலை செய்யும் வெளிமாநில, மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர் விவரம் சேகரிக்கும் பணியை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.அதில் பெயர், பாலினம், வயது, பெற்றோர், மனைவி பெயர், செல்போன் எண், சொந்த மாநிலம், மாவட்டம், அடையாள சான்று, தங்களை அழைத்து வந்த ஏஜென்ட் குறித்த விவரம், பணி செய்யும் இடம், ஏற்கனவே அவர்கள் மீதுள்ள குற்ற வழக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    கடந்த 2 மாதம் முன்பு தொழிலாளர் நலத்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி மாவட்டத்தில் பனியன் நிறுவனம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த 153 கான்ட்ராக்டர் விவரம் பெறப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பாபு கூறியதாவது:-

    விவரம் சேகரிப்பு பணிக்கு விவரங்களை பதிவு செய்ய என்னென்ன விவரங்களை பெற வேண்டும், அதனுடன் ஆவணங்களை இணைக்கும் வகையில், படிவம் ஒன்று தயார் செய்யப்பட்டு அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பனியன் நிறுவனம், வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டது.இதன் மூலம் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேரின் விவரம் சேகரிக்கப்பட்டது. இப்பணி தொடர்கிறது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இதற்காக ஒரு பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் விவரங்களை, சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதுபோக படிவத்தில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இன்னும் வேறு எந்த வகையில் எல்லாம் விவரங்களை சேகரிக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    • வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஏதேனும் விடுதல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) /பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடம்மனுவாக அளிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் (ெபாறுப்பு) மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 30.4.2022 வரை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கு (1ஊராட்சி மன்ற தலைவர், 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர்) தற்செயல் நேரடித் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கா னவார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் நேற்று (17-ந் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் விடுதல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) /பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியல் 2நகல்களை அங்கீகரி க்கப்பட்ட அரசி யல் கட்சிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியஅலு வலகங்கள்/மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக வருகிற 20-ந் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

    அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்களை ஒரு பக்கத்திற்கு ரூ.5 கட்டணமாக செலுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் /வட்டார வளர்ச்சி அலுவலர் / பேரூராட்சி செயல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×