search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் பதிவுகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்- கலெக்டர் அறிவிப்பு
    X

    கலெக்டர் லலிதா.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் பதிவுகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்- கலெக்டர் அறிவிப்பு

    • பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதியதாக 25.1.22ம் தேதி முதல் 2வது குறுக்குத் தெரு,பாலாஜி நகர் பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்றமுகவரியில் செயல்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட மயிலா டுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களைச் சார்ந்த நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களி ன்வேலை வாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள்வே லைவாய்ப்பு அலுவலக பதிவுமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் சரிபா ர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப் புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும்குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் அவ்வாறு சரிபார்த்துக் கொள்ளவரும்பட்சத்தில் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

    மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களுக்கான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ளதமிழக அரசின் மனிதவள மேலாண்மைதுறை அரசாணையில்கு றிப்பிட்டுள்ள 20 வகையான முன்னுரி மைகளை பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்உ ரிய சான்றுகளைப் பெற்று வந்துபதிவு செய்துகொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×