search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்பாலை"

    • இந்திய நூற்பாலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்.

    சூலூர்,

    சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 16-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவர் ஜி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சண்முகம், கோபால்சாமி வேலுச்சாமி பாலகிருஷ்ணன், பிரபு முன்னிலை வகித்தனர்.செயலாளர் கே.ஆர்.சண்முகசுந்தரம் அனை வரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக பழைய வட்டி வீதமான 7.5 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும்.

    குறுகிய கால கடனான நிலவை தொகையை மீட்டெ டுத்து கொண்டு அக்கடனை ஏற்கனவே வழங்கியது போல் முழுவதுமாக மீண்டும் புதிய கடனாக வழங்க வேண்டும். இக்கட னுக்கு விடுமுறை காலமாக ஆறு மாதமும் அக்கடனை திருப்பி செலுத்த ஏழு வருடங்களும் மிகக் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

    நூற்பாலைத் தொழிலின் மந்தநிலையை கருத்தில் கொண்டு தற்போதுள்ள காலக்கடனை மறு சீரமைத்து 2 ஆண்டு கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

    நூல் மற்றும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அந்நிய நூல் மற்றும் துணிவகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதியாவதை கண்காணித்து தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எம்.டி கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

    நூற்பாலை தொழிலின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உபயோ கப்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப எம்டி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நூற்பாலைத் தொழில் 24 மணி நேரமும் மின்சாரம் நகரப்படும் தொழில் என்பதால் மாநில அரசு பசுமை எரிசக்தியை ஊக்குவித்து அதற்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன. இதில் துணை செயலாளர்கள் சென்னியப்பன் பார்த்திபன் சவுந்தர், துணைத் தலைவர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது.
    • சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

    மங்கலம்:

    திருப்பூர், கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் சந்தித்து வரும் தொடர் நஷ்டத்தினை தவிர்க்க தென் இந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 15-ந் தேதி முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் காலவரையற்ற உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. இவர்கள் கடந்த மே மாதம் முதல் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம் செய்திருந்த நிலையில் 15-ந்தேதி முதல் முழு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் தேவையைவிட உற்பத்தி அதிகமாக இருப்பதும், அதனால் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவைவிட விற்பனை விலை மிகக்குறைவாக உள்ளதுமே நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் என தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பின் கெளரவ செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு கிலோ பருத்தியின் கொள்முதல் விலை ரூ.152 முதல் ரூ.194 ஆக உள்ளது. இந்த பருத்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 40ம் நம்பர் (40's Count) தரத்திலான நூல் விலை கிலோ ரூ 235க்கு விற்கப்படுகிறது. கொள்முதல் விலையிலிருந்து ரூ 40 முதல் 45 வரைதான் உற்பத்தி செய்த நூலை விற்க முடிகிறது. ஆனால் அந்த நூலை உற்பத்தி செய்வதற்கான ஆள் கூலி, மின் கட்டணம், வரி உள்ளிட்ட செலவினங்களை சேர்த்து ரூ.80 வரை செலவாகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.40க்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது.

    சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் அதிகம் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் மக்கள் மத்தியில் தேவையில்லாததால் நூல்களுக்கான விலை கிடைப்பதில்லை.

    இந்தியாவில் தேவையை விட இருப்பு அதிகம் இருப்பதற்கான இன்னுமொரு முக்கியக்காரணம், நாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது.

    இதற்கு காரணம், இந்தியாவில் உற்பத்தி செய்யும் நூல்களின் விலை, ஏற்றுமதி செய்வதற்காக மற்ற நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இல்லை. ஏற்கனவே உள்ள உற்பத்திச்செலவைத்தாண்டி 11 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதால், ஏற்றுமதி செய்வதற்கும் உகந்த சூழல் இல்லை என்கிறார் ஜெகதீஷ்.

    தமிழ்நாட்டில் சுமார் 600 நூற்பாலைகளில், 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அவர் , எஞ்சியுள்ள நூற்பாலைகளும் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சூழல் எப்போது மாறும் என்று தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் நிலைமை சீரானால், மூடப்பட்டுள்ள நூற்பாலைகள் மீண்டும் திறந்து தொழில் செய்ய முடியும், இரண்டு மாதங்களுக்கு மேலானால், அவர்கள் நிரந்தரமாக மூடுவதை தவிர வேறு வழியில்லை. தற்போது உற்பத்தியை நிறுத்தியிருக்கும் எங்களைப்போன்ற சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகளின் நிலையும் அதுதான் என்றார்.

    இந்நிலையில் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, கழிவுப் பஞ்சை மூலப் பொருளாகக்கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட்(ஓஇ) ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் 300 ஆலைகள் கலர் நூல் தயாரிப்பிலும், 300 ஆலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறு குறு நடுத்தர நூற்பாலைகளைப்போலவே, ஓபன் எண்ட் ஆலைகளும் நஷ்டத்தில் இயக்க முடியாமல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறுகையில், மின்சாரத்திற்கான தேவை அதிகம் இருக்கும் நேரங்களில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிக மின் கட்டணம் என்பது சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மட்டுமின்றி, ஓபன் எண்ட் ஆலைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. பெரிய நிறுவனங்களால் சொந்தமாக காற்றாலை அமைத்து அதன் மூலமாகவோ, அல்லது சூரிய ஆற்றல் மூலமாகவோ மின்சாரம் சேமித்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், சிறு குறு நிறுவனங்கள் முழுக்க முழுக்க அரசின் மின்சாரத்தையே நம்பியிருக்கிறோம். அதேவேளையில், நாங்கள் 24 மணிநேரமும் செயல்படும் ஆலைகளாக உள்ளோம். அதனால் சுதந்திர இந்தியாவில் நாங்கள் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது நஷ்டத்திற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம்.

    இந்தியா ஒரே நாடாக இருந்தாலும், மாநிலத்திற்கு மாநிலம் ஜவுளிக்கொள்கைகள் வேறுபடுவதால், மாநிலங்களிடையே போட்டி நிலவுவதாகவும், அதில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சல் மிகவும் குறைவு. சில காலங்களில் பருத்தி விளைச்சலே இருக்காது. ஆனால், இங்குள்ள தொழில்முனைவோரின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் திறனால், மற்ற மாநிலங்களில் விளையும் பருத்தியைப் பெற்று, இங்கு ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எந்தெந்த மாநிலங்களில் பருத்தி விளைகிறதோ அங்கேயே ஜவுளி உற்பத்தி தொழில் துவங்க பல்வேறு மானியங்களை அந்தந்த மாநில அரசுகள் தருவதால் அந்த மாநிலத்தில் இருப்பவர்களால் லாபகரமாக இயங்க முடிகிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் சந்தையில் எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் பருத்தி கொள்முதல் விலையும், நூல் உற்பத்தி செய்வதற்கான செலவும், நூல் விற்பனை விலையும் ஒன்றுதான். ஆனால், ஜவுளித்தொழிலுக்கு ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு வகையில் மானியங்கள் கொடுப்பதால், குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ளவர்களால் லாபகரமாக இயக்க முடிகிறது. அதாவது அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அவர்கள் பெறும் மானியத்தின் மூலம் ஈடு செய்து லாபம் ஈட்டுகிறார்கள்.இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

    பருத்தி விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், நாம் ஒரு ஹெக்டேருக்கு 350 கிலோ முதல் 450 கிலோ பருத்திதான் விளைவிக்கிறோம். ஆனால் இதே சர்வதேச அரங்கில் நம்முடன் போட்டியிடும் நாடுகளில், ஹெக்டருக்கு 750 கிலோ முதல் 1000 கிலோ வரை விளைவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பருத்தி விலை முதல் நூல் விலை வரை, அனைத்தும் குறைவானதாகவும் சர்வதேச சந்தையில் போட்டிபோடும் வகையிலும் உள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலைகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை தவிர்க்க உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியுள்ள நிலையில் செய்வதறியாது தவிக்கின்றனர் திருப்பூர், கோவை மாவட்ட நூற்பாலைகளில் பணியாற்றும் நூற்பாலைத் தொழிலாளர்கள்.

    கொரோனா காலத்தில் வாங்கிய கடன்களையே தற்போதுதான் திரும்பச் செலுத்தி வந்தோம். தற்போது, ஆலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அடுத்து வரும் நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.

    தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டத்தில் உள்ள நூற்பாலை தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 350 முதல் ரூ.500 வரை கூலியாக வழங்கப்படுகிறது. ஒருவர் 10 வருடத்திற்கு மேல் வேலை செய்திருந்தால்தான் ரூ .500 கூலி கொடுப்பார்கள். இல்லையென்றால் ரூ .350ல் முதல் ரூ. 400 வரைதான் கூலி கிடைக்கும். இந்த கூலி உற்பத்தி காலத்தில் வழங்கப்படுவது. தற்போது உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பளத்தை குறைத்து கொடுக்கிறார்களா அல்லது சம்பளமே இல்லை என சொல்லப்போகிறார்களா என்பது அவர்கள் மாதச்சம்பளம் கொடுக்கும்போதுதான் தெரியும் என்கின்றனர் தொழிலாளர்கள்.

    தொழிலாளர்களின் சம்பளம் குறித்து கேட்ட போது, தொழிலாளர்களின் நலனை தொழில் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும் . அதிக நஷ்டத்தில் இயக்கிய காலத்திலேயே, தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் கொடுத்துள்ளோம். தற்போது உற்பத்தி நிறுத்தத்தால் அவ்வளவு நஷ்டம் இல்லை என்பதால் அவர்களுக்கு தேவையானதை நாங்கள் எப்போதும் பார்த்துக்கொள்வோம் என நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே நூற்பாலை பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • உலக குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசியில் குழந்தை தொழில் உழைப்புக்கு எதிரான பிரசார இயக்கம் சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில அமைப்பாளா் கருப்புசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாநில அமைப்பாளா் செல்லையா நம்பி முன்னிலை வகித்தாா். மேற்கு மண்டல அமைப்பாளா் குருசாமி வரவேற்றாா்.

    இதில், 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகளே, இவா்களுக்கு கல்வி பெறும் உரிமை உள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வியில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளா் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது.
    • ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் ரயான் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ரயான் நூல் மூலம் இயக்கப்படும் விசைத்தறிகள் மிக அதிகம்.

    தற்போது அரசின் இலவச வேட்டி-சேலை பணிகள் விசைத்தறிகளில் நடப்பதால் ரயான் நூல் மூலமாக துணி உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ரயான் நூலை நம்பியே பெரும்பாலான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரயான் நூல் விலை கடந்த சில மாதமாக நிலையில்லாமல் இருப்பதால் ஸ்பின்னிங் மில்கள் நஷ்டத்தை சந்திப்பதுடன் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

    சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் நூற்பாலைகளுக்கு கிலோவுக்கு 35 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. ஓரிரு நாளுக்கு முன் விலை உயர்ந்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து இந்தியன் மேன்மேடு நூல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

    ரயான் நூல் உற்பத்திக்கான ஸ்பின்னிங் மில்களில் மின்கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி, உதிரி பாகங்கள், விலை உயர்வு, தொழிலாளர் சம்பளம், வாகன வாடகை உள்பட பலவும் உயர்ந்து தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. லாபம் கிடைக்கவில்லை என்பதை விட உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. பல ஆலைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    மேலும் பல ஆலைகள் 50 சதவீத உற்பத்தியை குறைத்து உள்ளன. கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் ரயான் நூல்களை குறைந்து, கடந்த சில நாட்களாக சில ரூபாய் உயர்ந்தது. அதை உயர்வு என எடுத்து கொள்ள இயலாது. அதற்குள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால் நூல் உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

    இதேப்போல் ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    பருத்தி, பருத்தி நூல், ரயான் நூல் துணிகளின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசிடம் அனைவரும் இணைந்து முறையிட வேண்டும் . அரசால் மட்டுமே இவ்விலையேற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் நூற்பாலைக்கு மின்கம்பங்கள் நட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த சப்ளைக்கு பதிலாக குறைந்த மின்னழுத்த சப்ளைகோரி ஆலை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து மின் விநியோகம் வழங்குவதற்கு கமுதக்குடி கிராமத்தில் மின்கம்பங்கள் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வந்தனர். மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே மின்கம்பங்கள் நடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு அதிகளவில் இருந்ததால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி விட்டு மின்வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வட மாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தக் கூடாது. தினக்கூலி தொழிலா ளர்களை நிரந்தரப்ப டுத்த வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு நூற்பாலை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை நிர்வாகம் கைவிட வேண்டும் என கூறினார். இதில் அண்ணா தொழிற்சங்கம் மாசானம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுகுமாரன், சேர்மன் சகாயராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜா பிள்ளை, சி.ஐ.டி.யு.சக்திவேல், ஏ.ஐ.டி.யூ.சி. இசக்கிமுத்து, நகர பொருளாளர் சுயம்புலிங்கம், கச்சேரி நாகராஜன், சங்கரலிங்கம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×