search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spinning"

    • இந்திய நூற்பாலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்.

    சூலூர்,

    சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 16-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவர் ஜி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சண்முகம், கோபால்சாமி வேலுச்சாமி பாலகிருஷ்ணன், பிரபு முன்னிலை வகித்தனர்.செயலாளர் கே.ஆர்.சண்முகசுந்தரம் அனை வரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக பழைய வட்டி வீதமான 7.5 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும்.

    குறுகிய கால கடனான நிலவை தொகையை மீட்டெ டுத்து கொண்டு அக்கடனை ஏற்கனவே வழங்கியது போல் முழுவதுமாக மீண்டும் புதிய கடனாக வழங்க வேண்டும். இக்கட னுக்கு விடுமுறை காலமாக ஆறு மாதமும் அக்கடனை திருப்பி செலுத்த ஏழு வருடங்களும் மிகக் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

    நூற்பாலைத் தொழிலின் மந்தநிலையை கருத்தில் கொண்டு தற்போதுள்ள காலக்கடனை மறு சீரமைத்து 2 ஆண்டு கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

    நூல் மற்றும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அந்நிய நூல் மற்றும் துணிவகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதியாவதை கண்காணித்து தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எம்.டி கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

    நூற்பாலை தொழிலின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உபயோ கப்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப எம்டி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நூற்பாலைத் தொழில் 24 மணி நேரமும் மின்சாரம் நகரப்படும் தொழில் என்பதால் மாநில அரசு பசுமை எரிசக்தியை ஊக்குவித்து அதற்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன. இதில் துணை செயலாளர்கள் சென்னியப்பன் பார்த்திபன் சவுந்தர், துணைத் தலைவர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது.
    • ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ஈரோடு:

    கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் ரயான் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ரயான் நூல் மூலம் இயக்கப்படும் விசைத்தறிகள் மிக அதிகம்.

    தற்போது அரசின் இலவச வேட்டி-சேலை பணிகள் விசைத்தறிகளில் நடப்பதால் ரயான் நூல் மூலமாக துணி உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ரயான் நூலை நம்பியே பெரும்பாலான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ரயான் நூல் விலை கடந்த சில மாதமாக நிலையில்லாமல் இருப்பதால் ஸ்பின்னிங் மில்கள் நஷ்டத்தை சந்திப்பதுடன் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

    சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரயான் நூல் ரூ.225-க்கு விற்ற நிலையில் தற்போது 175 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் நூற்பாலைகளுக்கு கிலோவுக்கு 35 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. ஓரிரு நாளுக்கு முன் விலை உயர்ந்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து இந்தியன் மேன்மேடு நூல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:-

    ரயான் நூல் உற்பத்திக்கான ஸ்பின்னிங் மில்களில் மின்கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி, உதிரி பாகங்கள், விலை உயர்வு, தொழிலாளர் சம்பளம், வாகன வாடகை உள்பட பலவும் உயர்ந்து தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது. லாபம் கிடைக்கவில்லை என்பதை விட உற்பத்தி செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. பல ஆலைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

    மேலும் பல ஆலைகள் 50 சதவீத உற்பத்தியை குறைத்து உள்ளன. கிலோவுக்கு ரூ.50-க்கு மேல் ரயான் நூல்களை குறைந்து, கடந்த சில நாட்களாக சில ரூபாய் உயர்ந்தது. அதை உயர்வு என எடுத்து கொள்ள இயலாது. அதற்குள் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால் நூல் உற்பத்தியை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

    இதேப்போல் ஜவுளி உற்பத்தியாளர்களும், நூல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கத்தால் விலை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    பருத்தி, பருத்தி நூல், ரயான் நூல் துணிகளின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசிடம் அனைவரும் இணைந்து முறையிட வேண்டும் . அரசால் மட்டுமே இவ்விலையேற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×