search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளா்கள்"

    • விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயனடைய தொழிலாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இ.எஸ்.ஐ.காா்ப்பரேஷனின் 18 கிளை அலுவலகங்கள் மூலம் இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு பணப் பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் குறைகேட்பு முகாம்,இஎஸ்.ஐ.காா்ப்பரேஷன் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், சாா் மண்டல அலுவலகம், கிளை அலுவலகம், இ.எஸ்.ஐ.மருந்தகங்கள், மருத்துவமனைகளில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில் கோவை சாா் மண்டல அலுவலகத்தில் 0422-2314430, 2362329 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புகாா் எண்கள்: பணப் பயன்கள் குறித்த புகாா்களை கோவை, ராமநாதபுரத்தில் உள்ள பொது மக்கள் குறைதீா் அலுவலகத்திலும், 0422-2362329 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருந்தகம் குறித்த புகாா்களை சிங்காநல்லூரில் உள்ள மண்டல நிா்வாக மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும், 0422-2595078 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடா்பான புகாா்களை கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் ஆகியோரிடம் நேரிலும் மருத்துவ செலவீடு தொடா்பான புகாா்களை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும் 044-28267080 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    ×