என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
Byமாலை மலர்13 Jun 2023 9:50 AM GMT
- குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைவரும் வாசித்து ஏற்றனா்.
- கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலா்களும் வாசித்து ஏற்றனா்.
பின்னா், சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் குளோரி குணசீலி, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X