என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ.1.50 கோடி நலத்திட்ட உதவி
- கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
- வருகிற 13-ந்தேதி சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் மாவட்ட தொழிலாளர் நல வாரிய கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாள ர்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம், கண்கண்ணாடி, முடக்கு ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளிகளுக்கு பணியிடை விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதத்தில் மட்டும் தொழிலா ளர் நல வாரியம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 700-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் 1 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் நேரில் வந்து நலவாரிய அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் ஆதார் கார்டில் செல்நம்பர் இணைத்திருக்க வேண்டும். பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்