search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat"

    தேனி அருகே பள்ளியில் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தேனி அருகே பெரியகுளம் ஏ.வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு கண்காணப்பு பணியில் ஆசிரியர் மணிகண்டன் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இரு பிரிவினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் பள்ளியில் புகுந்து மாணவர்கள் கோவிந்தராஜ், சுந்தரேசன் ஆகியோரை தாக்கி உள்ளனர்.

    இதனை ஆசிரியர் மணிகண்டன் தட்டி கேட்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைய கூடாது என அவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தில் அந்த 2 வாலிபர்கள் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரேவந்த் (வயது23), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் (20) என தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாக்குறுதியை இன்னும் சில நாட்களில் நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன் என்று அன்னா ஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். #AnnaHazare #bjp #PadmaBhushanaward

    மும்பை:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசியதாவது:-

    எனது உயிருக்கு எதுவும் நடந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இன்னும் சில நாட்களில் இதை நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன்.

    நான் விருதுக்காக பணியாற்றுபவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.


    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்னா ஹசாரே போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. #AnnaHazare #bjp #PadmaBhushanaward 

    ரூ.27 லட்சம் மோசடி குறித்து போலீசில் புகார் கூறிய வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 37) ரெடிமேட் ஆடை வியாபாரி.

    இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜரத்தினம் (45) பழகி வந்தார். அப்போது கத்தார் நாட்டிற்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து இருவரிடையே கடந்த நவம்பர் மாதம் ஏற்றுமதி தொழில் வியாபார ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னர் பல தவணைகளில் ரூ.31 லட்சத்து 27 ஆயிரத்தை மகேசுவரன் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட ராஜரத்தினம், ஏற்றுமதி தொழிலை தொடங்காமல் காலம் கடத்தி உள்ளார். இதனால் மகேசுவரன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.27 லட்சத்து 32 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் மகேசுவரன் புகார் செய்தார்.

    இதனால் ராஜரத்தினம் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று மகேசுவரன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ராஜரத்தினம், அவரது தந்தை கருமலை, தாயார் கல்யாணி, சகோதரர் கண்ணன் உள்பட 7 பேர் காரில் வந்து வழிமறித்தனர். அவர்கள் போலீசில் எப்படி புகார் கொடுக்கலாம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜபாளையம் போலீசில் மகேசுவரன் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜரத்தினம் கைது செய்யப்பட்டார்.

    தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீன அதிபர் சி ஜின்பிங் மிரட்டலால் தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. #chinapresident #XiJinping

    பீஜிங்:

    சீனா அருகே தைவான் நாடு உள்ளது. இந்த நாடு அமைந்துள்ள இடம் ஒரு தீவு ஆகும். ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது.

    ஆனாலும், தைவானை தனி நாடாக இதுவரை சீனா ஏற்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தனி நாடாக ஏற்றுள்ளன.

    அமெரிக்கா அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.

    சீனா தொடர்ந்து தைவான் தங்களது நாட்டின் பகுதி. அதை எங்கள் நாட்டோடு இணைப்போம் என்று கூறி வந்தது.

    இந்த நிலையில் நேற்று சீன அதிபர் சி ஜின்பிங் கூறும்போது, தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான்.

    எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

    இதற்கு எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் கூறி உள்ளது.

    சீன அதிபரின் மிரட்டலால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தைவான் ஏற்கனவே சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தனது ராணுவத்தை எப்போதும் தயாராக வைத்திருந்தது. இப்போது சீன அதிபரின் மிரட்டலால் மேலும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.

    சீனா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #devegowda #Congress

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவ்வப்போது கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகளால் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

    தற்போது தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக ஜே.டி.எஸ். கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசுக்கு ஜே.டி.எஸ். கட்சி தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    3 மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. இந்தப் போக்கு நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும்.

    எங்கள் தோழமை கட்சி மீது எந்த குற்றச்சாட்டும் கூற விரும்பவில்லை என்றாலும், காங்கிரஸ் எங்களை நடத்தும் விதம் அதிருப்தியளிக்கச் செய்வதாக உள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.  #devegowda #Congress 

    சிலர் எங்களுக்கு மிரட்டல் விடுவதால் பா.ம.க.வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காடுவெட்டி குரு தாயார் கல்யாணி அம்மாள் தெரிவித்துள்ளார். #kaduvettiguru #pmk

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி, வி.ஜி.கே.மணிகண்டன் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள், மகன் கனலரசன், தங்கை செல்வி, மருமகன் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக காடுவெட்டியின் தாயார் கல்யாணி அம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயிலாடுதுறையில் நடைபெறுகிற படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். குருவின் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டித்தருகிறேன் என்று சொன்னார்கள். எங்களுக்கு உள்ள ரூ.1½ கோடி கடனை அடைத்து விட்டு மணிமண்டபம் கட்டுங்கள் என்று சொன்னோம். ஆனால் கடனை அடைக்காமல், ஆட்களை வைத்து எங்களை தாக்கி விட்டனர். எனது மருமகளை எங்களிடமிருந்து பிரித்துவிட்டனர். ஊரில் சிலர் எங்களை மிரட்டி வருகின்றனர். இப்போது கட்சிக்கும் (பா.ம.க.) எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. கட்சியுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது. கட்சியில் சேர்ந்ததால் தான் எனது மகன் உயிருக்கே ஆபத்து வந்தது. சரியான வைத்தியம் செய்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம். மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவு செய்து சிகிச்சை அளித்தார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #kaduvettiguru #pmk

    ரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டனர்.

    காதலன் நாகராஜை சந்திப்பதற்காக இளம்பெண், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து, தனது காதலை வளர்த்து வந்தார்.

    மாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கி கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜ், அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். விடுதி அறையில் தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார்.

    அந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, ‘‘எனக்கு உன் பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி தர வேண்டும். இல்லையெனில், நான் உன்னுடைய நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன்’’ எனக்கூறி மாணவியை மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம், மாணவியை அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக பெற்றோர், மேற்குக் கோதாவரி மாவட்ட போலீசில் நாகராஜ் மீது புகார் செய்தனர். அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்ததை, அந்த மாவட்ட போலீசார், சந்திரகிரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சந்திரகிரி போலீசார், நாகராஜை கைது செய்தனர். அவரை, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார் நவநீதம்மாள் இரவு திருப்பதி போலீஸ் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
    கோவை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    கோவை வரதராஜபுரத்தை அடுத்துள்ள எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்த கோபால் (66). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவருடன் தொழில் ரீதியாக கோவையை சேர்ந்த டென்னிஸ் பழகி வந்துள்ளார். இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்த கோபாலிடம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.

    இதற்கு நடந்த கோபாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 26-ந் தேதி நந்த கோபாலை சந்தித்த டென்னிஸ் திருப்பூரில் உள்ள தனது நண்பர்களையும் சீட்டு நிறுவனத்தில் சேர்த்து விடலாம் என கூறி இருக்கிறார்.

    இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்தகோபால் காரிலே அவரையும், அவரது நண்பர் ராமமூர்த்தியையும் திருப்பூரை அடுத்துள்ள கணியாம் பூண்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு டென்னிஸ் நண்பர்களான செல்வா, போலீஸ் கார்த்தி, ரகு ஆகியோர் ஒரு வீட்டில் இருந்தனர்.அங்கு நந்த கோபால், ராமமூர்த்தி ஆகியோரை அழைத்து சென்று அவர்களது கைகளை கட்டி போட்டு சிறை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் ரூ. 1 கோடி எடுத்து வர சொல்லுமாறும் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.இதற்கிடையே கணியாம்பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் நடமாடுவதாக அனுப்பர்பாளைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்குள்ள வீட்டில் நந்தகோபால், ராமமூர்த்தி அடைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் மீட்டனர். நந்த கோபால் காரும் கைப்பற்றப்பட்டது.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கார்த்தி காரையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை அறிந்த டென்னிஸ், செல்வா, கார்த்தி ஆகிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். ரகு மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஒரு தனிப்படையினர் கோவைக்கும் விரைந்து உள்ளனர். நந்த கோபாலை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணியாம்பூண்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.அதன் உரிமையாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் வீட்டை பார்க்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர். அவரும் வேறு ஒருவர் மூலம் சாவியை கொடுத்துள்ளார்.

    அங்கு தான் நந்தகோபால், ராமமூர்த்தியை கடத்தி வைத்து உள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேர் மீதும் திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #tamilnews
    என்ஜினீயரிங் மாணவியை காதலிக்க சொல்லி மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோட்டைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் சென்று வந்தார். நேற்று மாலை கல்லூரி பஸ்சில் வந்த மாணவி, ஆசாரிவிளை நிறுத்தத்தில் இறங்கினார்.

    அங்கிருந்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டுவிளையைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 19), அவரது நண்பர்கள் விஜயன் (26), விஜூகுமார் (22) ஆகிய 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களில் ஜார்ஜ் தன்னை காதலிக்கும்படி மாணவியிடம் வற்புறுத்தினார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ், என்னை காதலிக்காவிட்டால் உன்னை கடத்திச் சென்று விடுவேன் என எச்சரித்தார். அவருடன் வந்திருந்த 2 நண்பர்களும், ஜார்ஜை காதலிக்கும்படி மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். பின்னர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகாராகவும் கொடுத்தார்.

    அதில் காட்டுவிளையைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தன்னை காதலிக்கச் சொல்லி மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் ஜார்ஜ், விஜயன், விஜூகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஜயன், விஜூகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜை தேடி வருகிறார்கள்.

    திருக்கோவிலூரில் திருமணம் செய்யாவிட்டால் ஆசிட் வீசுவேன் என்று மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் வடக்கு வீதி, கங்கையம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி கீதா (வயது45). இவர்களது மகள் பிரியதர்‌ஷனி.

    இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். பிரியதர்ஷினி தினமும் கல்லூரிக்கு போகும் போதும், வீடு திரும்பும் போது திருக்கோவிலூர் வடக்கு மாடவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் (வயது 39) என்பவர் அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார்.

    அவ்வாறு தன்னை திருமணம் செய்து கொள்ளா விட்டால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தமிழ்ச் செல்வன் கீதாவின் கடைக்கு சென்று அங்கிருந்த கீதா மற்றும் அவரது மகள் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினார்.

    இது குறித்து கீதா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உடனே நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேஷ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவுசெய்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருநின்றவூரை சேர்ந்த 11 வயது சிறுமி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Threat

    போரூர்:

    சென்னை அவசர ஆம்புலன்ஸ் சேவை பிரிவு எண் 108-க்கு செல்போனில் பேசிய மர்ம நபர் ராமாபுரத்தில் குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

    இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கும் ராமாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்ததில் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது.

    இதுபற்றி திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் போனில் பேசியது கூலி தொழிலாளியான சேகர் என்பவரின் 11 வயது மகள் என்பது தெரிந்தது. மேலும் சிறுமி பேசிய செல்போன் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடையது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Threat

    பெண்ணை மிரட்டி கைதான போலி சப்-இன்ஸ்பெக்டர் திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் பிரேமா(வயது 42). விசைத்தறி அதிபர்.
    இவருக்கும், தேவனாங் குறிச்சி அருகே உள்ள கீழேரிப்பட்டியை சேர்ந்த விசைத்தறி அதிபர் விக்னேஷ்(45) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரேமா விக்னேசுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டுப்பார்த்தும் பணத்தை கொடுக்கவில்லை. 

    இதனால் விக்னேஷ், தனது நண்பர் கோம்பை நகரை சேர்ந்த பெயிண்டிங் காண்ட்ராக்டர் ரத்தினம் (45) என்பவரை சந்தித்து, பிரேமாவிடம் இருந்து தனது பணத்தை எப்படியாவது? வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து ரத்தினம் நேற்று பிரேமாவை சந்தித்து பேசினார். தான் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில்  சப்-இன்ஸ்பெக்டராக உள்ளேன். விக்னேசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு. இல்லையென்றால், வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    பயந்து போன பிரேமா இது பற்றி இன்ஸ்பெக்டரிடம் கூறுவதற்காக திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சப்-இன்ஸ் பெக்டர் என்று கூறி ரத்தினம் என்பவர் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டினார் என தெரிவித்தார்.

    அதற்கு போலீசார், ரத்தினம் என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் எங்கள் போலீஸ் நிலையத்தில் கிடையாது என்றனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரேமா, தன்னை மிரட்டியது போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பதை உணர்ந்தார்.

    போலீசாரும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி போலி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினத்தை கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
    ×