search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"

    • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை கைதுசெய்தது.
    • அவரது கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

    இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    கெஜ்ரிவால் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதம் இருக்குமாறு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரண்டு காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
    • குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.

    100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

    உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.

    புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

    குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.

    குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.

    சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.

    புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.

    சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.

    • முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை ஆன இலங்கைத் தமிழர் சாந்தன் (வயது 55) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

    சிறை விடுவிப்புக்குப் பின்னர், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் அவர் உயிரிழந்தார் என கூறி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

    தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை திரும்பப் பெற்றார். முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இன்று 3-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடிக்கிறது. முஜிபுர்ரகுமான் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.

    அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை.

    இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
    • வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ளது எஸ்.ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமம் சிறுவத்தூர் ஊராட்சியிலும், சேமகோட்டை ஊராட்சியிலும் உள்ளது. அதே போல இந்த கிராமம் நெய்வேலிசட்டமன்ற தொகுதியிலும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் ஏரிப்பாளையம் கிராமம் தனித்துவிடப்பட்டுள்ளது என கூறி ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கிராம மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

    இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் சிவமணி தலைமையில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இன்று காலை கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து பண்ருட்டி-மடப்பட்டு சாலை சேலம் மெயின் ரோட்டில் எஸ்.ஏரிப்பாளையம் கேட் அருகில் சாலையின் இருபுறமும் பந்தல் அமைத்து அதில் அமர்ந்து சிறுவர், சிறுமியர் முதல்பெரியவர் வரை 1000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார்

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டம் தழுவிய பல்வேறு அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது உண்டு.

    இந்த ஆண்டு விளையாட அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு மனு அனுப்பப்பட்டது. போட்டியை நடத்தவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா, சுந்தர்சிங், கீதா மற்றும் போலீசார், விளையாட அனுமதி இல்லை என கூறி எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் அந்த பகுதி பரபரப்பானது. அந்த பகுதி இளைஞர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார் ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முறைப்படி அனுமதி பெற்று மீண்டும் விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.
    • இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி வேலன் தலைமை வகித்தார். தலைமையிடத்து செய லாளர் இளையராஜா, மா வட்ட மகளிரணி செய லாளர் ராகமஞ்சரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தின ர்களாக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் மணிவ ண்ணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராஜா சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரி யர்களு க்கான பணிப்பா துகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறு த்தப்பட்டது.

    இதில் தலைமை யாசிரியர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், அய்யம்பெருமாள், வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் வையாபுரி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ராம சமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செய லாளர் ராஜேந்திரன் வரவே ற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • ஊக்க ஊதியத்திற்கு பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயல் தலைவர் காத்த பெருமாள் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைச்செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்டத் தலைவர்கள் ஆசைத்தம்பி, செந்தில்குமார் மற்றும் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் 10.06.2009 முதல் பணியேற்ற முதுகலையா சிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும்.

    2004-2006- ம் ஆண்டில் பணியேற்ற முதுகலையாசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும்.

    ஊக்க ஊதியத்திற்குப் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

    தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறை ப்படுத்திட வேண்டும்.

    ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்குப் போடப்படும் முறையற்ற தணிக்கைத் தடையை நீக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.

    மேலும் அடுத்த கட்டமாக டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும்.
    • முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மேல்நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பாரி, ராஜேந்திரன், மணிகண்டன், ரபார்ட் கிங்ஸ்லி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    முதுகலை ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றிட வேண்டும். 2004- 2006 இடைப்பட்ட கல்வி ஆண்டுகளில் தொகுப்பூ தியத்தில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை கணக்கில் கொண்டு தேர்வு நிலை மற்றும் ஊதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஜோதி முத்து, சட்ட செயலாளர் பாலமுருகன், மகளிர் அணி செயலாளர் உஷா, கல்வி மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மணிவாசகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் துணைத் தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் செல்வகணபதி, இணை செயலாளர் வேல்முருகன், விருத்தாசலம் கல்வி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் கழகம் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உன்னாவிரதம் இருந்து வருகின்றனர்.
    • சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    மேட்டூர்:

    மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டம் மூலம் வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் சூரப்பள்ளி, குப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் பெரிய கிணறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கும் என்றும், இந்த திட்டத்தை மாற்று நீர் வழிப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் ஜலகண்டாபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வயது குழந்தை உள்பட குப்பம்பட்டியை சேர்ந்த பாக்கியம் (வயது 53), லோகாம்மாள் (65) ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். இதில் சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாக்கியம், லோகாம்மாள் ஆகியோர் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை குடியிருப்பு பகுதியில் அமுல்படுத்தாமல் மாற்று நீர் ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் சேலம் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜெயச்சந்திரன், பன்னீர்செல்வம், அழகிரி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 6-வது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை 1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது.
    • தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வை குறைக்க கோரி சென்னையில் அக்டோபா் 16 -ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளாது.

    இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு மற்றும் நாடா இல்லா தறி நெசவாளா் சங்கத்தின் (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் அண்டை மாநிலங்களுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சோலாா் உள்பட மின் கட்டணங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    ஆனால், இங்கு எங்களது சொந்த கட்டடங்களின் மேல் சோலாா் அமைத்து பயன்படுத்தவும் கட்டணம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது. தற்போது மின் கட்டண உயா்வால் தொழில்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு கோரிக்கையில் கொமதேக., பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கேட்ட கேள்விக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தொழில் துறைக்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.ஏற்கெனவே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதையே மீண்டும் சட்டப் பேரவையில் அமைச்சா் அறிவித்துள்ளாா்.

    எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தொழில் துறையினரைப் பாதுகாக்க வேண்டும். அதுவரை தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் போராட்டங்கள் தொடரும்.

    இந்நிலையில் அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அக்டோபா் 16 -ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும். இதில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    ×