search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peacocks"

    • ளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
    • மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மயில்கள் பரவலாக காணப்படுகின்றன. அவ்வப்போது இறைச்சி மற்றும் தோகைக்காக, மயில்கள் வேட்டை யாடப்பட்டு வந்தது. இந்நிலையில் விளைநிலங்களில் வலம் வரும் மயில்களை தடுக்க, மருந்து, விஷம் வைக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே, மயில்களால் இடையூறு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அந்த இடத்தில் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், மயில்கள் ஆண்டு முழுவதும் விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவது கிடையாது. மாறாக, நாற்று நடும் காலம், விதைப்பு காலம் அல்லது அறுவடை காலம் எப்போது என்பதை தெரிந்து, மயில்களை விரட்டும் முயற்சியை துரிதப்படுத்த வேண்டும்.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, மாவட்டத்தில் மயில்கள் சுற்றித்திரியும் புதர்காடுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மயில்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், எஞ்சிய பாதுகாக்கப்பட்ட வனங்கள், விளைநிலங்களில் மட்டுமே, அவை காணப்படுகின்றன. வனத்துறையினர், தன்னார்வலர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்தோ, மயில் காப்பாளர் எனும் புதிய பணியிடத்தை உருவாக்கியோ, அவைகளை பாதுகாக்க முன் வர வேண்டும். அப்போது தான், வேளாண் பயிர் சாகுபடியையும் பாதுகாக்க முடியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
    • மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன.

    உடுமலை :

    நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது.இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் மற்றும் சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

    மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன. உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன. முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன.

    இதனால் வயல்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர்.வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு மக்கள் ரசிக்கின்றனர்.ஆனால் விவசாய பகுதிகளில் நிலக்கடலை, தானியம், காய்கறி உள்ளிட்ட கீரை சாகுபடியை மயில்கள் மேய்ச்சல் நிலமாக மாற்றி விடுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.கிராம ரோடுகளில் மயில்கள் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு, வனத்துறை அதிகாரிகளோடு மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பாபநாசம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன.
    • டெல்டா பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன.

    பாபநாசம்:

    தமிழகத்தில் விராலிமலை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிகமாக காணப்படு கின்றன.

    தற்போது டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், திருமானூரில் இருந்து அணைக்கரை வரை உள்ள கொள்ளிட கரை ஆகிய பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன.

    கர்நாடகா மாநிலத்தில் பங்குபூர், ஆதிசிந்தனகிரியிலும், மராட்டிய மாநிலத்தில் நெய்கானிலும் மயில்கள் சரணாலயம் அமைந்துள்ளன.

    இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசம், கும்பகோணம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

    மயிலுக்கு நெல் மிகவும் பிடித்தமான உணவு.

    இவை மற்ற பறவைகளைப் போல சட்டென்று வேகமாக பறந்து செல்லாது. டெல்டா பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மயில்கள் காணப்படுகின்றன.

    மேலும், மயில்களை பொருத்த வரை குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

    இவை உணவு மற்றும் குடிநீா்த் தேடி விவசாய தோட்டத்திற்கும் குடியிருப்புப் பகுதிக்குள் செல்லும் மயில்கள் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதியும் உயிரிழக்கின்றன.

    இது போன்று அழிந்து வரும் மயில் இனத்தை பாதுகாக்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயில்களை கணக்கெடுத்து, மயில்கள் அதிக அளவு காணப்படும் பாபநாசம் பகுதியில் சரணாலயம் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது.
    • அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோரணம் பட்டி ஊராட்சி, ராயணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சித்தன் (வயது 50).

    இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது. அதில் சித்தன் ராகி பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயில்களின் உடல்களை கைப்பற்றினர்.

    சித்தன் ராகி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்த நிலையில், அவற்றை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது.

    விவசாய நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.

     அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்

    மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.

    • வயலில் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன.
    • மயில்கள் எப்படி இறந்தன ? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மணிவேல்(வயது 75). இவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் மதியம் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அவற்றை வாலிகண்டபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் கால்நடை டாக்டர் மூலம் மயில்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மயில்கள் எப்படி ெசத்தன? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது.
    • மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா?

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த குரும்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட, நாச்சியூர் அடுத்த வண்ணார்காடு பகுதியில், நேற்று விவசாயநிலத்தில் 2 ஆண்மயில் மற்றும் 2 பெண்மயில் என நான்கு மயில்கள் உயிரிழந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், மயில்களின் உடலினை கைப்பற்றி , கொங்கணாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் ஒரே நேரத்தில் 4 மயில்கள் உயிரிழந்ததால், அப்பகுதியில் உள்ள யாரேனும் மயில்களுக்கு விஷம்வைத்து கொன்றார்களா? மேலும் புதர்பகுதியில் மயில்கள் இறந்து கிடக்கின்றனவா? என வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேசியபறவையான மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    சாணார்பட்டி அருகே பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மயில்களை வேட்டையாடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே உள்ள ராமன்செட்டியபட்டி, கொண்டன்செட்டியபட்டி, கோணப்பட்டி ஆகிய கிராமங்களில் மா விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாந் தோப்புகளில் மயில்கள் இரை தேடி இளைப்பாறி வருகின்றன.

    கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் துப்பாக்கியால் மர்ம நபர்கள் மயில்களை சுட்டு வேட்டையாடி வருகின்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பொதுமக்கள் எழுந்து வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடி விடுகின்றனர்.

    ஆடி மாதம் என்றாலே வன விலங்குகள் வேட்டையாடப் படுவது தொடங்கி விடும். இறைச்சிக்காக விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வருகின்றனர். நாட்டின் தேசிய பறவையான மயிலை கூட விட்டு விடாமல் இக்கும்பல் வேட்டையாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    ×