என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்
Byமாலை மலர்15 Aug 2022 8:31 AM GMT
- வயலில் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன.
- மயில்கள் எப்படி இறந்தன ? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மணிவேல்(வயது 75). இவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் மதியம் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அவற்றை வாலிகண்டபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கால்நடை டாக்டர் மூலம் மயில்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மயில்கள் எப்படி ெசத்தன? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X