search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள்
    X

    விவசாய நிலத்தில் இறந்து கிடந்த மயில். 

    விவசாய நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள்

    • விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது.
    • அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோரணம் பட்டி ஊராட்சி, ராயணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சித்தன் (வயது 50).

    இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ராயணம்பட்டி அருகே உள்ள வையாபுரி காட்டுவளவு என்னும் பகுதியில் உள்ளது. அதில் சித்தன் ராகி பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவரது வயலில் 2 மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கொங்கணா புரம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயில்களின் உடல்களை கைப்பற்றினர்.

    சித்தன் ராகி வயலில் பூச்சிக்கொல்லி மருந்து வைத்த நிலையில், அவற்றை சாப்பிட்ட மயில்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது.

    விவசாய நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×