என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padma Bhushan award"

    • ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.
    • உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார்.

    மத்திய அரசு நேற்று பத்ம விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநருமான பகத் சிங் கோசியாரிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு உத்தவ் தாக்கரே (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான MVA அரசை கவிழ்த்தவர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சஞ்ச் ராவத் கூறுகையில் "பகத் சிங் கோஷியாரி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தார். உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, மாநிலத்தில் பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார். உச்சநீதிமன்றம் கூட, அவரது பதவிக் காலத்தில் கோஷியாரி செயல் சட்டவிரோதம் என சுட்டிக்காட்டியது.

    முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்பட மகாயுதி அரசு கூட, இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    பகத் சிங் கோஷியாரி 2019 முதல் 2023 வரை மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார். உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்தவர்களை மேலவை உறுப்பினராக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். மேலும், சத்திரபதி சிவாஜி மகாராஜா பழைய காலத்து சின்னம் எனக் கூறி சர்ச்சைக்கு உள்ளானார்.

    • பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
    • மத்திய அரசின் உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருது ஒன்று.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அஜித்குமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.

    அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • விமான நிலைய போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
    • தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார்.

    அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

    காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தேமுகதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆலந்தூர் தாசில்தாரும், உதவி தேர்தல் அதிகாரியுமான துளசிராமன் விமான நிலைய போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து, பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தேமுதிக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்பட தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    வாக்குறுதியை இன்னும் சில நாட்களில் நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன் என்று அன்னா ஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். #AnnaHazare #bjp #PadmaBhushanaward

    மும்பை:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசியதாவது:-

    எனது உயிருக்கு எதுவும் நடந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இன்னும் சில நாட்களில் இதை நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன்.

    நான் விருதுக்காக பணியாற்றுபவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.


    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்னா ஹசாரே போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. #AnnaHazare #bjp #PadmaBhushanaward 

    ×