search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaduvetti guru"

    சிலர் எங்களுக்கு மிரட்டல் விடுவதால் பா.ம.க.வுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காடுவெட்டி குரு தாயார் கல்யாணி அம்மாள் தெரிவித்துள்ளார். #kaduvettiguru #pmk

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி, வி.ஜி.கே.மணிகண்டன் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள், மகன் கனலரசன், தங்கை செல்வி, மருமகன் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக காடுவெட்டியின் தாயார் கல்யாணி அம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயிலாடுதுறையில் நடைபெறுகிற படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். குருவின் மறைவுக்கு பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டித்தருகிறேன் என்று சொன்னார்கள். எங்களுக்கு உள்ள ரூ.1½ கோடி கடனை அடைத்து விட்டு மணிமண்டபம் கட்டுங்கள் என்று சொன்னோம். ஆனால் கடனை அடைக்காமல், ஆட்களை வைத்து எங்களை தாக்கி விட்டனர். எனது மருமகளை எங்களிடமிருந்து பிரித்துவிட்டனர். ஊரில் சிலர் எங்களை மிரட்டி வருகின்றனர். இப்போது கட்சிக்கும் (பா.ம.க.) எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. கட்சியுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது. கட்சியில் சேர்ந்ததால் தான் எனது மகன் உயிருக்கே ஆபத்து வந்தது. சரியான வைத்தியம் செய்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம். மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவு செய்து சிகிச்சை அளித்தார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #kaduvettiguru #pmk

    தன் தந்தையின் விருப்பப்படியே தான் திருமணம் செய்து கொண்டதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார். #KaduvettiGuru #Daughter #Marriage
    கும்பகோணம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

    இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.



    கும்பகோணத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், தனது திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அவரிடம் அதுபற்றி கூறவில்லை எனவும் கூறினார். காடுவெட்டியில் உள்ள தனது உறவினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். #KaduvettiGuru #Daughter #Marriage    
    காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள், பாதுகாப்பு கேட்டு மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். #KaduvettiGuru #Daughter #Marriage
    கும்பகோணம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர்.

    இவர்களது திருமணம் நேற்று கும்பகோணத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் உறவினர்கள் சிலருடன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

    பின்னர் மனோஜ்கிரண் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான்(மனோஜ்கிரண்), காடுவெட்டி குருவின் தங்கை மகன். நானும் விருத்தாம்பிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KaduvettiGuru #Daughter #Marriage

    வானூர் அருகே நள்ளிரவில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட காடுவெட்டி குரு சிலை அகற்றப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது கடைபேரிக்குப்பம். இந்த பகுதியில் பா.ம.க. கொடிக்கம்பம் உள்ளது. இதன் பக்கத்தில் 2 சிங்கங்கள் சிலை அமைப்பதற்கு பீடத்தை பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டினார்கள். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த பீடத்தை போலீசார் இடித்து அகற்றினர்.

    இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கடைப்பேரி குப்பத்தை சேர்ந்த பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் பா.ம.க.வினர் கொடிக் கம்பம் முன்பு திரண்டனர். இங்கு பள்ளம் தோண்டி 6 அடி உயரத்துக்கு கிரானைட் கற்கள் அமைத்தனர். அதில் மறைந்த வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மார்பளவு சிலையை வைத்தனர். அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, திருமணி, ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ் பெக்டர்கள் பரசுராமன், சுரேஷ் முருகன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ், வானூர் தாசில்தார் ஜோதிவேல் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். அனுமதி இல்லாமல் சிலை வைக்கக் கூடாது என்று கூறினர். இதனால் பா.ம.க. வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் சிலையை அகற்ற விட மாட்டோம் என கூறினர். அப்போது பா.ம.க. தொண்டர்கள் அன்பரசு, ரகுராஜ் ஆகிய 2 பேரும் திடீரென தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். சிலையை அகற்றினால் தற்கொலை செய்வோம் என கூறினர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் 2 பேரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினர்.

    அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்படும். நீங்கள் கலைந்து செல்லுங்கள் என கூறினர். ஆனால் சிலையை அகற்றவிடமாட்டோம் என கூறி பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் அங்கேயே கோ‌ஷங்கள் எழுப்பியவாறே நின்றனர்.

    போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் நாலாபுறமும் அலறியடித் துக் கொண்டு பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் சிதறி ஒடினர். பின்னர் சிலையை போலீசார் அகற்றினர்.

    போலீசார் தடியடி நடத்தியதில் கடைப் பேரிகுப்பத்தை சேர்ந்த முத்துலட்சுமி, அன்பரசன் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி மீனாட்சி புகார் செய்தார். இதையொட்டி முன்னாள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் முத்துக்குமரன் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    இதில் சிலம்பரசன் (வயது 24), மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். போலீசார் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஆண்கள் தலைமறைவாகி விட்டனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டில் உள்ளனர். அவர்களும் வெளியேவராமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். இதனால் அந்த கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடைபேரிக்குப்பம் புதுவை மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால் சேதுராப்பட்டு சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமாரசாமி தலைமையில் கரசூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கடை பேரிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru
    ஜெயங்கொண்டம்:

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru

    வன்னியர் சங்க தலைவர் குரு மரணமடைந்ததை தொடர்ந்து, அவருடைய உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் குரு மரணமடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு ரோட்டில் உள்ள அரசு பணிமனைக்கு சென்ற 3 அரசு பஸ்களை வழிமறித்த மர்மநபர்கள் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடினர்.

    இதேபோல் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு பஸ்சை பொன்னேரியிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை கல்லாத்தூரிலும் வழிமறித்த மர்ம நபர்கள் கண்ணாடிகளை உடைத்து விட்டு சென்றனர். திருச்சி-சிதம்பரம் சாலையில் சூரியமணலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும், ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே 2 பஸ்களின் கண்ணாடியையும், வாரியங்காவலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.

    ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரியலூரிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆண்டிமடம் கடைவீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளை எடுத்து சாலையின் குறுக்கே போட்டு, அதன்மேல் டயர்களை போட்டு எரித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் அந்த கும்பலை எச்சரித்தனர்.

    ஆனாலும் அந்த கும்பல் போலீசாரை கண்டுகொள்ளாமல் 4 ரோடு சந்திப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள போலீஸ் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தது. அங்கிருந்து அண்ணாசிலை வரை உள்ள வணிக வளாகங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது.

    தனியார் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், டீக்கடை பெஞ்ச், தள்ளுவண்டி போன்ற பொருட்களை உடைத்தும், உடைத்த பொருட்களை நடுரோட்டில் போட்டும் எரித்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக கனரக, இலகுரக வாகனங்கள், செல்லவில்லை. மேலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவங்களால் ஆண்டிமடம் பகுதி கலவர பூமி போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் நாட்டார் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 35), சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சரவணகுமார்( 28), அருள்பிரகாசம் (32), சிவகுமார் (30), ஜான்விக்டர் (31), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (33), பார்த்திபன் (34), பிரகாஷ் (29), மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


    இந்தநிலையில் ஜெ. குருவின் உடல் இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, தா.பழுர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன.

    ஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர். #KaduvettiGuru
    வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பா.ம.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குரு உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-



    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:- பா.ம.க.வின் முன்னணித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். காடுவெட்டி குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காடுவெட்டி குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பா.ம.க.வினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- பா.ம.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குருவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் துயரில் பங்குகொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெ.குரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்ததை கண்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். அவரது மறைவை நேரில் கண்டும், மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

    குருவின் மறைவுச் செய்தியை பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். எனது அதிர்ச்சி, வேதனை, சோகம் ஆகியவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 
    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
    பெரம்பலூர்:

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் உடைக்கப்பட்டன.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக முக்கிய பஜார்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே நேற்றிரவு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.

    பெரம்பலூரில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #Tamilnews
    பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். #KaduvettiGurudeath #VaikoMourning
    சென்னை:

    காடுவெட்டி குரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    வன்னியர் சங்கத் தலைவராகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தளகர்த்தராகவும திகழ்ந்த காடுவெட்டி குரு, சமூகநீதி காக்கும் போராளியாக வாழ்ந்தவர்; அரசியல் எல்லைகளைக் கடந்து என்னிடம் நட்பு பாராட்டிப் பழகியவர். அவர் உடல் நலம் இன்றி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உடனேயே, அங்கே சென்று சந்தித்தேன். அவருக்குச் சிகிச்சை தந்த மருத்துவர்களையும் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்லி வந்தேன்.

    இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டிய சகோதரர் காடுவெட்டி குரு மறைவினால், துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு, பா.ம.க. தோழர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.  #KaduvettiGurudeath #VaikoMourning
    காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து 9 மாவட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #PMK #KaduvettiGurudeath

    சென்னை:

    பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவருக்கு நீண்ட நாட்களாகவே நுரையீரல் பாதிப்பு இருந்தது. கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. நாளை உடல் தகனம் நடக்கிறது.

    ஜெ.குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் 2 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கடைகளும் அடைக்கப்பட்டன.

     


    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்கு 3 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

    பண்ருட்டி, புதுநகர், முதுநகர், ரெட்டிச்சாவடி, சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீதும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 பஸ்கள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் நெய்வேலியில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்சும், திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் சென்ற பஸ்சும், சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற பஸ்சும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.

    திண்டிவனத்தை அடுத்த காளை பகுதியில் சென்ற சென்ற பஸ் நள்ளிரவில் கல்வீசி உடைக்கப்பட்டது. செஞ்சியில் 3 பஸ்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பஸ்கள் சேதம் அடைந்தது.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அரியலூர், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பகுவிக்கப்பட்டனர்.

    பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன.

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தனியார் கம்பெனியில் இருந்து ஆட்கள் ஏற்றிச் சென்ற 3 பஸ்கள் மீது 6 பேர் கும்பல் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. அருகில் இருந்த 2 பேக்கரி கடைகள் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    சேலம் சீல நாயக்கன்பட்டி பைபாசில் சென்னையில் இருந்து கோவை சென்ற பஸ் உடைக்கப்பட்டது. டால்மியா அருகே பெங்களூர் சென்ற ஆம்னி பஸ்சும் கல்வீசி தாக்கப்பட்டது.

    மேச்சேரி, காடையாம்பட்டி, தீவட்டிபட்டி, ஆத்தூர் பகுதியில் 7 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. மொத்தம் 9 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் 9 பஸ்கள் உடைக்கப்பட்டன. காட்பாடியை அடுத்த லத்தேரி வழியாக சென்ற 2 பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

     


    வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு சென்ற அரசு பஸ் மீது மேல்விஷாரத்தில் கல்வீசப்பட்டது. ஆற்காட்டில் மட்டும் 3 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது.

    வாலாஜாவில் ஒரு பஸ்சும் அரக்கோணத்தில் ஒரு பஸ்சும் உடைக்கப்பட்டது. விரிஞ்சிபுரத்தில் ஒரு அரசு பஸ் மீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பஸ்கள் மீது கல் வீசி உடைக்கப்பட்டது. கலசப்பாக்கத்தில் ஒரு பஸ், வந்தவாசி மற்றும் அதனருகே உள்ள பொன்னூரில் 5 பஸ்கள், மங்கலத்தில் ஒரு பஸ், போளூரில் 1 பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    வேலூரில் இருந்து ஆரணி சென்ற தனியார் பஸ் அடுக்கம்பாறை அருகே கல்வீசி உடைக்கப்பட்டது. போளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு பஸ்சை மடக்கி சிலர் தாக்க முற்பட்டனர். போலீசார், அவர்களை சமரசம் செய்து தாக்குதலை தடுத்தனர்.

    வந்தவாசி பஜார் வீதி, மேல்மருவத்தூர் ரோட்டில் கடைகளை அடைக்குமாறு பா.ம.க.வினர் திரண்டு வந்து வியாபாரிகளிடம் கூறினர். இதையடுத்து வந்தவாசி நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆரணியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர் அருகே பத்தகப்பட்டி என்ற இடத்தில் அரசு டவுன் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    மயிலாடுதுறையில் வள்ளாலகாம் சிவபிரியா நகரில் இன்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தி ஓடி விட்டனர்.

    கும்பகோணம் சுவாமி மலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. திருவையாறு மெயின் ரோடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #PMK #KaduvettiGurudeath

    பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மரணத்தின் எதிரொலியாக, 20க்கு மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #PMK #KaduvettiGuru
    விழுப்புரம்:

    சென்னையில் நீரிழிவு நோயால் சிகிச்சை பெற்று வந்த பாமக தலைவர் காடு வெட்டி குரு, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதன் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேற்று இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூரில் இயங்கி வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் சேதமாகின.

    இதனால் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே, அந்தந்த மாவட்டங்களில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து கண்ணாடிகள் உடைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews 
    வன்னியர் சங்க தலைவரும், பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். #PMK #KaduvettiGuru
    சென்னை:

    பாமகவின் முன்னாள் எம் எல் ஏவாக இருந்தவர் குரு (57). இவர் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது சொந்த ஊர் காடுவெட்டி. சொந்த ஊரின் பெயரால் இவர் காடு வெட்டி குரு என அழைக்கப்பட்டார். 

    நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

    இவரது மறைவுக்கு பாமக தலைவர் ராமதாஸ், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பாமக சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #PMK #KaduvettiGuru
    ×