search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shops closed"

    • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
    • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும்.
    • விவசாய சங்கத்தின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாளவாடி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

    தாளவாடி அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் குட்டைகள் வறண்டு போய் உள்ளன.

    இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் உணவைத் தேடி காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.

    இந்த நேரங்களில் சில சமயம் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து இரவு நேரம் காவலில் இருக்கும் விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாக்கையா (வயது 62) என்பவர் தனது மக்காச்சோளம் காட்டில் இரவு நேர காவலில் இருந்தபோது அவரது தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மாக்கையாவை மிதித்து கொன்றது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி விவசாயிகள் ஒன்று திரண்டு விவசாயி மாக்கையா உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பது போல் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறும் இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்திருந்தது.

    விவசாய சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தாளவாடி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓசூர் ரோடு, அண்ணா நகர், சாம்ராஜ்நகர் ரோடு, சக்தி ரோடு, தலமலை ரோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    இருப்பினும் வழக்கம் போல் மருந்தகங்கள், ஆஸ்ப த்திரிகள் செயல்பட்டன. அதே போன்று பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL1, FL2, FL3, FL3A, FL3AA, Fl4A உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களையும் மேற்கண்ட தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது தொடர்பாக நேற்று மாலை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் காரணமாக அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது தொடர்பாக நேற்று மாலை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் காரணமாக அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

    இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட கடைகள் இன்றும் 2-வது நாளாக அடைக்கப்பட்டுள்ளது.கலவரம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் கடையை திறக்காமல் உள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு பதட்டமும் உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அனைத்து சந்திப்புகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் 3 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    கோவை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் ஒரு சில இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    இந்த நிலையில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. கோவை காந்திரபுரத்தில் இருந்து சித்ராவுக்கு தனியார் டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் இன்று காலை 10.30 மணியளவில் பெண்கள் பாலிடெக்னிக் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பஸ்சின் முன் பக்க மற்றும் பின் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் நடைபெற்று சற்று நேரத்தில் ஒண்டிப்புதூரில் இருந்து மணியக்காரன் பாளையத்திற்கு தனியார் பஸ் வந்தது.

    இந்த பஸ் மணீஸ் பள்ளி சந்திப்பு பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் இந்த பஸ் மீதும் கல் வீசினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு கல் வீச்சு சம்பவத்திலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பஸ்கள் கல் வீசப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? அதில் கல் வீசியவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் போளூவா பட்டி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.

    இது குறித்து அரசு பஸ் டிரைவர் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கோவையில் 3 பஸ்கள் மீது கல் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை உள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பத்தூர், ஆம்பூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடின. #AtalBihariVajpayee #RIPVajpayee
    திருப்பத்தூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலங்கள் திறக்கபடவில்லை, மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது.

    திருப்பத்தூரில் வாஜ்வாய் மறைவையொட்டி கடைகளை அடைக்கபட்டன. கிருஷ்ணகிரி மெயின்ரோடு, மெயின் பஜார், பஸ் நிலையங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

    ஆம்பூர் பஜார் வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடியது. இதனால் திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் இயல்பு நிலை பதிக்கப்பட்டது.

    வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, அண்ணாசாலை, ஆற்காடு ரோடு, காட்பாடி பகுதிகளில் வழக்கம் போல கடைகள் திறந்திருந்தன பஸ் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி குமரியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    நாகர்கோவில்:

    முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் நேற்று மரணம் அடைந்தார்.

    வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சியினரும், பொதுமக்களும் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்திலும் அவரது படத்துக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வாஜ்பாய் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில், கோட்டார், வடசேரி, மீனாட்சிபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    காலையில் சில கடைகள் திறந்து இருந்தன. பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் லாட்ஜூகளில் முடங்கி கிடந்தனர். சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    தக்கலை, பத்மனாபபுரம், குலசேகரம், திருவட்டார், இரணியல் போன்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. நித்திரவிளை போன்ற பகுதிகளில் சில கடைகள் திறந்திருந்தன.

    வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து அசம் பாவிதங்களை தடுக்க குமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் இரவு தங்கும் ஸ்டேபஸ்களை டெப்போவுக்கு கொண்டுச் செல்ல உத்தரவிடப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் இரவு டெப்போவுக்கு திரும்பின. ராணித்தோட்டம், விவேகானந்தபுரம் உள்பட 11 அரசு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக காலை 4.30 மணி முதல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்ளுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று அதிகாலையில் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் 5 என்டு டூ என்டு பஸ்களையும், மதுரைக்கு ஒரு பஸ்சையும் காலை 6 மணிக்கு இயக்கினார்கள். இந்த பஸ்களில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இதே போல 6 பஸ்களாக இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. கிராம புறங்களுக்கும் பஸ்கள் சென்றன. வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே கருங்கல் பகுதியில் 3 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கருங்கல் அருகே பாலூர் பகுதியில் மேல்மிடாலத்தில் இருந்து கருங்கல் நோக்கிச் சென்ற அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.



    இதே போல ஐரேனியபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசினார்கள். மூசாரி பகுதியில் குளச்சலில் இருந்து திருவட்டார் நோக்கி அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    பஸ்கள் அடுத்தடுத்து கல் வீசி உடைக்கப்பட்டதையடுத்து கருங்கல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
    பெரம்பலூர்:

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் உடைக்கப்பட்டன.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக முக்கிய பஜார்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே நேற்றிரவு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.

    பெரம்பலூரில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #Tamilnews
    ×