search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gobichettipalayam"

    • சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார்.
    • இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார். மேலும் கோபிசெட்டிபாளையம் வருகிறேன் என்றும் கூறி உள்ளார். அதற்கு அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்து சரண்யாவை கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்கு வர சொல்லி உள்ளார். மேலும் அங்கிருந்து உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

    இதை நம்பி இளம்பெண் சரண்யா கேரளாவில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்தார். நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் காத்திருந்தும் முகநூல் காதலன் வரவில்லை. இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் இடுக்கி மாவட்டம் பெருமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் கோபிசெட்டிபாளையம் போலீசார் இளம்பெண் சரண்யாவை ஒப்படைத்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாதவர்களுடன் பழகி இது போல் ஏமாற வேண்டாம் என்று சரண்யாவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரண்யாவை திருமணம் செய்ய கோபிசெட்டிபாளையம் வரவழைத்த அந்த முகநூல் காதலன் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டி பாளையத்தில் இந்திய மருத்துவ சங்க கோபி கிளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • இந்த மராத்தான் ஓட்டத்தில் 10 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கோபி, ஜூன். 26-

    கோபிசெட்டி பாளையத்தில் இந்திய மருத்துவ சங்க கோபி கிளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மராத்தான் போட்டி நடைபெற்றது.

    கரட்டடிபாளையத்தில் தொடங்கிய மராத்தான் போட்டியை கோபி டி.எஸ்.பி ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கரட்டடிபாளையத்தில் தொடங்கி லக்கம்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி, கச்சேரிமேடு, பஸ் நிலையம், மேட்டுவலுவு, முருகன்புதூர், சாணார்பதி வழியாக பாரியூர் சென்று முருகன்புதூரில் உள்ள பி.கே.ஆர். மகளிர் கல்லூரி வரை நடைபெற்றது.

    இந்த மராத்தான் ஓட்டத்தில் 10 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    இந்த மராத்தான் போட்டியில் மாணவ மாணவிகளுக்கான பெண்கள் பிரிவில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடி கோபி கலை அறிவியில் கல்லூரியை சேர்ந்த திவ்யா முதல் இடமும், பி.கே.ஆர் கல்லூரியை சேர்ந்த மாணவி சவிதா 2-ம் இடமும், கோவை மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுஸ்ரீ என்ற மாணவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    5 கிலோ மீட்டர் பிரிவில் நகலூர் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தருணா முதல் இடமும், பவித்ரா 2-ம் இடமும், ரீனா என்ற மாணவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    ஆண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டர் பிரிவில் கோபி கலை அறிவியியல் கல்லூரியை சேர்ந்த நிசாந்குமார் மற்றும் மாதவன் முதல் 2 இடங்களையும், நகலூர் ஸ்போர்ட் அகாடமியை சேர்ந்த மாணவர் சிவா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    அதேபோல 5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் கோபிகலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆகாஷ் முதல் இடமும், எடப்பாடி ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த தேசிகன் 2-ம் இடத்தையும், ஈரோடு இந்திய அத்தலடிக் கிளப்பை சேர்ந்த கவுதம் 3-ம் இடத்ததையும் பிடித்தனர்.

    பொது பிரிவில் 10 கிலோ மீட்டர் பிரிவில் ஈரோடு பகுதியை சேர்ந்த ரகுபதி, யசரப்த் ஆகியோர் முதல் 2 இடங்களையும், தவசியப்பன் 3-ம் இடத்தையும் பிடித்தனர்,

    5 கிலோ மீட்டர் பிரிவில் ஈரோடு பகுதிகளை சேர்ந்த சீனிவாசன், சசிகுமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கோபி ஜெயிலில் அடைக்கப்பட்ட தொழிலாளி இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உள்ளார்.
    கோபி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நாகம்மா.

    இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 14-1-2017 அன்று இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் நாகம்மா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவண்ணாவை கைது செய்தார்கள்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு பசுவண்ணாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    அதன்பேரில் போலீசார் பசுவண்ணாவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு, பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஜெயிலில் இருந்த போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுவண்ணா பரிதாபமாக இறந்தார்.

    கைதியான பசுவண்ணா இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் இன்று கோபிக்கு வருகிறார்.

    பசுவண்ணாவுக்கு எப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது? எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்? எப்போது இறந்தார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் யார்? என்பது தொடர்பாக அவர் விசாரணை நடத்த இருக்கிறார். #tamilnews
    ×