search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Woman"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது கடந்த 1-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானில் இஸ்லாமிய புரட்சி காவல்படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் பலியாகினர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஈரான், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட சரக்கு கப்பலை கடந்த 13-ந்தேதி சிறைபிடித்தது. ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் வைத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையால் கப்பல் சிறை பிடிக்கப்பட்டது.

    அந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக்கோரி ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியிடம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    அதன்பேரில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் தவித்துவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்தினருடன் பேசினார்.

    இந்நிலையில் அதே கப்பலில் சிக்கியுள்ள கேரள மாநில பெண் ஒருவரும் தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூர் வெளுத்தூர் பகுதியை சேர்ந்த பிஜூ ஆபிரகாம் என்பவரின் மகள் ஆன் டெஸ்சா ஜோசப்.

    இவர் அந்த கப்பலில் கடந்த 9 மாதங்களாக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிக்கொண்டார். ஆன் டெஸ்சாவுடன் அவரது குடும்பத்தினர் கடந்த 12-ந்தேதி பேசியுள்ளனர். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர்.

    இந்தநிலையில் ஆன் டெஸ்சா தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். கப்பலை சிறைபிடித்திருந்தவர்கள் அனுமதித்ததன் பேரில் அவர் தனது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

    அவர் கப்பலில் இருக்கும் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், உணவு சரியாக அளிக்கப்படுவதாகவும், ஆகவே பயப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அதன்பிறகே ஆன் டெஸ்சா குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.

    ஆன் டெஸ்சா பாதுகாப்பாக இருப்பதாக அவர் பணிபுரிந்த நிறுவன அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய உள்துறை வட்டாரங்கள் ஆன் டெஸ்சா குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தான் தயாரிக்கும் சாக்லேட் கவர்களில் வித்தியாசமாக வேட்பாளர்களின் படங்களை பிரிண்ட் செய்து வினியோகிக்கலாம் என நினைத்தார்.
    • பல மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    தேர்தலில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பிரசாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவது வழக்கம். பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாக்காளர்களின் கால்களில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம்.

    அது மக்களை கவரும் விதத்திலும் அமைந்துவிடும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்து வெளியிட்டுள்ளார். இது கேரள மாநில வேட்பாளர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் காரசேரி பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா கதீஜா. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஹோம் மேட் சாக்லேட் கடையை தொடங்கினார். தான் தயாரிக்கும் சாக்லேட்டுகளுக்கான கவர்களையும் அவரே தயாரித்து பேக் செய்து விற்பனை செய்கிறார்.

    தற்போது கேரளாவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ள ஆஷிகா கதீஜா திட்டமிட்டார். தான் தயாரிக்கும் சாக்லேட் கவர்களில் வித்தியாசமாக வேட்பாளர்களின் படங்களை பிரிண்ட் செய்து வினியோகிக்கலாம் என நினைத்தார்.

    அதற்கு யாரை நாடுவது என்று யோசித்தபோது, கேரள மாநிலத்தில் வடகரை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஷாபி பரம்பில் தொகுதியில் வாக்காளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்ததை அறிந்தார்.

    தனது திட்டத்துக்கு அவரை பயன்படுத்த ஆஷிகா கதீஜா முடிவு செய்தார். அதுதொடர்பாக ஷாபி பரம்பில் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டார். அவர்களும் இது வித்தியாசமாக இருப்பதை அறிந்து, அதற்கு சம்மதித்தனர்.

    இதையடுத்து ஷாபி பரம்பில் படத்தை பிரிண்ட் செய்த கவர்களில் தான் தயாரிக்கும் ஹோம் மேட் சாக்லேட்களை வைத்து கொடுத்தார். அதனை பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் ஏராளமான சாக்லேட்டுகளை ஆஷிகா கதீஜாவிடம் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.

    இதேபோல் முன்னாள் மந்திரியும், தற்போதைய மட்டனூர் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான சைலஜாவும், தனது படங்கள் அடங்கிய சாக்லேட்டுகள் தயாரிக்க ஆஷிகா கதீஜாவிடம் ஆர்டர் கொடுத்தார். இந்த வித்தியாசமான முறை கேரள மாநில வேட்பாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் ஷாபி பரம்பில் மற்றும் சைலஜா ஆகியோரின் படங்கள் அடங்கிய சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வேட்பாளர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்கும் அதுபோன்று தயாரித்து கொடுக்குமாறு ஆஷிகா கதீஜாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    அவருக்கு பல மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

    • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர்.
    • திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார்.

    புதுடெல்லி:

    மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) 10 ஆண்டு முயற்சிக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை தயாரித்துள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

    திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ் மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (எம்.ஐ.ஆர்.வி) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டது.

    அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை விண்வெளியில் (வளிமண்டலத்துக்குமேல்) செலுத்தப்படும். இது பின்னர் அங்கிருந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வந்து தரையில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது தனித்தனியாகவும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும்.

    இது 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்தது. இந்த சோதனையின் மூலம், எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்ப ஏவுகணைகள் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். அந்த குழுவை வழிநடத்தியது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீனா ராணி ஆவார். அவர் டி.ஆர்.டி.ஓ.வின் ஏஸ் லேப் ஏ.எஸ்.எல்-ன் இணை இயக்குநராகவும் உள்ளார்.

    திருவனந்தபுரம் சி.இ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் என்ஜினீயரிங் படித்த இவர், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைகளுக்கு பிறகு 1999-ம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ.வில் புதிதாக சேர்ந்தார்.

    அன்றிலிருந்து நாட்டின் அக்னி ஏவுகணை திட்டத்திற்காக பணியாற்றி வருகிறார். அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    தேசத்தின் எல்லைகளை ஏவுகணைகள் பாதுகாப்பதால் அக்னி ஏவுகணை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் ஏவுகணை ஏவுதலுக்கு தயாரானபோது எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது போல் இருந்தது.

    ஆனால் பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. எனது மற்றும் எனது சகோதரியின் வாழ்வில் என் அம்மா தான் உண்மையான தூண்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு அவரது தாயாரால் வளர்க்கப்பட்டவர். அவரது கணவரும் டி.ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்தவர். ஷீனா ராணி கடந்த 2016-ம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார்.

    • கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
    • பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

    இந்த நிலையில் கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அந்த பெண் கொல்லம் அருகே பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது 2 விண்ணப்பங்களிலும் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

    அதாவது அந்த பெண் பத்மநாபபுரம் புன்னாலை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி விண்ணப்பம் செய்திருக்கிறார். அதே பெண் புனலூரில் உள்ள சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13-ந்தேதி) புனலூரை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய விரும்புவதாக விண்ணப்பித்திருந்தார்.

    திருமண விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், ஒரு பெண் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்திருந்த விவரம் தெரியவந்தது. இதனை கண்டறிந்த புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    2 சார் பதிவாளர் அலுவலகங்களில், வெவ்வேறு ஆண்களின் பெயரை குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து விவரம் கேட்பதற்காக அந்த பெண் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி அந்த பெண் புனலூரை சேர்ந்த வாலிபருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார்.

    அந்த பெண், புனலூரை சேர்ந்த வாலிபருடன் நீண்ட நாட்களாக 'லிவிங் டுகெதர்' உறவில் இருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த வாலிபரிடம் இருந்து பிரிந்து தாயுடன் சென்று தங்கிவிட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபர் ஒரு காகிதத்தில் தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை என்று பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த பெண் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள வாலிபர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் வகையில் பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வருமாறு தெரிவித்துள்ளனர்.

    • சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார்.
    • இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெரும்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகள் சரண்யா (26). பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 2 1/2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து சரண்யா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காதலனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறி உள்ளார். மேலும் கோபிசெட்டிபாளையம் வருகிறேன் என்றும் கூறி உள்ளார். அதற்கு அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்து சரண்யாவை கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்துக்கு வர சொல்லி உள்ளார். மேலும் அங்கிருந்து உன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.

    இதை நம்பி இளம்பெண் சரண்யா கேரளாவில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்தார். நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் காத்திருந்தும் முகநூல் காதலன் வரவில்லை. இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் தவித்து கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் இடுக்கி மாவட்டம் பெருமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் கோபிசெட்டிபாளையம் போலீசார் இளம்பெண் சரண்யாவை ஒப்படைத்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாதவர்களுடன் பழகி இது போல் ஏமாற வேண்டாம் என்று சரண்யாவுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரண்யாவை திருமணம் செய்ய கோபிசெட்டிபாளையம் வரவழைத்த அந்த முகநூல் காதலன் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த 36 வயது இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple #KeralaWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுயுக கேரளம் என்ற முகநூல் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் உதவியுடன் சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் முகநூலில், ‘கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு(வயது 36) கடந்த 8-ந் தேதி காலை 7.30 மணியளவில் இருமுடி கட்டுடன் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று நெய்யாபிஷேகம் உள்பட பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து மஞ்சு கூறும்போது, ‘நான் கடந்த 8-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தேன். சபரிமலை செல்வதற்கு போலீசில் அனுமதி எதுவும் பெறவில்லை. ஆதலால் போலீசாரின் பாதுகாப்பு எதுவும் இன்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். சாமி தரிசனம் செய்ய எனக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சி விரைவில் வெளியிடப்படும்’ என்றார். ஆனால் இந்த தகவலை கேரள அரசோ, போலீஸ் துறையோ உறுதி செய்யவில்லை.  #SabarimalaTemple #KeralaWomen
    ×