search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellaiyan"

    கோக்-பெப்சி உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை ஆகஸ்ட்-15-ந்தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது. மே-5 ந்தேதி தூத்துக்குடியில் வணிகர் தின மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி. பாராட்டுகள் தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    வணிகர் சங்க பேரவைக்கு புதிய மாநில பொதுச்செயலாளராக சி.எல். செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் மாநில தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-



    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட்டு இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை நிரூபித்து உள்ளார்கள். வாக்களித்த மக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் பெருமையை காப்பாற்றி இருக்கிற நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை நமது தொழில் உரிமைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெற்று வருபவர்கள் காப்பாற்றுவார்களா? என்றால் நிச்சயமாக காப்பாற்ற மாட்டார்கள். எல்லோரும் வெளிநாட்டுக்குத்தான் துணையாக இருப்பார்கள்.

    இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அன்னிய தயாரிப்பு பொருட்களை தவிர்த்து நம் நாட்டு தயாரிப்பு பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு சுதேசி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

    வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘‘சுதேசி பொருட்களைத்தான் வாங்க வேண்டும்’’ என்ற இருசக்கர வாகனத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் தமிழகம் முழுவதும் இருந்து தொடங்கி திருச்சி மலைக்கோட்டைக்கு ஆகஸ்ட் 15-ந்தேதி வந்தடைகிறது.

    அங்கு ‘சுதேசி பிரகடனம்’ செய்ய இருக்கிறோம். அன்னிய குளிர்பானங்களான கோக்-பெப்சியையும் அதன் இதர தயாரிப்புகளையும் கடைகளில் விற்காமல் புறக்கணிக்க வேண்டும். அன்று முதல் அந்நிய பொருட்களின் தயாரிப்புகளை கடைகளில் வியாபாரிகள் முன்னிலை படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் ஏற்படும் அந்நிய மோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    நம் நாட்டு தயாரிப்பு சுதேசி பொருட்களை தான் கடைகளில் விற்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து சில்லரை வியாபாரிகளும் வணிகர் சங்க பேரவையின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்த முன்வர வேண்டுகிறேன்.

    இவ்வாறு த.வெள்ளையன் பேசினார்.
    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை என வெள்ளையன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #vellaiyan

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் ஈரோட்டில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வணிகர்கள் மிகுந்த வலிமையோடு செயல்பட வேண்டிய காலம் இது அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் போன்றவை சில்லரை வணிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது சில்லறை வணிகர்கள் கடைப் பிடிக்க முடியாத பல்வேறு சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது சில்லறை வணிகர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் போட்டி போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்பு ஆங்கிலேயர்கள் எவ்வாறு நமது நாட்டிற்குள் நுழைந்தார்களோ அதேபோன்று அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் வந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது இதை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இப்போதாவது பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்.

    நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கொடுமையானது இது புதிய முறை கொள்ளை ஆகும் எனவே மத்திய அரசு இதை கைவிட வேண்டும் லாரி உரிமையாளர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு வெள்ளையன் கூறினார்.  #vellaiyan

    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் ‘பிலிப்கார்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ‘ஆன்-லைன்’ வணிகத்தை ஊக்குவித்து, சில்லரை வணிகத்தை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் சில்லரை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.

    ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர் கள் குறைந்த விலையில் பொருட் களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகையில் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லரை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருட் களை விற்பனை செய்யும் உரிமையை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடு.

    எனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். பொருட்களில் அதன் எம்.ஆர்.பி. அச்சிடப்படுவது போல அதிகபட்ச உற்பத்தி அடக்க விலையும் அச்சிடப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு என்பதை குறிக்கும் வகையில் தனி இலச்சினையோ அல்லது முத்திரையோ அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வணிகம் உயரும்.

    வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×