search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vajpayee death"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் மரணம் அடைந்தார். அவரது அஸ்தியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 26-ந்தேதி பொன் ராதாகிருஷ்ணன் கரைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
    கன்னியாகுமரி:

    பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டு இந்தியாவின் புண்ணிய தலங்களில் கரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  உள்ளது. வாய்பாய் அஸ்தி அடங்கிய 6 கலசங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் கரைக்கப்படுகிறது. வாஜ்பாய் அஸ்தி கலசம் நாளை மறுநாள்(26-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்படுகிறது.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முக்கடல் சங்கமத்தில் வாஜ்பாய் அஸ்தியை கரைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் உள்பட திரளானோர் பங்கேற்கிறார்கள்.

    கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் குமரி மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் வாஜ்பாய் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த பணி இன்று காலை முழுமை அடைந்தது. புதுக்கிராமத்தைச் சேர்ந்த சிற்பி சுரேஷ் 10 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்து உள்ளார்.  
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கடந்த 17-ந் தேதி கோவையில் 3 தனியார் பஸ்களை உடைத்த 6 வாலிபர்களை கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் கைது செய்தனர். #vajpayee
    கோவை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கடந்த 17-ந் தேதி கோவையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின.

    இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சித்ரா சந்திப்பு நோக்கி சென்ற பஸ், ஒண்டிப் புதூரில் இருந்து மணியகாரம்பாளையம் நோக்கி வந்த பஸ் ஆகிய இரண்டு தனியார் பஸ்களை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து மர்ம நபர் கள் கல் வீசி உடைத்தனர்.

    இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பீளமேடு பகுதியிலும் ஒரு தனியார் பஸ் கண்ணாடியை மர்மநபர்கள் அடித்து உடைத்தனர். அடுத்தடுத்து 3 தனியார் பஸ்கள் உடைக்கப்பட்டது நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்து பஸ்கள் மீது கற்களை வீசியும், கம்பியால் பஸ்சின் பின்புற கண்ணாடியை அடித்து உடைப்பதும் தெரிய வந்தது.

    இந்த காமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் பஸ்களை உடைத்த வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதனடிப்படையில் பஸ்களை உடைத்ததாக கோவை கணபதி பகுதியை சேர்ந்த தீனதயாளன்(26), மூர்த்தி(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கோகுல்(22), பிரதீப்(22), சவுரிபாளையத்தை சேர்ந்த சதீஷ் குமார் (24), அசோக்குமார்(21) ஆகிய 6 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் தீனதயாளன் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான 6 பேரும் நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 6 பேரையும் வருகிற 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #vajpayee
    பெரம்பலூரில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. #vajpayeedeath
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் காந்தி சிலை முன்பு தொடங்கிய ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குபேட்டை, ரோவர் ஆர்ச், பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முடிவடைந்தது. 

    பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாய் உருவப்படத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் கோட்ட பொறுப்பாளரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஸ்ரீராமகிருஷ்ணா சிவசுப்ரமணியம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    இதேபோல் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. நகர செயலாளர் ராமர் தலைமையில், ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் அண்ணாசிலையில் இருந்து தொடங்கி கடைவீதி, நான்கு ரோடு வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலையை வந்தடைந்தது. #vajpayeedeath
    முன்னாள் பிரதமர் வாஜ் பாய் மறைவையொட்டி குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் 11 இடங்களில் மவுன ஊர்வலம் நடந்தது. #vajpayeedeath
    நாகர்கோவில்:

    முன்னாள் பிரதமர் வாஜ் பாய் மறைவையொட்டி குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் 11 இடங்களில் மவுன ஊர்வலம் நடந்தது. நாகர்கோவில் வடசேரியில் நடந்த மவுன ஊர்வலத்திற்கு நகர தலைவர் நாக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் மீனா தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட பார்வையாளர் தேவ், மாவட்ட பொருளாளர் தர்மலிங்க உடையார் மற்றும் நிர்வாகிகள் முத்து ராமன், ராஜன், ராகவன், சிவலிங்கம், ஜெயச்சந்திரன், முருகன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடசேரியில் இருந்து தொடங்கிய மவுன ஊர்வலம் மணி மேடை வழியாக வேப்ப மூட்டில் முடிவடைந்தது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பில் வழுக்கம்பாறையில் இருந்து சுசீந்திரம் வரையிலும், மேல்புறம் ஒன்றியம் சார்பில் புன்னியம் - அருமனை வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது. முஞ்சிறை ஒன்றியத்தில் புதுக்கடை சந்திப்பு முதல் முஞ்சிறை வரையிலும், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் கணபதிபுரம் சந்திப்பில் இருந்து ராஜாக்கமங்கலம் வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது.
    குருந்தன்கோடு ஒன்றியத்தில் திங்கள்சந்தையிலும், கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் பாலூர் சந்திப்பு முதல் கருங்கல் வரையிலும், தக்கலையில் கொல்லன் விளை பார்த்தசாரதி கோவி லில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது.

    திருவட்டார் ஒன்றியம் சார்பில் குலசேகரத்திலும், தோவாளை ஒன்றியம் சார்பில் பூதப்பாண்டியிலும் மவுன ஊர்வலம் நடந்தது. களியக்காவிளை சந்திப்பில் இருந்து படந்தாலுமூடு வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். #vajpayeedeath
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் 3 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    கோவை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் ஒரு சில இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    இந்த நிலையில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. கோவை காந்திரபுரத்தில் இருந்து சித்ராவுக்கு தனியார் டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் இன்று காலை 10.30 மணியளவில் பெண்கள் பாலிடெக்னிக் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பஸ்சின் முன் பக்க மற்றும் பின் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் நடைபெற்று சற்று நேரத்தில் ஒண்டிப்புதூரில் இருந்து மணியக்காரன் பாளையத்திற்கு தனியார் பஸ் வந்தது.

    இந்த பஸ் மணீஸ் பள்ளி சந்திப்பு பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் இந்த பஸ் மீதும் கல் வீசினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு கல் வீச்சு சம்பவத்திலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பஸ்கள் கல் வீசப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? அதில் கல் வீசியவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் போளூவா பட்டி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.

    இது குறித்து அரசு பஸ் டிரைவர் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கோவையில் 3 பஸ்கள் மீது கல் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை உள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பத்தூர், ஆம்பூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடின. #AtalBihariVajpayee #RIPVajpayee
    திருப்பத்தூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலங்கள் திறக்கபடவில்லை, மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது.

    திருப்பத்தூரில் வாஜ்வாய் மறைவையொட்டி கடைகளை அடைக்கபட்டன. கிருஷ்ணகிரி மெயின்ரோடு, மெயின் பஜார், பஸ் நிலையங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

    ஆம்பூர் பஜார் வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடியது. இதனால் திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் இயல்பு நிலை பதிக்கப்பட்டது.

    வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, அண்ணாசாலை, ஆற்காடு ரோடு, காட்பாடி பகுதிகளில் வழக்கம் போல கடைகள் திறந்திருந்தன பஸ் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி குமரியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    நாகர்கோவில்:

    முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் நேற்று மரணம் அடைந்தார்.

    வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சியினரும், பொதுமக்களும் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்திலும் அவரது படத்துக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வாஜ்பாய் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில், கோட்டார், வடசேரி, மீனாட்சிபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    காலையில் சில கடைகள் திறந்து இருந்தன. பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் லாட்ஜூகளில் முடங்கி கிடந்தனர். சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    தக்கலை, பத்மனாபபுரம், குலசேகரம், திருவட்டார், இரணியல் போன்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. நித்திரவிளை போன்ற பகுதிகளில் சில கடைகள் திறந்திருந்தன.

    வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து அசம் பாவிதங்களை தடுக்க குமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் இரவு தங்கும் ஸ்டேபஸ்களை டெப்போவுக்கு கொண்டுச் செல்ல உத்தரவிடப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் இரவு டெப்போவுக்கு திரும்பின. ராணித்தோட்டம், விவேகானந்தபுரம் உள்பட 11 அரசு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக காலை 4.30 மணி முதல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்ளுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று அதிகாலையில் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் 5 என்டு டூ என்டு பஸ்களையும், மதுரைக்கு ஒரு பஸ்சையும் காலை 6 மணிக்கு இயக்கினார்கள். இந்த பஸ்களில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இதே போல 6 பஸ்களாக இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. கிராம புறங்களுக்கும் பஸ்கள் சென்றன. வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே கருங்கல் பகுதியில் 3 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கருங்கல் அருகே பாலூர் பகுதியில் மேல்மிடாலத்தில் இருந்து கருங்கல் நோக்கிச் சென்ற அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.



    இதே போல ஐரேனியபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசினார்கள். மூசாரி பகுதியில் குளச்சலில் இருந்து திருவட்டார் நோக்கி அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    பஸ்கள் அடுத்தடுத்து கல் வீசி உடைக்கப்பட்டதையடுத்து கருங்கல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth
    உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்,

    முன்னதாக நேற்று முதல் அவரது உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வாஜ்பாய் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வாஜ்பாயின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தெரிவித்திருப்பதாவது,

    சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது, அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth 

    ×