என் மலர்
நீங்கள் தேடியது "வாஜ்பாய் மறைவு"
பழனி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய அஸ்தி பல்வேறு புண்ணிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக பழனிக்கு வாஜ்பாய் அஸ்தி இன்று காலை கொண்டு வரப்பட்டது.
பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாஜ்பாய் படத்துக்கு முன்பாக அஸ்தி வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய பிறகு பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, செம்பட்டி, திண்டுக்கல் மற்றும் தேனி வழியாக கொண்டு செல்லப்பட்டு நாளை மதுரை வைகை ஆற்றில் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகன் நமிதா கவுல் பட்டாச்சார்யா தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தார்.
வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். எனவே, நமிதா கவுலை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.
பொதுவாக இந்துக்களின் மரபுப்படி பெற்றோரின் சிதைக்கு மகன் தீ மூட்ட வேண்டும். அப்படிஇல்லாத பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் மகன் உறவு கொண்ட ஒரு ஆண் தீ மூட்ட வேண்டும்.பெண்கள் தீ மூட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை.
வாஜ்பாய் குடும்பத்திலும் இதே நடைமுறைதான் இருந்து வந்தது. இறந்தவருடைய மகன் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருந்து வர முடியாத நிலை இருந்தாலும், ஆண் வாரிசு இல்லை என்றாலும் உறவினரில் ஒரு ஆண்தான் தீ மூட்ட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளனர்.
ஆனால், வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா கவுல் தீ மூட்டினார். இது, பாரம்பரிய பழக்கத்தை மீறும் செயல் என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனாலும், நமிதா கவுல் செய்தது சரியானது என்று பல பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
டெல்லியை சேர்ந்த பேராசிரியை கியா சவுத்ரி கூறும்போது, பெண்களை சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பது, இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்காதது போன்ற பழக்கங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.
எங்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லை. எனது தாயார் இறந்த போது நான் தான் தீ மூட்டினேன். அடுத்து எனது தந்தைக்கும் நான் அதை செய்வேன்.
நான் அவர்களுக்கு ஒரே மகள். என்னை அவர்கள் ஒரு ஆண் மகன் போலவே வளர்த்தார்கள். ஆண் மகன் போன்ற கடமையை நான் செய்கிறேன் என்று கூறினார்.
மகள்களையும் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பெண்கள் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.
கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி மதுநாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
அப்போது மதுநாயரின் விருப்பப்படி அவரது மகள்கள் தான் சிதைக்கு தீ மூட்டினர். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மகள்கள் தீ மூட்டினால் இறந்தவர் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்று அவர்கள் வாதிட்டார்கள்.
மராட்டிய மாநிலம் குபாரி என்ற இடத்தில் இறந்தவர் ஒருவருக்கு அவரது மகள்கள் தீ மூட்ட முயற்சித்தனர். அப்போது உறவினர்கள் அவர்களை தள்ளி விட்டு விட்டு உறவினரில் ஒரு ஆண் சிதைக்கு தீ மூட்டினார்.
இது சம்பந்தமாக அந்த பெண்கள் கூறும்போது, வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியதை நாங்கள் பார்த்தோம். இது, பெண்களுக்கு கிடைத்த உரிமையாக கருதுகிறோம் என்று கூறினார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் இறந்த ஒருவருக்கு அவரது மகள் தீ வைத்ததற்காக கிராம பஞ்சாயத்தார் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு யாரும் உணவு மற்றும் எந்த பொருளும் வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
மராட்டிய பாரதிய ஜனதா தலைவர கோபிநாத் முண்டே 2014-ல் மரணம் அடைந்தார். அப்போது கூட அவரது மகள் பங்கஜ் முண்டேதான் சிதைக்கு தீ மூட்டியது குறிப்பிடத்தக்கது.
அதே போல் வாஜ்பாய் உடலுக்கு நமிதா கவுல் தீ மூட்டி பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டி உள்ளார்.
இதற்கிடையே வாஜ்பாய் அஸ்தியை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வாஜ்பாய் குடும்ப பூசாரிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
வாஜ்பாயின் பூர்வீக ஊர் பதேஸ்வர் ஆகும். ஆனால், வாஜ்பாய் குடும்பத்தினர் நீண்ட காலமாக குவாலியரில் வசித்து வந்தனர். அங்கு தான் வாஜ்பாய் பிறந்தார்.
இப்போது பதேஸ்வர் மற்றும் குவாலியரில் இருந்து 3 பூசாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்தான் வாஜ்பாய் அஸ்திக்கு சடங்கு செய்யும் அதிகாரம் கொண்டவன் என்று வாதிட்டு வருகிறார்கள்.
இது சம்பந்தமாக கங்கா சபா என்ற அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.


ஹரித்வாரில் கரைக்கப்படுவது போல் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளிலும் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி கரைக்கடவுள்ளது. அனைத்து மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. தலைமையகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் வைக்கப்படுகிறது. மாநில, மாவட்ட, பஞ்சாயத்துகள் அளவில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை கூட்டங்களை பா.ஜ.கவினர் நடத்துகின்றனர்.
நாளை டெல்லியில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு வாஜ்பாயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி பிரார்த்தனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யாநாத் மற்றும் வாஜ்பாயின் உறவினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவரது அஸ்தி கோமதி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. #AtalBihariVajpayee #RIPVajpayee #Vajpayeeashes #Haridwar
ஈடு, இணையற்ற பேச்சாளர், அரிதான நகைச்சுவை உணர்விலிருந்து மிகஉயர்ந்த தொலைநோக்குக்கு எளிதாக மடைமாற்றம் செய்துகொள்பவராகவும், மக்களோடு இயல்பாக தொடர்புகொள்ளும் அரிய திறனோடும், அவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு ஊக்கம் தருபவராகவும், உயரிய கருத்துக்கு கொண்டு செல்பவராகவும் இருந்தார்.
தமது அரசியல் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்த அவர், மற்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்து மரியாதை தந்து நாடாளுமன்ற விவாதத்திற்கான அளவுகோலை நிர்ணயித்தார். எளிமை, நேர்மை, கண்ணியம், பதவி மீதான தனிப்பட்ட பற்றின்மை ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்களுக்கு வாஜ்பாய் ஒரு ஊக்கசக்தியாக இருந்தார்.
வாஜ்பாயை பொறுத்தவரை, ‘வளர்ச்சி என்பது பலவீனமானவர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தேசிய நீரோட்டத்திற்குள் இணைப்பது’. இந்த தொலைநோக்கு தான் தொடர்ந்து நமது அரசின் கொள்கையாக உள்ளது.
21-ம் நூற்றாண்டில் உலக அளவிலான தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா தயாராவதற்கான அடித்தளத்தை அமைத்தார் வாஜ்பாய். எதிர்காலத்துக்கான அவரது பொருளாதார கொள்கைகள் மற்றும் அவரது அரசின் சீர்திருத்தங்கள், பல இந்தியர்களின் வளத்தை உறுதி செய்தது. அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பிற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.
வாஜ்பாய், உலக அளவில் மாற்றமுடியாத அளவுக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தார். நாட்டின் தயக்கம், உலகின் எதிர்ப்பு தனிமைப்படுத்தப்படும் அச்சம் ஆகியவற்றை கடந்து இந்தியாவை அணு ஆயுத வல்லரசு நாடாக அவர் உருவாக்கினார். இந்த முடிவை அவர் சாதாரணமாக எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகமாகி வருகின்றன என்பதால் அதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார்.

‘நான் எப்போதும் அமைப்பில் இருந்துதான் பணி செய்திருக்கிறேன்’ என்று கூறியபோது ‘மக்களின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக’ அவர் தெரிவித்தார். என் மீது வாஜ்பாய் வைத்த நம்பிக்கை மிகவும் பெருமைக்குரியது.
நமது இளைஞர்களின் சக்தியுடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கிற, மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிற, அதை சாதிக்கின்ற நம்பிக்கையுள்ள, தூய்மையான பொறுப்புமிக்க நிர்வாகத்திற்காக பாடுபடுகின்ற, இந்தியர்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்து, அனைவரையும் உள்ளடக்கிய எதிர் காலத்தை கட்டமைக்கின்ற தற்சார்புள்ள தேசமாக இன்று நாம் விளங்குகிறோம்.
உலகத்தில் சமத்துவமும், அமைதியும் நிலவ நாம் பாடுபடுவோம். கோட்பாடுகளுக் காக நாம் பேசுகிறோம். மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மை கொண்டுசெல்ல வாஜ்பாய் விரும்பிய பாதையில் நாம் பயணம் செய்கிறோம்.
ஒரு ஒளி மறையும்போது ஏற்படுகின்ற துயரத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படுவதில்லை. வாழ்ந்த காலத்தில் மக்களின் வாழ்க்கையில் ஒருவரின் தாக்கம் எவ்வளவு நீடித்திருந்தது என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. இந்த காரணத்தால் வாஜ்பாய் உண்மையிலேயே பாரதத்தின் ரத்னாவாக இருந்தார். அவரது கனவுகளுடன் புதிய இந்தியாவை நாம் உருவாக்க, அவரது உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #PMModi #Modi
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
இதற்காக, 75 மாவட்டங்களின் பட்டியலையும், அஸ்தி கரைக்கப்பட உள்ள சிறிய மற்றும் பெரிய நதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ந்து 5 தடவை வாஜ்பாய் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த அளவுக்கு வாஜ்பாய்க்கு நெருக்கமான உத்தரபிரதேசத்தின் மக்கள், அவரது இறுதி பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக யோகி ஆதித்யநாத் கூறினார். #AtalBihariVajpayee #YogiAdityanath
மயிலாடுதுறை:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார்.
வாஜ்பாயின் மறைவுக்கு மத்திய அரசு சார்பில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பிலும் இன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறையில் இன்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சியினர், வணிக சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இதன்பிறகு கிட்டப்பா அங்காடி முன்பு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இதேபோல் சீர்காழி பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.






