search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
    • நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை உக்கடம் அருகே உள்ள வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி அகமது ஆகில் (வயது25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அகமது ஆகிலை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் சமையல் தொழிலாளி புதிதாக செல்போன் வாங்கினார். அந்த செல்போனில் அவர் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் போது அவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து வைத்து இருந்தார்.

    அந்த வீடியோக்களை காண்பித்து இளம்பெண்ணை மிரட்டி, அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    மேலும் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும், கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை மிரட்டி அவரும் பணமும் கேட்டு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்த இளம்பெண் பல்வேறு தவணைகளாக அகமது ஆகிலுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகரித்ததால், இளம்பெண் சம்பவம் குறித்து உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாச புகைப்படம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி அவருடன் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அகமது ஆகிலை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
    • நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது.

    கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் உள்ளே வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்துவிடும். நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்றும், நாங்கள் பன்னிங் (வேடிக்கை) என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மின்னஞ்சலை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து மங்களூரு நகர போலீசார் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் பாஜ்பே தலைமையில் விமான நிலைய அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றது. மேலும் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

    மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

    மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர்.
    • விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (வயது 30). இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிப்பை ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் ஆசிப் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று ஜெயில் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயில் அலுவலர் சிவராசன் தலைமையில் போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆசிப், போலீசாரை சோதனை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அறை முழுவதும் சோதனை செய்தனர்.

    ஆசிப்பின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் கருப்பு மையால் ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப்பே வரைந்து வைத்திருந்தார். இதனை போலீசார் கைப்பற்றினர்.

    அப்போது ஆசிப் உங்கள் நாட்டு தேசிய கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்து உள்ளேன். இதனை எதற்காக எடுத்து செல்கிறீர்கள், கொடியை திருப்பி தரவில்லை என்றால் கட்டாயம் இதற்கு பதில் சொல்ல நேரிடும் என மிரட்டல் விடுத்தார். விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த ஜெயிலும் இருக்காது என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயில் அலுவலர் சிவராசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஆனந்தபாபு (29) மாணவியின் வீட்டிற்குள் சென்று மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆனந்தபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • கன்னியாகுடி ரெயில்வே கேட் பகுதிக்கு சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கன்னியாகுடி பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் கேரள மாநிலம் அயன்சேரி பகுதியை சேர்ந்த விஜின் (வயது 40).இவர் கடந்த 12-ம் தேதி தான் தங்கியுள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து கன்னியாகுடி ரயில்வே கேட் பகுதிக்கு பணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருப்புங்கூர் ரைஸ்மில் அருகே விஜின் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விஜினை வழிமறித்து அவரை மிரட்டி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். அதில் ஒருவர் விஜினின் சைக்கிளையும் எடுத்துச் சென்றார். ஆள் இல்லாத காட்டுப் பகுதியில் விஜினை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ 2 ஆயிரத்து 400 மற்றும் அவரது செல்போனை பிடுங்கி தங்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்த சொல்லி மிரட்டி ரூபாய் 6 ஆயிரம் போன் பே செய்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து விஜின் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் வைத்தீஸ்வரன் கோயில் அருகே புலவனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்,அபிஷேக் மற்றும் கடலூர் தர்மநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய 3 பேரும் விஜினை கடத்தி சென்று வழிப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கைதான பட்டதாரி வாலிபர் நாகர்.ஜெயிலில் அடைப்பு
    • ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே மண லிக்கரை புதூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி பிரின்ஸ் (வயது 32), பி.ஏ.பி.எட் பட்டதாரி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கு தக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார். இதையடுத்து ஸ்டான்லி பிரின்சுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்ப ட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் ஸ்டாலின் பிரின்ஸ், இளம் பெண்ணை ஒரு கோவிலிலுக்கு அழைத்து சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் கருங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த சில நாட்களில் ஸ்டான்லி பிரின்சின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்டான்லி பிரின்ஸ் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்த ரித்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பினார். தன்னுடன் குடும்ப நடத்த வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடு வதாகவும் மிர ட்டினார்.

    இது குறித்து இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டா ன்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவரும் கவரிங் கடையில் நகை ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த நகை தான் அணிந்தி ருக்கும் நகை மாடலை போன்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தனது திருமண போட்டோவை ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் எண்ணிற்கு பேராசி ரியர் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் மூலம் பேராசிரியருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். இதை கண்டித்ததால் ஆத்தி ரம் அடைந்த ஸ்டான்லி பிரின்ஸ், பேராசிரியர் போட்டோவை மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். என்னிடம் பேசாவிட்டால் ஆபாச போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டான்லி பிரின்ஸ் மீது பேராசிரியரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஸ்டான்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டான்லி பிரின்சை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டா ன்லி பிரின்சிடம் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். ஸ்டான்லிபிரின்ஸ் வேறு ஏதாவது பெண்க ளுக்கு ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதள ங்களில் அனுப்பி உள்ளா ரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொ ண்டனர். இதற்கிடையில் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், புகைப்பட ங்களை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்தால் உடனடியாக போலீசில் புகார் செய்தால் நடவடி க்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களது புகை ப்பட ங்களை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • முசிறியில் இளைஞர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • முசிறி போலீசார் நடவடிக்கை

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலகுமார் மகன் ராகுல் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அமர்ந்து இருந்தபோது, உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த கௌரிதாசன் (28), புதுராஜா (33) ஆகிய இருவரும் குடிபோதையில் ராகுலை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனை கண்டி ராகுலின் அண்ணன் ராஜேஷ் தடுத்துள்ளார். அவரை கெளரிதாசன் மற்றும் புதுராஜா இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தாக்கியும், மேலும் உடைந்த பாட்டிலில் ராகுலின் உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராகுல் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கௌரி ராஜன் மற்றும் புதுராஜா கைது செய்யப்பட்டனர்.

    • குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • அரியலூர் ஊராட்சி குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர்.எம்.ஏ. பட்டதாரி, கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து அ.தி.மு.க.வில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார், பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்தஊரான பொய்யாதநல்லூரில் கோவில் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.அரியலூர் ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியில் சொந்தமான லாட்ஜில் அவர் இருந்துள்ளார். அப்போது 3 பேர் அங்கு வந்துள்ளனர். சந்திரசேகரையும் அவரது டிரைவர்ராக்கியையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சந்திரசேகர்கொடுத்த புகாரின் பேரில் செல்லக்கண்ணு, விக்கி என்கிற விக்னேஸ்வரன், சக்தி ஆகிய 3 பேர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதே போல செல்லக்கண்ணு என்பவர்கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகர், ராக்கி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து அரியலூர் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார்.
    • அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் அ.அப்பாஸ் (வயது 51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக இரவில் மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார் . இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர்.

    பின்னர் அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனே நான்கு பேரும் சேர்ந்து அப்பாஸின் சட்டைப்பாக்கட்டில் இருந்து ரூ.6500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து அப்பாஸ் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×