search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"

    • நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார்.
    • நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார்

    ஹோலி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி இந்திய திரை பிரபலங்கள் பலர் ஒருவருக் கொருவர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரன்களுடன் 'ஹோலி' கொண்டாடினார்.

    ரஜினி முகத்தில் அவரது பேரன்கள் மகிழ்ச்சியாக கலர் பொடிகளை பூசினர். பதிலுக்கு ரஜினியும் பேரன்கள் முகத்தில் வர்ணங்களை பூசி மகிழ்ந்தார்.

    இதுபோன்று நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ராய்லட்சுமி, கியாரா அத்வானி, ரித்திகாசிங், நிமிஷா சஜயன், திஷா பதானி, ரவீனா தாண்டன், அவரது மகள் ராஷா உள்பட பலர் ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனாஸ் மகள் மால்டி மேரியுடன் இணைந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த பண்டிகையை கொண்டாட பிரியங்கா சோப்ரா கணவரும், ஹாலிவுட் பாடகருமான நிக்ஜோனாஸ் வெளிநாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்பே மும்பை வந்திருந்தார்.

     

    நடிகர் ராம்சரண் இயக்குனர் சுகுமாரனுடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார். இதுபோன்று அமிதாp பச்சன், சிரஞ்சீவி, சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷய்குமார், டைகர் ஷெராப், விஜய் தேவரகொண்டா உள்பட பலர் ஹோலி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா,சௌந்தர்யா,பேரக்குழந்தைகளுடன் வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
    • சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று பதிவிட்டு உள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஹோலி- 2024 கொண்டாடினார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி 'ஹோலி' கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    1975- ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படம் மூலம் சினிமா நடிகராக அறிமுகமான 'சிவாஜி ராவ் சினிமாவுக்காக 'ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது இதே நாள் என்பதால் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு 'ஹோலி' பண்டிகை தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.




    'ஹோலி' கொண்டாட்ட புகைப்படங்களை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் 'பழம்பெரும் இயக்குனர்பாலசந்தர் 'தாத்தா' அவர்களை இந்த நேரத்தில் நாம் தவறவிட்டு உள்ளோம்"என குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் அவர்களது மகன்கள் வேத் மற்றும் வீர் ஆகியோருடன் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உற்சாக 'போஸ்' கொடுத்த புகைப்படம் மற்றும் "ஹேப்பி ஹோலி " என்று இதயம் மற்றும் எமோஜிகளை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார்.அவருக்கு 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்று பெற்றோர் பெயர் சூட்டினர். பெங்களூருவில் முதலில் 'கண்டக்டர்' பணி செய்தார்.அதன்பின் நடிப்பு ஆர்வத்தில் அவர் சென்னைக்கு வந்தார். 

    1975- ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். 




    ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.

    இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.
    • மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது

    நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ரஜினி முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மிர்னா மேனன்.

    இவர், 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'பட்டதாரி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

    பின் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த 'பிக் பிரதர்'படத்தில் நடித்தார். 2023 ஆம் ஆண்டு க்ரேசி ஃபெல்லோ' மற்றும் உக்ரம் போன்ற படத்திலும் நடித்தார் மிர்னா மேனன்.

    இந்நிலையில் இன்று மிர்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பார்கோர் ஸ்டண்ட் பயிற்சி செய்வதுப் போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஓடுவதும், குதிப்பதும், தலை கீழாக சுழலுவதும் பிரமிக்க வைக்கின்றது.

    தற்போது இப்பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது
    • ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது

    ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்'  படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    இந்நிலையில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை ரித்திகா சிங் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

    இப்பதிவில், லெஜெண்ட்ரி தலைவர் ரஜினிகாந்த் அவருடைய அருளும், அவரது ஆத்மாவும், அவரது இருப்பும் நிஜமாகவே நிகரற்றது. இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

    • லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    • மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது லவ்வர் திரைப்படம்.

     

    இந்த வார ஓடிடி ரிலீஸ் - 4 படங்கள்

    1. லால் சலாம் {lal salaam} - Netflix

    பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான லால் சலாம் படம். மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தான் இத்திரைப்படத்தின் இயக்குனர். இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

     

     

    2. லவ்வர் {lover} - Hot star

    பிப்ரவரி 9-ஆம் தேதி நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான படம் தான் "லவ்வர்".இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவே. இவர் இதற்கு முன்பு 'லிவ் இன்"என்ற வெப் சீரீஸை யூ ட்யூபில் இயக்கியுள்ளார்.

    படம் வெளியான சில நாட்களிலையே மக்கள் இடையே நல்ல பெயரையும், நம்பிக்கையையும் இப்படம் பெற்றது. 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்து. தற்போது வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    3. மெரி கிறிஸ்துமஸ் {merry christmas} - Netflix

    விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது மெரி கிறிஸ்துமஸ் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை "அந்தாதுன்" படத்தின் இயகுனரான ஸ்ரீராம் ராஹவன் இயக்கியிருந்தார். மெரி கிறிஸ்துமஸ் வரும் மார்ச் 8-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    4. ஹனுமான் {Hanu-man} - zee 5

    ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மற்றொரு படம் ஹனுமன். தெலுங்கு மொழியில் திரையரங்கில் வெளியானது. தேஜா சஜ்ஜா முன்னணி ஹீராவாக நடித்திருந்தார். வரலக்ஷ்மி சரத்குமார், அமிர்தா ஐயர், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ப்ரசாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். ஹனுமன் திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது




     


     

     

    • தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவு.
    • ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல்.

    நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தனது 170-வது படமான வேட்டையன் திரைப்படம், லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஜெய் பீம் படம் இயக்கிய டீ ஜே ஞானவேல் தான் இத்திரைபடத்தையும் இயக்குகிறார்.

    இப்படத்திற்க்கு மக்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஃபாஹத் ஃபாஸில் இதில் ஒரு ரோல் செய்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

    இப்போது ராணா தகுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தனது முதல் நாள் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்கியது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூல அவர் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இருப்பார் என்று எதிர் பார்க்கபடுகிறது.


    • இன்று 3- வது நாள் விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது
    • மனைவி லதா மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் ரஜினிகாந்த் குஜராத் ஜாம்நகருக்கு சென்றார்

    'ரிலையன்ஸ்' நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி- நீட்டா தம்பதிகளின் இளையமகன் ஆனந்த்அம்பானி -ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வருகிற ஜூலை 12- ந்தேதி நடக்கிறது.

    இந்த திருமணத்தை முன்னிட்டு குஜராத் ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் 3 நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்தவிழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலைநிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.

    இதில் இந்திபட சூப்பர் ஸ்டார்கள்ஷாருக்கான்,சல்மான்கான் மற்றும் அமீர்கான் கலந்து கொண்டு ஒரே மேடையில் நடனம் ஆடினார்கள்.

    இன்று 3- வது நாளாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த்,மகள் ஐஸ்வர்யா ஆகியோர் குஜராத் ஜாம் நகருக்கு விமானத்தில் சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
    • ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

    வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

     


    இந்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்ற இருப்பது உண்மையில் பெருமைக்குரிய விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாக தொடங்குவதற்கு தயாராகும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது," என தெரிவித்துள்ளார்.



    • கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.

    இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
    • ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தை டைரக்டர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்'படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது. கடந்த 6 -ந்தேதி படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி இன்று காலை ஐதராபாத்துக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது ஸ்டைலான நடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மிகுந்த உற்சாக புன்சிரிப்புடன் ரஜினி ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    • சசிகலா புதிய வீட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
    • அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது.

    இந்நிலையில், நேற்று அந்த வீட்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சசிகலா கொண்டாடினார். கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியாததால் நேற்று சசிகலா வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்த் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய வீடு கோவில் மாதிரி உள்ளது. இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

    ×