search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வேட்டையன் படப்பிடிப்பு - மீண்டும் ஐதராபாத் சென்ற ரஜினி
    X

    'வேட்டையன்' படப்பிடிப்பு - மீண்டும் ஐதராபாத் சென்ற ரஜினி

    • ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
    • ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தை டைரக்டர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்'படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது. கடந்த 6 -ந்தேதி படப்பிடிப்பிற்காக ரஜினி ஐதராபாத் சென்றார்.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி இன்று காலை ஐதராபாத்துக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது ஸ்டைலான நடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மிகுந்த உற்சாக புன்சிரிப்புடன் ரஜினி ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

    Next Story
    ×