search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stalin"

    பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்



    பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. 

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசிவருவது உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி, சந்திரசேகர் ராவிடம் பேசியதை போல் மறுபுறம் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார்.

    நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்துள்ளதாலும், பதவி, பசி காரணத்தாலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 



    ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான் என தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.விடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு தி.மு.க. பேசி வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 67 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது விதிமீறல். காவிரி டெல்டா மாவட்டங்கள் ஏற்கனவே விவசாயத்துக்கு நீரின்றி வறட்சி, குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றன. 

    வேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் தத்தளிக்கும்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தருவதா?

    தேர்தல் நேரத்தில் இதுபோன்ற திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு இத்திட்டத்தை நிறுத்த வேண்டும்.

    பதவியிழந்து வீட்டுக்குப்போகும் நேரத்தில் பாஜக அரசும், அதிமுக அரசும் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மத்தியில் புதிய அரசு அமையும் வரை ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட அளித்த அனுமதியை நிறுத்திவைக்க வேண்டும். காவிரி டெல்டா மண்டலம் பாலைவனமாவதை தடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை காலி செய்ய அரசு இன்று உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

    இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லக்கண்ணு ஐயா, 12 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

    தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    சென்னை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்தனர். சிகிச்சை பலனின்றிதான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மதுரை அரசு மருத்துவனையில் 3 பேர் பலியானதற்கு அரசு மற்றும் சுகாதார துறையின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழு காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழு பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என பதிவிட்டுள்ளார். #MaduraiGovernmenthospital #Stalin
    தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    சென்னை:
     
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி மாரிமுத்து கூறுகையில்,  ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றதும் நான் பயற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK #MKStalin
    சென்னை:

    திமுக முன்னாள் எம்.பியான வசந்தி ஸ்டான்லி (56), 2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். பத்திரிகையாளரான இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடலுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.



    அப்போது அவர் கூறுகையில், கவிஞர், எழுத்தாளர், திமுக பேச்சாளராக விளங்கியவர் வசந்தி ஸ்டான்லி. வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு.

    திமுகவின் செயல் வீராங்கனையாக இருந்த வசந்தி ஸ்டான்லி மறைவால் துயரமடைந்தேன். நாடு முழுவதும் திமுக கொள்கை கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடிய சிறந்த பெண்மணி என தெரிவித்தார். #VasanthiStanley #RIPVasanthiStanley #DMK #MKStalin
    விவசாயி முதல்வரானது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #MKStalin #EdappadiPalaniswami

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாராளுமன்றத்தில் திறமையானவரை பிரதமராக ஆக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை மீண்டும் பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

    ஸ்டாலின், அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நமது கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசையும் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கொள்கை இல்லாதவர் என்று கூறுகிறார். பா.ம.க.வினர் கொள்கையுடன் செயல்படுபவர்கள். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர்களது முடிவு. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை படுதோல்வி அடைய செய்வோம்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கணக்கிட்டு பார்க்கும் போது அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி 40-க்கு 40 கண்டிப்பாக வெற்றிபெறும்.

    தி.மு.க.வினர், எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர். அழகு நிலையத்திலும், பிரியாணி கடையிலும், செல்போன் கடையிலும் பெண்களை தாக்கியவர்கள் யார் என்று எல்லாம் உங்களுக்கு தெரியும்.

    கோடநாடு கொலை வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினர் கூறினர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். பொய் குற்றச்சாட்டுகள் கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவண்ணாமலையில் காலி இடம் இருந்தால் போதும் தி.மு.க.வினர் உடனே பட்டா போடுவதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் சென்றது. உடனே ஜெயலலிதா நில அபகரிப்பு பிரிவு ஒன்றை தொடங்கி நிலங்களை அபகரித்தவர்களிடம் இருந்து அதனை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது உள்ள வழக்கில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் எங்களை பற்றி பேச தி.மு.க.வினருக்கு என்ன தகுதி உள்ளது.

    ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். இதுபற்றி நான் நேருக்கு நேர் பேச தயார், அவர் என்னிடம் மேடையில் விவாதித்து பதில் அளிக்க முடியுமா?. நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.

     


    கடந்த 2 ஆண்டுகளில் அதிக போராட்டம் நடந்த மாநிலம் தமிழகம் தான். ஒரு பிரச்சினையை சமாதானம் செய்து வைத்தால் இன்னொரு பிரச்சினையை அவர்கள் தூண்டி விடுகின்றனர். ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் அ.தி.மு.க. அரசு வழங்கியது. தேர்தலை காரணம் காட்டி அதை தடுத்தி நிறுத்தியவர்கள் தி.மு.க.வினர். தேர்தலுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தேர்தலில் தி.மு.க. விற்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலையை ஆதரித்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி மற்றும் போளூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

    பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அந்த பரிசை மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். மேலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும் மக்களை ஏமாற்றும் போலியான தேர்தல் அறிக்கையாகும்.

    தி.மு.க.வில் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என்று குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள். 40, 50 ஆண்டுகாலமாக கட்சியில் கஷ்டப்பட்டாலும் தொண்டர்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது. ஆனால் அ.தி.மு.க. வில் சாதாரண தொண்டனுக்குகூட பெரிய பொறுப்புகள் வரும். ஏன், என்னை எடுத்து கொள்ளுங்கள் நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு விவசாயி முதல்- அமைச்சராகிவிட்டான், நாம் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

    சாதாரண விவசாயியான நான் முதல்வரானது. ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. மண் வெட்டியை பிடித்து உழைக்கும் விவசாயி முதல்வராக கூடாதா?,

    தமிழகத்தில் விவசாயிகள் 65 சதவீதம் பேர் உள்ளனர். விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, குடிமராமத்து பணிக்காக அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #EdappadiPalaniswami

    தேமுதிக தலைவர் விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தபோது அனைத்தும் பேசப்பட்டது என பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிகள் ஓரளவு உறுதியான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



    தே.மு.தி.க.வுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி. தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். 

    மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தே.மு.தி.க.வின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

    தே.மு.தி.க.வின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை.

    விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்கும் இடங்களை பொருத்து கூட்டணி முடிவு இருக்கும். 

    ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.க.வின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. பலத்தை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #GIM2019 #DMK #MKStalin
    சென்னை:

    2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

    இருநாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என தெரிவித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை. விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை.

    முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.

    அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே.

    முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். #GIM2019 #DMK #MKStalin
    கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம், எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #Stalin
    நெல்லை:

    நெல்லையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    எம்.ஜி.ஆர் தமிழக தலைவர் மட்டுமல்ல, தேசிய தலைவர். எம்.ஜி.ஆர் காலத்தில் தான் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. காவிரி பிரச்னைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக அரசு. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை. யாராலும் அழிக்க முடியாது.

    கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர். கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம். எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalanisamy #Stalin
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கொடநாடு வீடியோ தொடர்பான விஷயங்களை விவரித்தனர்.

    அதன்பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார். 

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம்சாட்டி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளார் என தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    ×