search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியேற்றம்"

    • வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.
    • பாதுகாப்புக்காக செல்ல 450 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    சென்னை:

    பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப் போட வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

    சென்னையில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நாளை மாலை மற்றும் 18-ந்தேதி மாலை நடத்தப்படுகிறது.

    பொதுமக்கள் பயப்படாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முக்கிய வீதிகள், தெருக்களில் துணை ராணுவப் படையினர் அணி வகுத்து செல்கிறார்கள். 190 துணை ராணுவப் படையினர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் துப்பாக்கியுடன் நகரின் பதட்டமான பகுதிகளில் அணிவகுப்பு நடத்துகின்றனர்.

    அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் அணிவகுப்பு நடக்கிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.

    இது தவிர சென்னையில் பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆயிரம்விளக்கு, பெரிய மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் வெளி மாவட்ட நபர்கள் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    அரசியல் பிரமுகர்கள் தங்கி இருந்தால் அவர்கள் நாளை மாலையில் இருந்து வெளியேற வேண்டும் என லாட்ஜ் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் ரீதியாக தங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

    வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் யார்-யார் தங்கி உள்ளனர்? சந்தேகப்படும்படி யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் தங்கள் பகுதியில் உள்ள விடுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.

    தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 3,726 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

    பாதுகாப்புக்காக செல்ல 450 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இந்த ரோந்து வாகனங்களில் பணியாற்றும் போலீசார் எப்படி செயல்பட வேண்டும்? என்பது பற்றிய பயிற்சி நேற்று இரவு அளிக்கப்பட்டு உள்ளது.

    • தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.
    • அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

    உக்ரைன் மீதான போர் தொடர்பாக ரஷியா - அமெரிக்கா மோதல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் ரஷியாவில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் 2 பேரை ரஷிய அரசு வெளி யேற்றியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்த 2 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, எங்கள் தூதரக அதிகாரிகளை ரஷிய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்து கொள்ள முடியாது.

    அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாத இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

    • அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
    • அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    நைஜர்:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது.

    இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500 பேரை பிரான்ஸ் நைஜரில் நிலை நிறுத்தி இருந்தது. பிரான்சுக்கு ஆதரவாக அந்நாட்டு அதிபர் முகமது பாசும் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் திரும்பியது. அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.

    இந்நிலையில் அந்த நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 1500 வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    • ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் போர் முடியும் தறுவாயில் தரைமட்டமானது
    • வெளியெறிய மக்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர்

    19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

    இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

    போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

    ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

    தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

    • அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயி கள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தக்கலை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நேற்று திறக்கப்பட்டது.

    அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 50 கன அடியாக குறைக்கப்பட் டுள்ளது. பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அனந்தனார் சானலில் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற சானல்களிலும் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தேவை யான அளவு தண்ணீரை வெளியேற்றவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.62 அடி யாக இருந்தது. அணைக்கு 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக இருந்தது. அணைக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1032 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வெண்டிபாளையம்ரெயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாயில் பிளீச்சிங் கழிவுநீர் வெள்ளை நிறத்தில் வெளியேறி வருகிறது
    • இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோலார் அடுத்த வெண்டிபாளையம் ெரயில்வே நுழைவு பாலம் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் செல்லும் கழிவுநீர் நேரிடையாக காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்நிலையில் வெண்டிபாளையம் மற்றும் மோளக் கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாயம் மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நாள்தோறும் வெள்ளை நிறத்தில் கால்வாய்களில் பாய்ந்தோடி வருகிறது.

    இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பிளீச்சிங் தண்ணீர் வெள்ளையாக பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நின்று மூக்கை பொத்தி பிளீச்சிங் கழிவு நீரை வேடிக்கை பார்த்து செய்வதறியாது திகைத்து செல்கின்றனர்.

    வெள்ளை நிறத்தில் பிளீச்சிங் கழிவுநீர் வெளியேறுவதால் தொற்று நோய்கள் மற்றும் புற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பல நாட்களாக பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் பிளீச்சிங் கழிவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    பிளீச்சிங் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டுபிடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் முறைகேடாக இயங்கும் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அப்பகுதியில் போராட்டம் நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 983 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அணையில் இருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும், அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.41 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 983 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.மீதியுள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் மழையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வந்ததையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. கடந்த 3 நாட்களாக உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வந்ததால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. மலையோர பகுதி களிலும், அணை பகுதி களிலும் மழை குறைந்துள்ள தையடுத்து பேச்சிபாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    பேச்சிபாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதையடுத்து கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந் துள்ளது. திற்பரப்பு அருவி யிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. என்றாலும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் அனுமதி வழங்கவில்லை.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43. 73 அடியாக உள்ளது. அணைக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 788 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 73.54 அடியாக உள்ளது. அணைக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.68 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.77அடியாகவும் பொய்கை அணை நீர்மட் டம் 17.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 49.38 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.70 அடிைய எட்டியுள்ளது.

    அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை எடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. கோழிபோர்விளை, குருந்தன்கோடு, ஆணைக்கிடங்கு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணை பகுதிகளில் மழை சற்று குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு 1084 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.60 அடியாக உள்ளது.

    அணைக்கு 703 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 381 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும் 1084 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.31 அடியாக உள்ளது.

    அணைக்கு 401 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .பேச்சி பாறை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் இன்றும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கொள்ளிடம் ஆற்றில் படுகை உள்ளே உள்ள 4 கிராமங்களில் வெள்ளநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது.
    • கிராம மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

    சீர்காழி:

    கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கொள்ளிடம் ஆற்று திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.

    இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்று வரும் நிலையில் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது

    இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    திட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

    கிராமங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு கரைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மூன்றாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அன்றாட தேவைக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் படகுகளின் மூலமாகவே வெளியேறி வருகின்றனர்.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய்கள் மூலம் வேதாரண்யம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
    • 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் நேற்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக திருவாரூர் வழியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் கொரடா ச்சேரி அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் சாலை ஓரத்தில், கொள்ளிடம் கூட்டு குடிநீரின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.

    இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி அருகிலுள்ள ஓடம்போக்கி ஆற்றில் கலந்து வருகிறது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழாயை உடைப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடைப்பு உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×