என் மலர்
நீங்கள் தேடியது "Asian Athletics Championship"
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது.
- இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 5-வது நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான 4*100மீ தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனை அபிநயா இடம்பெற்றுள்ளார்.
- ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
- இந்த மதிப்பு மிக்க போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
குமி:
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் 64 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
பிரவீன் சித்ரவேல் (டிரி பிள் ஜம்ப்), செர்வின் (20 கி.மீ. நடைபந்தயம்), தமி ழரசு, ராகுல்குமார் (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), விஷால், சந்தோஷ்குமார் (4x400 மீட்டர், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), வித்யா (400 மீட்டர் ஒட்டம், 400 மீட்டர் தடை தாண்டு தல்), அபினயா (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), சுபா (4x100 மீட்டர், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).
ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயம் முதலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கல பதக்கம் பெற்று முத்திரை பதித்தார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 21.14 நிமிடத்தில் கடந்தார்.
தொடக்க நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்து செர்வின் சாதித்தார். சீன வீரருக்கு தங்கமும், ஜப்பான் வீரருக்கு வெள்ளியும் கிடைத்தன.
ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த செர்வினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த மதிப்பு மிக்க போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
எங்கள் சர்வதேச மிஷன் பதக்க திட்டத்தின் (எம்.ஐ. எம்.எஸ்.) விளையாட்டு வீரரான செர்வினின் சிறந்த சாதனையில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். நமது நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்ததற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவருக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்கும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்றுள்ளனர்.
- 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டி இன்று நடைபெற்றது.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் இந்திய அணி சார்பில் 59 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டி இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் 3-வது இடத்தைப்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடங்கள் 13 விநாடிகளில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது.
- தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
சென்னை:
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
பிரவீன் சித்ரவேல் (டிரி பிள் ஜம்ப்), செர்வின் (20 கி.மீ. நடைபந்தயம்), தமிழரசு, ராகுல்குமார் (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), விஷால், சந்தோஷ் கமார் (4x400 மீட்டர், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), வித்யா (400 மீட்டர் ஒட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல்), அபினயா (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), சுபா (4x100 மீட்டர், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)
- நீரஜ் சோப்ராவும், அவினாஷ் சாப்லேயும் உலக தடகளப் போட்டிக்காக பயிற்சி பெற்று வருவதால் இதில் பங்கேற்கவில்லை.
- பி.டி.உஷாவின் சாதனையை ஒடிசாவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனை நித்யா நெருங்கினார்.
சென்னை:
24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜூலை 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான 54 (28 ஆண்கள், 26 பெண்கள்) பேர் கொண்ட இந்திய அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. நீரஜ் சோப்ராவும், அவினாஷ் சாப்லேயும் உலக தடகளப் போட்டிக்காக பயிற்சி பெற்று வருவதால் இதில் பங்கேற்கவில்லை.
ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டில் இருந்து 7 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் விவரம்:-
1.ராஜேஷ் (400 மீட்டர் ஓட்டம், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம், மற்றும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்).
2.சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).
3. ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்).
4. பிரவீன் (டிரிபிள் ஜம்ப்).
5. நித்யா (100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்).
6. பரணிகா (போல் வால்ட்).
7. சுபா (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).
ஒடிசாவில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியின் சிறப்பான செயல்பாடு காரணமாக இவர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வீரர், வீராங்கனைகள் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று தமிழ்நாடு தடகள சுங்க செயலாளர் சி.லதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒடிசாவில் சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணி 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 17 பதக்கம் பெற்றது. தமிழக வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடாகும். இதன் அடிப்படையில் தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தனிநபர் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் எல்லோரும் பதக்கம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
தமிழக வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் பதக்கம் பெற்றதை தாண்டி தற்போது சர்வதேச அளவிலும் இந்தியாவுக்காக தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற ஆரம்பித்து விட்டனர். சீனியர் போட்டியிலும் அது தொடருகிறது.
அக்டோபரில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தமிழகத்தை சேர்ந்த அதிகமானோர் தேர்வாகி பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பி.டி.உஷாவின் சாதனையை ஒடிசாவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனை நித்யா நெருங்கினார். பி.டி.உஷாவின் சாதனையை விரைவில் நித்யா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா கூறி உள்ளார்.
- நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
- இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார். அவர் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இதேபோல், நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்.
இதன்மூலம், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
- இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர்.
மூன்றாம் நாளான நேற்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், 4ம் நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம், இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் வென்றது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட வீரர்களில், தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர்.
மூன்றாம் நாளான நேற்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.
4ம் நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல், பல்வேறு போட்டிகளிலும் இந்தியா சார்பில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்திய அணி அசத்தலாக வெற்றிப் பெற்றுள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் அவர் நேற்று அவரது சொந்த ஊரான முடிகண்டம் கிராமத்திற்கு வந்தார். அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவரை கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து, பாராட்டி வாழ்த்தினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள், தடகள போட்டியில் பங்கேற்றபோது, கிழிந்த ஷூ அணிந்து பங்கேற்றது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் வைரலாக பரவி வரும் கருத்து குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன். அந்த ஷூ எனக்கு அதிர்ஷ்டமான ஷூ. அதனால் நான் அதனை விரும்பி அணிந்திருந்தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான், வேறொன்றுமில்லை. சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்கள்’’ என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த இலக்கு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதே ஆகும். என்னை இதற்கு முன்பு பலருக்கு தெரியாது. அதனால், யாரும் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை. தற்போது என்னை எல்லோருக்கும் தெரிகிறது. அதனால் நிறைய பேர் ஸ்பான்சர் செய்ய முன்வருகிறார்கள். அரசும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் எனக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளது என்றார். #AsianAthleticChampionship #Gomati
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. #AsianAthleticsChampionship #PUChitra #GoldMedal






