search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லக்கண்ணு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
    • பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?

    சென்னை:

    தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.

    ஜூன் 14-ந் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.

    ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.

    ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?

    மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார்.

    முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா?

    கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.

    தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்திற்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள். எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுநீரக தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • நல்லகண்ணு நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (வயது 97) காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு டாக்டர்களும், சிறுநீரகவியல் துறை டாக்டர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதில் நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுநீரக தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், "நல்லக்கண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. ஆனாலும் இன்னும் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் உள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார்" என்று தெரிவித்தார்.

    • நல்லக்கண்ணுவுக்கு எந்த வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
    • நல்லக்கண்ணுவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு 97 வயதாகிறது. இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நல்லக்கண்ணுவுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பும் இருப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று பாதிப்புக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் 2-வது நாளாக நல்லக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நல்லக்கண்ணுவுக்கு எந்த வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் இன்று காலை கூறும்போது,

    பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்தவகை காய்ச்சலால் நல்லக்கண்ணு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விருதை சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
    • 96 வயதாகும் நல்லகண்ணு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

    நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வாகியுள்ளார்.

    இந்த விருதை சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுதந்திர தின விழாவில் நல்லகண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். 96 வயதாகும் நல்லகண்ணு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×