search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sp"

    • தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக போலீசார் பல்பொருள் அங்காடி கடந்த 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக போலீசார் பல்பொருள் அங்காடி கடந்த 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பல்பொருள் அங்காடியில் அமைந்துள்ள பொருட்கள், போலீசார் பெற்றுக் கொள்ளும் முறை, அதன் விலைப்பட்டியல் மற்றும் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் டிஎஸ்பி மணிமாறன் , ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முனைஞ்சிப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் நகை அடகு வைத்து ரூ.90 ஆயிரம் கடன் வாங்கினேன். மேலும் என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.1,10,000-ஐ வீட்டு பீரோவில் வைத்து இருந்தேன்.
    • தினமும் செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம்.

    முனைஞ்சிப்பட்டி:

    நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மேலமுனைஞ்சிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), விவசாயி. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் விவசாயம் மற்றும் ஆடுகள் வளர்த்து பராமரித்து வருகிறேன். கடந்த பிப்ரவரி 4-ந்தேதி முனைஞ்சிப்பட்டியில் உள்ள வங்கி ஒன்றில் நகை அடகு வைத்து ரூ.90 ஆயிரம் கடன் வாங்கினேன். மேலும் என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.1,10,000-ஐ வீட்டு பீரோவில் வைத்து இருந்தேன்.

    மறுநாள் எனது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 23 பவுன் நகை திருட்டு போனது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது நானும், எனது மனைவியும் ஆடு மேய்க்க சென்ற நேரத்தில், எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டு பக்கம் வந்ததாக கூறினார்கள்.

    இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த நான் மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் சந்தேக நபரிடம் போலீசார் இதுவரை விசாரிக்க வில்லை.

    எனது வீட்டில் இருந்து திருட்டுபோன நகை, பணம் 6 மாதங்களாகியும் இதுவரை மீட்கப்படவில்லை. எனவே அவற்றை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தினமும் செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம். அதனை நன்கு அறிந்தவர்கள் ஆட்கள் இல்லா நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.

    இதனால் அந்த தெருவில் வசிக்கும் அவரது உறவினர்கள் உள்பட சுமார் 30 பேரின் கைரேகைகளை ஆய்வு செய்து வருகிறோம். சி.சி.டி.வி. மூலமும் அந்த நாளில் அந்த பகுதியில் நடமாடியவர்கள் விபரங்களையும் சேகரித்து வருகிறோம். விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றனர்.

    • போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுரை வழங்கினார்.அப்போது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண்டானா, பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர் , ஐந்து சாலை சந்திப்பு மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆறு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் பிறகு தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 11 பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முத்துவல்லி மற்றும் தலைவர்களிடத்தில் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முஸ்லிம் ஜமாத்தாருக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார். அதற்கு ஜமாத்தாரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சுல்தானிய பள்ளிவாசல், மரக்கடை பள்ளிவாசல், கண்ணன் நகர் பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் போது தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போலீசார்கள் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
    • 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

    தாராபுரம் :

    விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில், பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா, பெரியகடை வீதி, டி.எஸ்.காா்னா் 5 சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.இதைத் தொடா்ந்து, தாராபுரம் சுற்றுவட்டார 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    நெடுஞ்சாலையோரம் விதிமுறைகளை மீறி வாகனங்ளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேவேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீசார் ரோந்து செல்ல வாகனங்கள் டார்ச்லைட், ரேடார்கள், கேன், உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இவற்றின் பராமரிப்பு குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடைபெற்றது. ஆய்வு செய்த பின்னர் எஸ்.பி. பிரவேஷ் குமார் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கேதாண்டப்பட்டி, மோட்டூர், வன்னிவேடு, நாட்டறம் பள்ளி, ஆகிய 4 இடங்களில் இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளது.

    அந்த இடத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். விதிகளை மீறி நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதை கண்காணிக்க 4 போலீஸ் ரோந்து குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
    சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாஜக சாதி அரசியல் செய்து வருகிறது என குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
    புது டெல்லி:

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில்,  நாளை 6ம் கட்ட தேர்தலும், வரும் 19ம் தேதி 7ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பாஜகவினர் அவர்கள் கட்சிக்கு என்ன வேண்டுமோ, அதை செய்வதற்காக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். மேலும் பாஜக, சாதி அரசியல் செய்து வருகிறது. இவர்களின் ஆட்சி வெவ்வேறு சாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாஜக ஆட்சி பொய்களையும், வெறுப்புணர்வையும் முன்வைத்தே இயங்குகிறது.



    மற்ற கட்சியினருக்கு ரெட் கார்ட் வழங்குவதன்  மூலம் பாஜக வெற்றி பெற முயல்கிறது. சமாஜ்வாடி கட்சியினருக்கு ரெட் கார்ட் கொடுத்து, அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளனர்.

    எனவே தான் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியினர் பலர் ரெட் கார்ட் வாங்கியுள்ளனர். வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல் எங்கள் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். 

    எங்கள் கூட்டணியில் இருப்பவர்களை தவிர, பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் சரியானவர்களா? ஒருவர் கூட குற்றம் புரிந்தவர்  இல்லையா? பாஜக, தாங்கள் தான் குற்றமற்றவர்கள் என்றும் மற்றவர்கள் போலியானவர்கள் என்றும் கூறி மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் உள்ளது.

    வரவிருக்கும் 6ம் கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியாது. 7ம் கட்ட தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.

    இந்நிலையில்,  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். #Loksabhaelections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

    வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


    காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன. #Loksabhaelections2019 #ElectionCommission
    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், அப்படி பேசியதாக நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #AzamKhan
    ராம்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆசம் கான் பேசும்போது, ஜெயப்பிரதா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.



    இந்நிலையில் பிரசாரத்தின்போது பேசியது குறித்து ஆசம் கான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து நான் ஆட்சேபனைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.

    வேறு ஒருவரைப் பற்றி நான் பேசினேன். தன்னிடம் 150 துப்பாக்கிகள் இருப்பதாகவும், ஆசம் கானைப் பார்த்தால் சுட்டுக்கொல்வேன் என்றும் கூறிய ஒருவரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று பேசினேன். அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. கால்சட்டை என்பது ஆண்கள் அணிவது.

    நான் இந்த தொகுதியில் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவன். மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். என்ன பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். யாருடைய பெயரையாவது நான் குறிப்பட்டு அவமதிக்கும் வகையில் பேசியதாக நிரூபித்தால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிவிடுவேன். ஊடகங்கள் எனது கருத்தை திரித்து கூறிவருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை ஜெயப்பிரதா 2004 மற்றும் 2009 பொதுத்தேர்தலில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2010ல் அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AzamKhan

    காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளோம் என உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பரபப்பு பேட்டியளித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி , சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-

    தேர்தல் ஆணையம் நான்கு மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது, இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்க முடியும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டுமா ?

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை ஹிரா சிங் மார்க்கத்தின் கோத்வானா கண்ட்ரந்த்ரா கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    நிச்சயம் நல்ல முடிவெடுத்து 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளோம். இதற்காக 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்த்தலில் காங்கிரஸ் உடன்  மெகா கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை.

    சமாஜ்வாதி கட்சி எந்த கட்சியையும் அவமதிக்காது, பொதுத்தேர்தல் சமயத்தில் உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும்.

    மேலும், தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும். அதற்காக சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.

    4 மாநில சட்டமன்ற தேர்தலிம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது முக்கியத்திருப்பமாக பார்க்கப்படுகிறது. #AkhileshYadav
    பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலை ஏற்படும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பெரும்பானமையான தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.   அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுருத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து  ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது.

    வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அதோடு நாட்டில் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்திரப்பிரதேச மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #AkhileshYadav
    ×