search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயப்பிரதா"

    • பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்.
    • பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது,

    திருப்பதி:

    பா.ஜ.க. முன்னாள் எம்.பி.நடிகை ஜெயப்பிரதா நேற்று திருப்பதி வந்தார். ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    ஆந்திர மாநில அரசியலில் ஈடுபடும் ஆசை எனக்கு இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டும். இது குறித்து பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    பாரதிய ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. பா.ஜ.க. 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியி டுகிறது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    எனவே ஜெயப்பிரதா இந்த தேர்தலில் ஆந்திராவில் நிறுத்தப்படுவது சாத்தியமில்லை. அடுத்த தேர்தலில் ஆந்திராவில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ராம்பூர் தொகுதியில் 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார்.
    • ஜெயப்பிரதா பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.

    ரேபரேலி

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.

    ஜெயப்பிரதா தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #AazamKhan #LokSabhaElections2019
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார் . ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.



    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

    ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால், காக்கி என்று ஆசம் கான் குறிப்பிட்டது, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AazamKhan #LokSabhaElections2019
    ×