search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் பகுதியில் விநாயகா் விஜர்சன ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் எஸ்.பி., ஆய்வு
    X

    கோப்புபடம்.

    தாராபுரம் பகுதியில் விநாயகா் விஜர்சன ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் எஸ்.பி., ஆய்வு

    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
    • 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

    தாராபுரம் :

    விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில், பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா, பெரியகடை வீதி, டி.எஸ்.காா்னா் 5 சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.இதைத் தொடா்ந்து, தாராபுரம் சுற்றுவட்டார 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×