search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி."

    • காங்கிராசார் திடீர் போராட்டம்
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    விஜய் வசந்த் எம் பி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பரப்பிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் அறி விக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலி பரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. இந்த நிலை யில் நேற்று மாலை மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்த னர். ஆனால் இன்று காலை வரை அந்த வாலிபரை கைது செய்யப்படவில்லை.இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட னர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கள் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், டைசன்,செல்வன் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் டிஎஸ்பி நவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. சம்பந்தப் பட்ட நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

    • தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
    • பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    பா.ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அவினாசிபாளையம் பகுதியில் செல்வக்குமார் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் செல்வக்குமார், செகமலையப்பன், சம்பத்குமார் ஆகியோரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாரை பதிவு செய்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க. தொண்டர்கள் சுமூகமாக வாழ மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

    • கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.
    • 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். இவா் நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்று, அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.

    கடந்த 2001ல் தமிழக காவல் துறையில் நேரடி துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியாற்றினாா். பின்னா் சென்னை அண்ணாநகா் உதவி ஆணையராகப் பணிபுரிந்து 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    இதையடுத்து 2012ல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்தாா். பின்னா் மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா், சென்னை போக்குவரத்து துணை ஆணையா், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, இதைத்தொடா்ந்து 2021 முதல் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    உடுமலை :

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் தலைமையில் உடுமலை சட்டமன்ற தொகுதி கண்ணமநாயக்கனூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி., வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது .குறிப்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களால்ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். 17 லட்சம் உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் மூலம் ஒன்றரை கோடி அதிமுக., தொண்டர்களுடன் கட்சி வீர நடை போட்டது. பின்னர் அம்மாவின் ஆசி பெற்ற தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    திமுக. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். தற்சமயம் திமுக. அரசு இரண்டு ஆண்டு சாதனை என பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக. ஆட்சி காலத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். மொத்தத்தில் எதுவும் தெரியாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தியது. அதிமுக. ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ,ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மருத்துவரின் கனவு நிறைவேறாமல் இருந்த நிலையில் இட ஒதுக்கீடு அறிவித்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் தற்போது மருத்துவராகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் பல்வேறு தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது .

    சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக. ஆட்சி அமைக்கப்படுவது உறுதி. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக.வில் இணைய பலரும் முன் வந்து உள்ளனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதால் உறுப்பினர் சேர்க்கைையை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சார்பில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியிட்டு பிரச்சினை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சமூக வலைதளங்களின் சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி, 3 பதிவுகளை அதில் இருந்து அகற்றுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

    டுவிட்டரில் ஏற்கனவே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பதிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்ப்பதற்காக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

    அதில் யாரும், யாரையும் தாக்கியது போன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை. 70 சதவீத அழைப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் தொடர்பு கொண்டு திருப்பூரில் இதுபோன்று நடக்கிறதா என்று விளக்கம் கேட்கின்றனர்.

    அவர்களுக்கு இந்தி தெரிந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தகவல்களை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புகார் கொடுக்க வரும் நபர்களிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும்.
    • போலீசாரின் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் ஒவ்வொரு போலீஸ் நிலையம் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வருகை தந்தார். அவரை இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வரவேற்றார். அவருடன் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உடன் இருந்தார். போலீஸ் நிலையத்தில் தினசரி வரும் புகார்களை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். போலீஸ் நிலையத்தை தினசரி சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் நபர்களிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும்.

    போலீஸ் நிலையத்தின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் அழகாக வைக்கப்பட்டுள்ளது. அதை இன்னும் நல்ல முறைக்கு பராமரிக்க வேண்டும் என்று கூறினார். போலீசாரின் குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார். அதன் பிறகு சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு சென்றார். அங்கு சுற்றுலா வந்த பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு களை வழங்கி அவர்களிடம் அறிவுரைகளை வழங்கி னார். மாத்தூர் தொட்டில் பாலத்தின் பல பகுதிகளை சுற்றி பார்த்தார்.

    • போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
    • குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

    நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை
    • இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

    அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. பின்னர் மனுவானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் மனு வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து நேரில் மனு வாங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று இந்த கூட்டம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை வழங்கலாம். மேலும் போலீஸ் நிலையங்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்திகரமானதாக இருந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை
    • கஞ்சா புகார்கள் தொடர்பாக 7010 363173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை மற்றும் போதை பொருட் கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் தனிபடை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் குட்கா வழக்கில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தன‌ இதை கண்காணிக்க வடசேரி போலீசுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதை தொடர்ந்து வடசேரி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காலை, மாலை நேரங்களில் பஸ் நிலைய பகுதிகளில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்ப னை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று வடசேரி பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கஞ்சா புகார்கள் தொடர்பாக 7010 363173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கேட்டு கொண்டார்.

    பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இருள் சூழ்ந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.உடனடியாக அந்த பகுதியில் மின்விளக்கு வசதியை ஏற்ப டுத்துவதுடன் ரோந்து பணியை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.

    • காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    ×