search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பேற்பு"

    • திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக இருந்த ஆனந்தன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரியாக அரவிந்த்குமார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இவர் இதற்கு முன் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய பூம்புகார் சுற்றுலா அதிகாரியாக இருந்தார். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சுற்றுலா அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்ட சுற்றுலா அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகித்தபோது, மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டார்.

    திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் கூறும்போது, 'ஆண்டிப்பாளையத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலங்களாக உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் சுற்றுலா தொழில் ஆபரேட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சுற்றுலா தொழில் மூலம் வாழ்வாதாரம் பெருக்குவதற்கு உரிய அறிவுரைகள் வழங்க கூட்டம் நடத்தப்படும்' என்றார்.

    • மறைமாவட்ட 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் நியமனம் செய்துள்ளனர்.
    • 26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மறை மாவட்டத்தின் 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் வருகிற 26-ந்தேதி அன்று சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்கிறார்.

    இவ்விழாவில் திருத் தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரல்லி முன்னிலை வகிக்கிறார். மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்துகிறார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரும் சிவகங்கை மறைமாவட்டத்தின் பரிபாலகரமான மேதகு ஆயர் ஸ்டீபன், சிவகங்கை மேனாள் ஆயர் சூசைமாணிக்கம், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் பிற மறைமாவட்டங்களின் ஆயர்களும் இத்திருலை பாட்டு நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், சென்னை சி.எஸ்.ஐ. மேனாள் பேராயர் தேவசகாயம் அமைச்சர் பெரியகருப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், திருச்சி எம் எல் ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்கின்றனர்.

    26-ந்தேதி இத்திரு நிலைப்பாட்டு நிகழ்வானது மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த மாபெரும் திருநிலைப்பாட்டு நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பு செய்ய சிவகங்கை கத்தோலிக்க மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

    • பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.

    பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார். 

    • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு புதி தாசில்தார் பொறுப்பேற்று கொண்டார்
    • கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம். கலிலூர் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். . அவரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், பொய்யாமொழி, பாக்யராஜ், ஆனந்த், உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர். இங்கு பணியாற்றிய தாசில்தார் துரை அரியலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    • நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
    • நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    சேலம்:

    சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    கோவை,

    கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலியாக இருந்த கோவை சரக டி.ஐ.ஜி. பணியிடத்திற்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    • குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார்.
    • இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் சஷ்டி விஜயகண்ணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • செல்வம் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார்.
    • ரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார். அதனைத் தொடர்ந்து, சென்னை உளவுத்துறையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வீரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார். இவர் நேற்று குறிஞ்சிப் பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வீரசேகருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர் 

    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்று கொண்டார்.
    • அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று சென்றார்.

    அதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அம்மாபேட்டை, பவானி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இன்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

    அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, தனபால் உள்ளிட்ட போலீசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

    • ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.
    • 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங் சாய் பணியாற்றி வந்தாா். அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பி.சாமிநாதன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். இவா் நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியில் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்று, அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.

    கடந்த 2001ல் தமிழக காவல் துறையில் நேரடி துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியாற்றினாா். பின்னா் சென்னை அண்ணாநகா் உதவி ஆணையராகப் பணிபுரிந்து 2007ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா்.

    இதையடுத்து 2012ல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்தாா். பின்னா் மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா், சென்னை போக்குவரத்து துணை ஆணையா், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, இதைத்தொடா்ந்து 2021 முதல் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவளர்செல்வி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
    • கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பாலமுரளி திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

    ×