search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officiating"

    • கானா நாட்டின் வர்த்தக ஆணையராக மேலூர் தொழில் அதிபர் அருண் பெரியசாமி பொறுப்பேற்றார்.
    • இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன் தொழிலதிபர் அருண்ராஜா. இவர் இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐ.இ.டி.ஒ., என்.ஆர்.ஐ. கவுன்சில் அவார்ட்ஸ், ஜி.ஐ.ஒ. மாநாட்டில் இந்திய- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று கானா துணை தூதர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    கானாவில் உள்ள அக்ராவில் உலக தினை தினம் கொண்டாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரைவுப்படுத்த வர்த்தக ஆணையர் அருண் ராஜா பெரியசாமி மதுரையில் உள்ள மீனாட்சி கிரானைட் குழும இயக்குநர் மற்றும் வணிக மற்றும் கல்வி துறையின் பல்வேறு பங்குதாரர்கள், கானா வேளாண்மை துணை அமைச்சர் யாவ் பிரிம்பாங் அடோ மற்றும் கானாவுக்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெ ழுத்திட்டனர்.

    வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் பெரியசாமி கூறியதாவது:-

    மதுரையில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுள்ளார்.
    • காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் நிருபர்களிடம் கூறுகையில் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் காவலரை நியமனம் செய்து குற்றங்கள் நடக்காமல் இருக்க பணியாற்றுவேன் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் கொடுக்கும் புகாரை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் கெடிலம் சேந்தநாடு களமருதூர் மடப்பட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்களை வைத்து ரோந்து பணிகள் ஈடுபட செய்வேன் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வேன் என்றார்.

    ×