கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவணசுந்தர் இன்று பொறுப்பேற்பு

புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவணசுந்தர் இன்று பொறுப்பேற்பு
Published on

கோவை,

கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலியாக இருந்த கோவை சரக டி.ஐ.ஜி. பணியிடத்திற்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com