search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TOOK CHARGE"

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    கோவை,

    கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலியாக இருந்த கோவை சரக டி.ஐ.ஜி. பணியிடத்திற்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப் பேற்றுக்கொண்டார்
    • டாக்டர்கள், துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கரூர்

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பணியாற்றி வந்த முத்துச்செல்வன், சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை அடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கண் சிகிச்சை துறை பேராசிரியராக இருந்த சீனிவாசன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டார். நேற்று காலை சீனிவாசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டாக்டர்கள், துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×