search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Officer of A."

    • விருதுநகர் மாவட்ட ஆவின் தனி அதிகாரியாக கலெக்டர் பொறுப்பேற்றார்.
    • கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2021-22-ல் 2 மேலாளர்கள், 5 துணை மேலாளர்கள், 8 டிரைவர்கள் உள்பட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட பால்வளத்துறை சார்பு ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு 2022ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன் பின்னர் மார்ச் 16-ந்தேதி ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் ஆவின் தனி அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ×