என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special Officer of A."
- விருதுநகர் மாவட்ட ஆவின் தனி அதிகாரியாக கலெக்டர் பொறுப்பேற்றார்.
- கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2021-22-ல் 2 மேலாளர்கள், 5 துணை மேலாளர்கள், 8 டிரைவர்கள் உள்பட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட பால்வளத்துறை சார்பு ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு 2022ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன் பின்னர் மார்ச் 16-ந்தேதி ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் ஆவின் தனி அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்