search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகத்தை"

    • சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி
    • தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள்

    நாகர்கோவில் : விளவங்கோடு தாலுகா நல்லூர் வருவாய் கிராமத் திற்குட்பட்ட சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்ததுடன் அங்கிருந்த சுற்றுச்சுவரை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட் டது.

    ஆனால் இதுவரை போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தினகரன் உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • காங்கிராசார் திடீர் போராட்டம்
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    விஜய் வசந்த் எம் பி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பரப்பிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் அறி விக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலி பரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. இந்த நிலை யில் நேற்று மாலை மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்த னர். ஆனால் இன்று காலை வரை அந்த வாலிபரை கைது செய்யப்படவில்லை.இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட னர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கள் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், டைசன்,செல்வன் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் டிஎஸ்பி நவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. சம்பந்தப் பட்ட நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

    ×