search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஐ.ஜி."

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • புறக்காவல் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை
    • பிளாட்பாரங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாருக்கு எல்லைப் பகுதி அதிகமாக இருப்பதால் இங்கு இருந்து சம்பவ இடத்திற்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஏற்பட்டு வந்தது. எனவே வள்ளியூர் மற்றும் குழித்துறையில் புற காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளியூர் மற்றும் குழித்துறையில் புற காவல் நிலையம் திறந்து செயல்பட தொடங்கியுள்ளது. அங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் ரெயில்வே டி.ஐ.ஜி. அபிஷேக் தீட்சித் நேற்று வள்ளியூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். புறக்காவல் நிலையத்திற்கு நிரந்தர இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் பிளாட்பாரங் களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை குழித்துறை ெரயில் நிலையத்தில் டி.ஐ.ஜி. அபிஷேக் தீட்சித் ஆய்வு நடத்தினார். அங்குள்ள புற காவல் நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச்சென்று அங்கு மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார்.கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி பேசியதாவது:-

    குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.ஆனால் பெற்றோர்களின் உழைப்பை சிதைக்கும் வகையில் சமூக விரோத நட்புகள் வாயிலாக போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் சிலர், தவறான பாதைக்குச்செல்கின்றனர்.போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இளைஞர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.இத்தகைய போதைப்பொருட்களை உட்கொள்வதால் உடல் பலவீனம் அடைந்து பசியின்மை ஏற்படுவதுடன் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. ஞாபக மறதி அதிகரிக்கும்.படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களைத்தேர்ந்தெடுங்கள். போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×