search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகையிட்டு"

    • காங்கிராசார் திடீர் போராட்டம்
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    விஜய் வசந்த் எம் பி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பரப்பிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் அறி விக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலி பரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. இந்த நிலை யில் நேற்று மாலை மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்த னர். ஆனால் இன்று காலை வரை அந்த வாலிபரை கைது செய்யப்படவில்லை.இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட னர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கள் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், டைசன்,செல்வன் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் டிஎஸ்பி நவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. சம்பந்தப் பட்ட நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை‌ வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.
    • இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    –நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரச்சந்தைக்கு வேலூர், குப்புச்சி பாளையம், பொய்யேரி, ஒழுகூர்பட்டி, படமுடி பாளையம், பொத்தனூர், வேலாயுதம்பாளையம், கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வருகின்றனர்.

    இந்த வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது உள்ள வாரச்சந்தை பகுதியில் இடவசதி போதுமானதாக உள்ளது. அதில் மேற்கூரை அமைத்து கட்டிடம் கட்டினால் எங்களுக்கு இட வசதி பற்றாக்குறை ஏற்படும்.

    வாரச்சந்தையில் கடைகள் வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் கடைகள் கட்டிதர இயலாது என கூறி புதிதாக கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டனர்.

    அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், சந்தை வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் தற்போதுள்ள சந்தை பகுதி அனைத்து வசதிகளுடன் கான்கிரீட் மேற்கூரை, கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் அனை வருக்கும் இடம் ஒதுக்கி தரப்படும்.

    தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ள சந்தை பகுதியிலும் அனைத்து வியாபாரி களுக்கும் இடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித் ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தண்டனை காலத்திற்குரிய நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமத்தி வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தில் நேற்று இரவு ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், பரமத்தி ஒன்றியம் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியரின் கட்டாய இடமாறுதல், தண்டனை காலத்திற்குரிய நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு நிலை ஆணைகள் பெற்று வழங்கி ஊதிய நிர்ணயம் செய்து பணப்பலன் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு நிலுவை ஊதியத்தை உடனே ஆசிரியர்களுக்கு பெற்று வழங்க வேண்டும், மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள கந்தம்பாளையம், பிராந்தகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு அரசு அறிவித்துள்ள போராட்ட கால சலுகைகளை முறைப்படுத்தி அரசின் விதிமுறைகளின் படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    பின்னர் அலுவலகத்தில் இருந்த வட்டார கல்வி அலுவலர் கவுரியை சிறைப்பிடித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்தது அங்கு வந்த பரமத்தி ஆய்வாளர் ரமேஷ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இரவு நடந்த இந்த ் முற்றுகைப் போராட்டத்தால் வட்டார கல்வி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாண்டமங்கலம் அரசு பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது.

    ஆனால் கணினி அறிவியல் இல்லை. பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கணினி பாடப்பிரிவு கேட்டுள்ளனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை, எனவே மாற்று பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

    மேலும் அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவர்கள் செல்லமுடியாததால் இப் பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    மற்ற பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியாது என தலைமை ஆசிரியர் தங்கவேல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்பள்ளி கேட்டின் முன்பு நின்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர்களுடன் வந்து மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×