search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நள்ளிரவு"

    • தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.
    • நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ், குழந்தைகள் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் .

    தமிழ்த் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்'-ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் நயன்தாராவின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

    தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.




    கடந்த சில நாட்களாக அங்கு தங்கி உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா கொச்சியில் உள்ள எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

    இதனை பார்த்த ரசிகர்களால் ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்து வருகின்றன.




    நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக காரில் வந்து ஒரு கடை முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் நயன்தாரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார்.
    • சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார். நேபாளம் பியு தான் மாவட்டம் ஸ்வர்கத்வாரி பகுதியை சேர்ந்தவர் பேஸ் பகாதூர் பொன் மகர். இவரது மகன் ஜீபன் பொன்மகர் (வயது22) இவர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பெருமலை சாலையில் உள்ளஓட்டலுக்கு சொந்தமான இருப்பிடத்திற்கு சென்று விட்டார். அவரது மாநிலத்தை சேர்ந்த கிஷோர் அதிகாரி நள்ளிரவு பார்த்தபோது ஜீபன் பொன்மகர் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே எலக்ட்ரிக்கல் ஆட்டோ ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபடி இருந்துள்ளது. சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    அவரது தலையின் பின் பகுதியில் காயம் உள்ளது. எனவே அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திட்டக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜீபன் பொன்மகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நள்ளிரவு-அதிகாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் குடிநீர் வீணாகிறது.
    • சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீருக்காக உள்ளாட்சிகள் லட்சக் கணக்கான ரூபாயை ஒவ்வொரு மாதமும் குடிநீர் வாரியத்திற்கு செலுத்து கிறது.

    குடிநீர் எந்த நாளில் எந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வரும் என மக்களுக்கு தெரிவதில்லை. நள்ளிரவு, அதிகாலை என விநியோகம் செய்வதால் பலரும் குடிநீரை பிடிக்க முடியாமல் போகிறது. இது போன்ற முறையற்ற சப்ளையால் குழாய்களில் நல்லி இல்லாமல் குடிநீரானது வீணாகி சாக்கடையில் ஓடுகிறது.

    பல பகுதிகளில் இது போன்று நடப்பது தொடர்கிறது. உள்ளாட்சிகள் குடிநீர் வரும் நாள், நேரம், எந்த பகுதியில் விநியோகம் என்பதை கூறுவதில்லை. நினைத்த நேரத்தில் குடிநீரை திறந்து விடுவதாலும் குடிநீர் வீணாகிறது.

    இதை தவிர்க்க குடிநீர் வரும் நாள், நேரத்தை அறிவிக்க உள்ளாட்சிகள் முன் வரவேண்டும். இதை முறையாக கடைப்பி டித்தாலே குடிநீர் வீணா வதை தடுக்க முடியும்.குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.

    உள்ளாட்சி கள் அட்ட வணைப்படி சுழற்சி முறையில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். பகல் பொழுதில் காலை, மாலை நேரத்தில் விநியோகம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ள தாக இருக்கும். இதை முறைப்படுத்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

    • நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது திடீரென அவர் மேற்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்றார் அங்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்தார் அவரிடம் தான் யார் என கூறாமல் மனு கொடுக்க வந்திருப்பதாக சூப்பிரண்டு கூறினார்.

    அவரை அடையாளம் கண்டு கொள்ளாத காவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அவர்களிடம் மனு கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த சூப்பிரண்டு அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் பணியில் இருந்த காவலருக்கு யாரோ உயர் அதிகாரி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எங்கு சென்றிருக்கிறார்கள் என காவலரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தார்.

    அவர்கள் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார். மேலும் காவலரிடம் தன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்ததில்லை என்று காவலர் கூறியுள்ளார். அவரிடம் தான் தான் போலீஸ் சூப்பிரண்டு என்பதை தெரிவித்துவிட்டு மீண்டும் தான் வந்த சைக்கிளில் ஏறி அவர் அங்கிருந்து சென்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதாரண உடையில் சைக்கிளில் வந்து போலீஸ் ஸ்டேசனில் ஆய்வு செய்தது விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விடிய-விடிய 4 கால பூஜைகள் நடக்கிறது
    • ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்வ ருகிற18-ந்தேதிமகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று நள்ளிரவு கோவில் நடை திறக்கப்பட்டு 4கால பூஜை க ள்விடிய-விடிய நடக்கிறது.

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதி காலை4.30மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்ப டுகிறது. அதன் பிறகு மகா சிவராத்திரி விழாவை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது.

    பின்னர் 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜையும் 1.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    மீண்டும் மறுநாள் அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் உள்ள பூஜைகள் நடக்கிறது. மகா சிவராத்திரியை யொட்டி ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண் காணிப்பாளரும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • தை அமாவாசை விழா நிறைவுபெற்றதை யொட்டி நடந்தது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாட ப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.

    அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டார்கள். இரவு 9 மணிக்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பக்தர்கள் வழிெநடுகிலும் தேங்காய்பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின்கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன்கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • போலீசாருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்
    • குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்களில் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் வெளியூர்களில் தங்கி மீன்பிடித்த மீனவர் கள் பலரும் ஊருக்கு வந்துள்ளனர். இதை யடுத்து மாவட்டம் முழுவ தும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வடசேரி, தக்கலை, குளச்சல், கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தக்கலை பஸ் நிலையம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

    நிகழ்ச்சி யில், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், தக்கலை இனஸ் பெக்டர் நெப்போ லியன், வர்த்தக சங்க துணை தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு தெரு வீதிகளில் இளைஞர்கள், வாலிபர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி னார்கள். புத்தாணை் டையடுத்து இன்று காலையில் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலை மோதியது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    மாத்தூர் தொட்டில் பாலம் குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தோடு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • போலீசார் கடும் கட்டுப்பாடு
    • குத்தாட்டம், ஆடல் பாடலுடன் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டுவருகிறது. இரவு 7 மணிமுதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல்- பாடல், குத்தாட்டம், பரதநாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்கவிடப் பட்டு கேக்வெட்டிபுத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக் கும் இந்தபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சுற்றுலாபயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

    ஒரு தம்பதிக்கு ரூ.6ஆயிரம் வீதமும் தனிநபர் ஒருவருக்கு ரூ.3ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டி கன்னி யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை யில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடைவித்து உள்ளனர். நட்சத்திரஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
    • ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும்

    நாகர்கோவில்:

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புத்தாண்டு கொண்டாட் டங்கள் எளிய முறை யில் நடந்தது. இந்த ஆண்டு புத் தாண்டு கொண்டாட் டத்தை வெகு விமர்சை யாக கொண்டாட பொது மக்கள் தயாராகி வரு கிறார்கள். குமரி மாவட் டத்தில் புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து கோவில் களில் சிறப்பு பூஜை கள் நடந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடக்கிறது. நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தி வழங்கு கிறார்.

    இதே போல் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலிநடக்கிறது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆல யங்களிலும் புத்தாண்டு யொட்டி சிறப்பு பிரார்த்த னைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத் தில் ஜொலிக்கிறது.

    கன்னியாகுமரியில் ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட் டங்களில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1500 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியா குமரி யில் புத்தாண்டையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரை பகுதி களில் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஷிப்டுகளாக மாவட்ட முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி வருவ தற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளப்பட உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர் கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கொண்டாடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 வாலிபர்கள்
    • கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில்இருந்த 5 வாலிபர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றிய சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

    கன்னியாகுமரிஅருகே உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதில்இருந்த 5 வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பிய போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதியது.விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த அந்த 5 வாலிபர்கள் மது போதையில் இருந்ததால் போலீசாருக்கு பயந்து காரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர்.

    இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியின்அருகில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் இருந்தகண்காணிப்பு கேமராவில்விபத்துநடந்தது தெளிவாக பதிவாகி உள்ள து. அந்த சி.சி.டி.வி.காட்சி கள்சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தக்கலையில் காவடி கட்டத் தடை-அனுமதியால் பரபரப்பு
    • இன்று காலை தாமதமாக தொடங்கியது ஊர்வலம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தக்கலை குமார கோவிலில் அமைந்துள்ள வேளிமலை முருகன் கோவில்.

    இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் போலீஸ், பொதுப்பணி என அரசு துறைகள் சார்பிலும் காவடி எடுப்பது உண்டு.

    காவடி கட்டிய பின்னர் அதனை யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு ஊர்வலம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை பெற்றது.முன்னதாக ஊர்வலம் செல்லும் சாலையோரம் காவடிகளை வரவேற்கும் விதமாக வாழைக்குலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    ஊர்வலத்தில் பங்கேற்ப தற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காவடி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தக்கலை போலீஸ் நிலையத்திலும் காவடி கட்டுவதற்கான பணிகள் மற்றும் பூஜை ஏற்பாடுகள் நேற்று மாலை யில் தொடங்கியது.

    ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பணிகள் எதுவும் நடைபெறாமல் ேபாலீஸ் நிலையம் களையிழந்து காணப்பட்டது. இந்த சூழலில் போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இங்கு வைத்து காவடி கட்டக் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதனால் பாரதிய ஜனதா வினர் அதிருப்தி அடைந்த னர். அவர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நள்ளிரவு 12 மணிக்கு தக்கலை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமர சம் செய்ய முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரம் போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணியும் நடைபெறவில்லை. இத னால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் போலீஸ் காவடி இல்லாமல், வேளி மலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்லக் கூடாது. நாளை (இன்று) காலை அனைத்து பகுதி களில் இருந்து எடுக்கப்படும் காவடிகளும் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு வரவேண்டும் என போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த சூழலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து யானையுடன் காவடி ஊர்வலங்கள் புறப்பட்டன. அவை தக்கலை போலீஸ் முன்பு வரக்கூடும் என்பதால் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலங் காலமாக செந்தூர் முருகன் காவடி, தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வேளிமலை முருகன் சந்நிதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சி னையால் இன்று அதிகாலை தொடங்க வேண்டிய பூஜை சடங்குகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.

    எனவே அனைத்து முருக பக்தர்களும், பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொது மக்களும் தக்கலை காவல் நிலையம் முன்பு நியாயம் கேட்க திரள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

    ஆண்டு தோறும் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய காவடி ஊர்வலம் இன்று தொடங்கப்படாதது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் போலீஸ் காவடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணிகள் தொடங்கின.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட காவடிகள், வேளிமலை முருகன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றன.

    இந்த நிலையில் தக்கலைக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் பாரம்பரியமாக தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ்பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் குமாரகோவிலுக்கு காவடிக்கட்டு செல்வது பாரம்பரியமாக நடை பெற்று வருகிறது

    ஆனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடைகளிலும் பொது வெளியிலும் மத ஒற்றுமையை பற்றி பேசி விட்டு இது போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சி களுக்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல் படுகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் குறைந்த கால கட்டங்களில் மாவட்டத்தில் பணிபுரிவார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பஸ் நிலைய ரோட்டில் சிலுவை நகர் அருகே டாஸ்மாக் அரசு மது கடை பக்கம் நடுரோட்டில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்1.45 மணிக்கு அந்த வழியாக வந்த யாரோ சில நபர்கள் பார்த்து இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது சமூக விரோத கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×