search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி  நேபாள வாலிபர் பலி
    X

    திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலி

    • திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார்.
    • சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார். நேபாளம் பியு தான் மாவட்டம் ஸ்வர்கத்வாரி பகுதியை சேர்ந்தவர் பேஸ் பகாதூர் பொன் மகர். இவரது மகன் ஜீபன் பொன்மகர் (வயது22) இவர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பெருமலை சாலையில் உள்ளஓட்டலுக்கு சொந்தமான இருப்பிடத்திற்கு சென்று விட்டார். அவரது மாநிலத்தை சேர்ந்த கிஷோர் அதிகாரி நள்ளிரவு பார்த்தபோது ஜீபன் பொன்மகர் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே எலக்ட்ரிக்கல் ஆட்டோ ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபடி இருந்துள்ளது. சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    அவரது தலையின் பின் பகுதியில் காயம் உள்ளது. எனவே அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திட்டக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜீபன் பொன்மகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×