search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடசேரி பஸ் நிலையம்"

    • 14-வது வார்டு பகுதியில் அவர், தெரு, தெருவாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தினமும் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 14-வது வார்டு பகுதியில் அவர், தெரு, தெருவாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். வார்டு பகுதியில் உள்ள பாலமோர் ரோடு, மாடன் கோவில், டென்னிசன் ரோடு, சார்லஸ் மில்லர் தெரு, மீட்தெரு, நியூ போர்ட் தெரு, எம்.எஸ்.ரோடு, டிஸ்டிலரி ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, கலை வாணர் தெரு, கன்னிமார் மேட்டு தெரு, முஸ்லிம் தெரு, ஓட்டுபுரைதெரு, காமராஜபுரம் மரச்சீனி விளை, வணிகர் தெரு, எம்.எஸ்.ரோடு, சாஸ்தான் கோயில் தெரு, வஞ்சி மார்த்தாண்டன் தெரு, ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அந்த வார்டு பகுதியில் உள்ள வடசேரி பஸ் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நரிக்குறவர்களால் சில பிரச்சனைகள் வருகிறது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் பஸ் நிலையத்தில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், பொறியாளர் பாலசுப்பிர மணியன், மாநகர நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வா ளர் சுப்பையா, கவுன்சிலர் கலாராணி, தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை
    • கஞ்சா புகார்கள் தொடர்பாக 7010 363173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை மற்றும் போதை பொருட் கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் தனிபடை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் குட்கா வழக்கில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருந்தன‌ இதை கண்காணிக்க வடசேரி போலீசுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதை தொடர்ந்து வடசேரி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காலை, மாலை நேரங்களில் பஸ் நிலைய பகுதிகளில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்ப னை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று வடசேரி பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கஞ்சா புகார்கள் தொடர்பாக 7010 363173 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கேட்டு கொண்டார்.

    பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இருள் சூழ்ந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.உடனடியாக அந்த பகுதியில் மின்விளக்கு வசதியை ஏற்ப டுத்துவதுடன் ரோந்து பணியை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார்.

    • மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார்
    • பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்பு றப்படுத்த உத்தரவிட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் யாசகம் பெறுபவர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டப்படுகின்றன. இந்த அறைகள் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே கட்டப்பட இருக்கிறது. இந்த கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பஸ் நிலையம் முழுவதும் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடனே அப்பு றப்படுத்த உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பி ரமணியன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    ×