search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    • அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

     அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.

    பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.

    • 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

    ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    • ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.
    • கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி மற்றும் 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்புதூர், புதுக்குடியிருப்பு குறுக்குசாலை, அஞ்சுகுடியிருப்பு மற்றும் பெருமாள்புரம் முதல் குளத்துவிளை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சேகர், ரமேஷ், தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி செயலாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாகர்கோவில் மாநக ராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி


    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டுக் குட்பட்ட பரமேஸ்வரன் தெருவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 32-வது வார்டுக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சிஜி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகள் நிர்வாகிகள் ராஜன், ராதாகிருஷ்ணன்,
    சரவணன், பீட்டர், வட்ட செயலாளர் மைக்கேல் ராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • கோவில் முன்பு படுத்திருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை
    • நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்-பிரசன்னபார்வதி கோவில் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்-பிரசன்னபார்வதி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நேற்று சரசுவதி பூஜை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்தனர்.

    வழிபாடுகள் முடிந்ததும் இரவில் கோவிலை அர்ச்சகர் பூட்டிச் சென்றார். பின்னர் அவர் இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் உண்டியலின் அருகே காணிக்கை சில்லறைகள் சிதறி கிடந்தன. இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது, உடைக்கப்பட்ட உண்டியலின் அருகே வாலிபர் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது ஏதேதோ கூறி உள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை, கோட்டார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது.
    • கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது

    நாகர்கோவில் : திருச்சியை தலைமை யிடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான அறி விப்பை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் வட்டி தொகை மாதந்தோறும் வழங்கப்பட்ட நிலையில். கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது.

    அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட் டாளர்கள் நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையில் அந்தக் கடை திடீரென மூடப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்த னர்.

    அதன்பேரில் பொருளா தார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் நகை கடையின் 11 கிளைகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோ வில் கிளையில் பொருளா தார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குமரேசன், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா,சப்-இன்ஸ்பெக்டர் கள் மேரி அனிதா, இசக்கித்தாய் மற்றும் போலீ சார் நேற்று மாலை சென்றனர்.அவர்கள் கடை ஊழியர்களை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு, கடையில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.

    இன்று 2-வது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கள் ஆய்வினை தொடர்ந்தனர். கடையில் இருப்பு உள்ள நகைகள், கணக்கு விவரங்கள், முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது
    • பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

    நாகர்கோவில் :நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைதிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படும் மூடிகளை சீரமைக்க மேயர் மகேஷ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து நாகர்கோவில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு அதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூடிகளை குடிநீர் வடிகால் வாரியம் தான் சீரமைக்க வேண்டும்.

    ஆனால் பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் சீரமைக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மூடிகளும் சீரமைக்கப்படும். மாநகரப் பகுதியில் 1500 பாதாளசாக்கடை மூடிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    தெருவிளக்கு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் வரப்பட்ட நிலையில் அதை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ. 14 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 14251 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்ட உள்ளது.

    முதல் கட்டமாக 820 எல்.இ.டி.விளக்குகள் ரூ.71 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 31 வார்டுகளில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. கோர்ட் ரோட்டில் இன்று அந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது
    • சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சா க்கடை திட்டப்பணிகள் மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. செட்டிகுளத்தில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைப் லைன்கள் அமைக்கப்ப ட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பகுதியில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டது. பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் 2 நாட்களாகியும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கண்ணன் குளத்திலி ருந்து வடசேரி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. காலை 9 மணிய ளவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வந்த போது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் பஸ்சில் முன் சக்கரம் சிக்கியது. இதையடுத்து டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். அப்போது பஸ்சின் முன் சக்கரம் தொடர்ந்து பள்ள த்தில் புதைந்தது. மேலும் பஸ்சின் முன் பகுதியும் சாலையில் தட்டியதால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் நடுவழியில் நிறுத்தப்ப ட்டது. பஸ்சில் இருந்த பய ணிகள் இறக்கிவிட ப்பட்ட னர். மாற்று பஸ் மூல மாக அவர்கள் அனுப்பப்ப ட்டனர். பஸ் பாதாள சாக்கடை பள்ளத்தில் புதைந்து நின்றது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காலை நேரம் என்பதால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவ லகங்களுக்கு சென்றவர்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கி தவித்தனர். போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பள்ளத்தில் புதை த்த அரசு பஸ்சை மீட்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சாலையில் புதைந்த அரசு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பஸ் புதைந்த இடத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்க ப்பட்டது. இதனால் சாலை குறுகலாக காட்சியளித்தது. வாகனங்கள் அந்த பகுதி யில் ஊர்ந்து சென்றன. அதே பகுதியில் உள்ள பள்ளத்தில் ஆட்டோ ஒன்றும் சிக்கியது.

    இதேபோல் செட்டிகுளம் சந்திப்பு பகுதியிலும் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு 2 நாட்களாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், மாநக ராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் கம்பு ஒன்றை நாட்டி துணியை சுற்றி வைத்துள்ளனர். இந்த பிரச்சனைகள் தொடர்பு டைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக செட்டி குளம் பகுதியை ஆய்வு செய்து அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு நிரந்தர தீர்வாக பைப் லைன் அமைக்கப்பட்ட பகுதியில் சாலைகளை அப்புறப்படுத்தி விட்டு பைப்லைன் அமைக்க ப்பட்ட பகுதியின் மேல் காங்கிரீட் தளம் அமைத்து அத ன்பிறகு சாலை அமை க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
    • ல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ேஜாதி தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டு விழாவில் ஜோதி ரவீந்திரன் எழுதிய " சிறகு முளைத்து பறக்கும் சமகாலக் கவிதைகள்" மற்றும் அழுதன் எழுதிய "வானத்தை குறி வையுங்கள்" ஆகிய 2 நூல்களை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் வெளியிட கல்லூரி முதல்வர் பிரகாசி அருள் ஜோதி பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ்த்துறை முதல்வர் அலெக்சாண்டர், ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டெல்பின், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் டி.பி.மோள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
    • சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.

    எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.

    ×