search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலுமணி"

    • சூலூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
    • எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார்.

    சூலூர்,

    சூலூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி முன்னிலை வகித்தார். சூலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கார்த்திகை வேலன் வரவேற்றார்.

    அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில தலைவர் மற்றும் பூத் கமிட்டி மேலிட பார்வையாளர் சேதுராமன் கல்நது கொண்டார். கூட்டத்தில் பங்கேற்க வந்த எஸ்.பி.வேலுமணிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மாலை கிரேன் மூலம் அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

    அமைச்சர் உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் பெண்களு க்கான இட ஒதுக்கீடு குறித்து இப்போது தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு 50 சதவீதம் உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயல லிதா. அதன் மூலம் கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராக சாந்திமதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

    தற்போதைய தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரப்பட வில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமான திட்டங்கள் கோவை மாவட்டத்துக்கும், சூலூர் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.

    நீட் பெயரை சொல்லி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவர் படிப்பில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக சாலைகள், பாலங்கள் கோவை மாவட்டத்துக்கு புதிதாக கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரப்பட்டு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத பணியை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

    சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என விலை வாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. எனவே எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

    சூலூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், வக்கீல் பிரிவு கந்தநாதன், சூலூர் நகர துணை செயலாளர் அங்கண்ணன், சூலூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அங்கமுத்து, கலங்கல் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜ், சண்முகம், மீனவரணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வக்கீல் பிரிவு பிரபு ராம், கண்ணம்பாளையம் வார்டு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்.
    • யார் கூட்டணியில் இருந்தாலும் எப்போதும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    கோவை:

    கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர். அவர் என்ன சொல்கிறாரோ அதனை தான் நாங்கள் செய்வோம்.

    யார் கூட்டணியில் இருந்தாலும் எப்போதும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேசினார். தற்போது அண்ணா பற்றி பேசி உள்ளார். அவர்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது. அண்ணாமலை பக்குவமில்லாமல் பேசி வருகிறார். அண்ணாமலை கூறியது போல் அண்ணா யாரிடமும் சென்று மன்னிப்பு கேட்கவில்லை. அவர் அண்ணா பற்றி பேசியது ஏற்புடையதல்ல. வரலாற்றை மறைத்து உண்மைக்கு புறம்பாக பேசி உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    உடுமலை :

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் தலைமையில் உடுமலை சட்டமன்ற தொகுதி கண்ணமநாயக்கனூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி., வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது .குறிப்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களால்ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். 17 லட்சம் உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் மூலம் ஒன்றரை கோடி அதிமுக., தொண்டர்களுடன் கட்சி வீர நடை போட்டது. பின்னர் அம்மாவின் ஆசி பெற்ற தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    திமுக. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். தற்சமயம் திமுக. அரசு இரண்டு ஆண்டு சாதனை என பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக. ஆட்சி காலத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். மொத்தத்தில் எதுவும் தெரியாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தியது. அதிமுக. ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ,ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மருத்துவரின் கனவு நிறைவேறாமல் இருந்த நிலையில் இட ஒதுக்கீடு அறிவித்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் தற்போது மருத்துவராகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் பல்வேறு தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது .

    சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக. ஆட்சி அமைக்கப்படுவது உறுதி. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக.வில் இணைய பலரும் முன் வந்து உள்ளனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதால் உறுப்பினர் சேர்க்கைையை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சார்பில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிமுக ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள தெருவோர விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.


    ×