search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "visited"

    • தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக போலீசார் பல்பொருள் அங்காடி கடந்த 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக போலீசார் பல்பொருள் அங்காடி கடந்த 15-ந் தேதி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பல்பொருள் அங்காடியில் அமைந்துள்ள பொருட்கள், போலீசார் பெற்றுக் கொள்ளும் முறை, அதன் விலைப்பட்டியல் மற்றும் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் டிஎஸ்பி மணிமாறன் , ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டது.

    இதனால் அம்மா பேட்டை, பவானி மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பவானி, அம்மா பேட்டை பகுதி களில் காவிரி கரை யோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதே போல் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதிகள் உள்பட பல இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பவானியில் வெள்ளம் பாதித்த புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி உள்பட பல பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தன்பட்டறை பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளபொது மக்களை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.
    • ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையையொட்டி பூங்கா அமைந்துள்ளது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.

    சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடியும், சறுக்கு விைளயாடியும் மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணை மீனை சுடச்சுட ரசித்து சாப்பிட்டனர். பவானிசாகர் அணை பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், காருக்கு ரூ.30-ம், பஸ், வேன்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    ‘ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்’ என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் தாய் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து காயமடைந்தவர்களை பார்த்து நலம் விசாரிக்கவும், பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.

    இது குறித்து மாணவி ஸ்னோலினின் தாய் வனிதா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் யார் என்று கேட்ட போது நான் விஜய் என்று கூறினார். ஆனால் அவர் நடிகர் என்று சொல்லவில்லை. அவருடன் வந்தவர்கள் தான் நடிகர் விஜய் பலியானவர்கள் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற வந்துள்ளார் என்றனர்.

    அப்போது விஜய் எனது கைகளை பிடித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நாற்காலியை கொடுத்து அமரச் சொன்னேன் அதற்கு மறுத்த அவர் தரையில் உட்கார்ந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். பகலில் வராமல் இரவில் ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் வந்தால் வருவது தெரிந்து கூட்டம் அதிகமாக வருவார்கள் பாதுகாப்பிற்காக போலீசார் வருவார்கள். ஏற்கனவே நீங்கள் மனவேதனையில் உள்ளீர்கள் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டம் கூடுவதை நான் விரும்பவில்லை என்றார். ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×