search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood Affected"

    • பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டது.

    இதனால் அம்மா பேட்டை, பவானி மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பவானி, அம்மா பேட்டை பகுதி களில் காவிரி கரை யோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதே போல் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதிகள் உள்பட பல இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பவானியில் வெள்ளம் பாதித்த புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி உள்பட பல பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தன்பட்டறை பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளபொது மக்களை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ஆந்திராவில் வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். #AndhraPradesh #Flood #ChandrababuNaidu
    காக்கிநாடா:

    ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 200 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டது.



    மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளன. இதையடுத்து வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பிறகு அதிகாரிகளுடன் வெள்ள நிலைமை குறித்து ஆய்வும் நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “2 மாவட்டங்களிலும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். வெள்ளத்தில் முற்றிலுமாக சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்” என்றார்.  #AndhraPradesh #Flood #ChandrababuNaidu 
    கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வாருங்கள் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #keralarain

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.-

    கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிட முன் வர வேண்டும். அவர்களது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்திட ஈரோடு மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.

    தேவையான போர்வைகள், கைலிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், உணவு தயாரிக்க தேவையான அனைத்து பொருட்கள், குழந்தைகளுக்கான பால், பிஸ்கட், மருந்து பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம்.

    நிவாரண பொருட்கள் சேகரிக்கும் மையத்தில் இதனை வழங்க வேண்டும். பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல வாகன உதவி தேவை. அதற்கும் உதவ முன்வர வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். #keralarain

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

    பரமத்திவேலூர்:

    மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் நீரானது வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து குமாரபாளையம், மற்றும் பரமத்திவேலூர் வட்டத்தைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம் அக்ரஹாரம், மணிமேகலை வீதியில் வசித்து வந்த 58 குடும்பங்களை சேர்ந்த 176 பொதுமக்கள் குமாரபாளையம் டவுன் பகுதியில் உள்ள நடனவிநாயகர் திருமணமண்டபத்திலும், குமாரபாளையம் அக்ரஹாரம், அண்ணாநகரில் வசித்து வந்த 62 குடும்பங்களை சேர்ந்த 183 பொதுமக்கள் குமாரபாளையம், புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், குமாரபாளையம் அமானிகிராமம், கலைமகள் வீதியில் வசித்து வந்த 63 குடும்பங்களை சேர்ந்த 141 பொதுமக்கள் ஜே.கே.கே.நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திலும், குமாரபாளையம் அமானி கிராமம், கலைமகள் வீதியில் வசித்து வந்த 59 குடும்பங்களை சேர்ந்த 130 பொதுமக்கள் குமாராபளையம் சி.எஸ்.ஐ பள்ளியிலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம், நாட்டாகவுண்டன் புதூரில் வசித்து வந்த 36 குடும்பங்களை சேர்ந்த 140 பொதுமக்கள் நாட்டான்கவுண்டர் புதூர், நடுநிலைப்பள்ளியிலும், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் வசித்து வந்த 90 குடும்பங்களை சேர்ந்த 302 பொதுமக்கள் பாவடித் தெரு, செங்குந்தர் திருமண மண்டபத்திலும், பள்ளிபாளையம் நகரப்பகுதியில் வசித்து வந்த 77 குடும்பங்களை 229 பொதுமக்கள் ஆவாரங்காடு, நகராட்சி திருமண மண்டபத்திலும், பள்ளிபாளையம் நகரப்பகுதியில் வசித்து வந்த 108 குடும்பங்களை சேர்ந்த 345 பொதுமக்கள் சத்யாநகரில் உள்ள சவுண்டேஸ்வரி திருமண மண்டபத்திலும், சோழசிராமணிகிராமம், மீனவர்தெருவில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 68 பொதுமக்கள் சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசித்து வந்த 668 குடும்பங்களை சேர்ந்த 806 ஆண்கள், 898 பெண்கள் மற்றும் 384 குழந்தைகள் என 2088 பொதுமக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், காவல் கண்காணிப்பாளர் அருளரசு, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மாலதி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×