search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "areas"

    • 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி துணைமின்நிலையம் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின்நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகள் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவத நல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர். கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு. எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு மற்றும் கேசவப்பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பக்குளம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை. ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எ.ம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு.

    சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1, 2-வது தெருக்கள் வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடியின் கிழக்குபகுதி, தமிழன் தெரு.என்.எம்.ஆர்.புரம்,ஏ.ஏ.ரோடு,பி.பி. ரோடு,டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டது.

    இதனால் அம்மா பேட்டை, பவானி மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பவானி, அம்மா பேட்டை பகுதி களில் காவிரி கரை யோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதே போல் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதிகள் உள்பட பல இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பவானியில் வெள்ளம் பாதித்த புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி உள்பட பல பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தன்பட்டறை பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளபொது மக்களை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×