search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fani cyclone"

    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவமாடிய பானி புயலுக்கு வீட்டை பறிகொடுத்த தலித் தொழிலாளி தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கழிப்பறைக்குள் குடும்பம் நடத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்த 3-ம் தேதி துவம்சம் செய்த பானி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கேன்டிரப்பாரா மாவட்டத்தில் புயலின் தாக்கத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, கரைந்து சாய்ந்து, தரைமட்டமாகின.

    இப்படி வீடு, வாசல்களை இழந்து நிற்கதியாக நிற்பவர்களில் ரகுதெய்ப்பூர் கிராமத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான கிரோட் ஜேனா(58) என்பவரும் ஒருவர். வசித்துவந்த வீடு மண்மேடாகிப்போன நிலையில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கட்டித்தரப்பட்ட கழிப்பறையில் சுமார் 15 நாட்களாக இவர் வாழ்ந்து வருகிறார்.

    6 அடி அகலம் 7 அடி நீளம் கொண்ட இந்த கழிப்பறையை தனது வசிப்பிடமாக மாற்றி தனது மனைவி மற்றும் பருவமடைந்த இருமகள்களுடன் குடும்பம் நடத்திவரும் இவர் கழிப்பிடமே வசிப்பிடமாக மாறிப்போனதால் அருகாமையில் உள்ள திறந்தவெளிகளை கழிப்படத் தேவைக்காக நாங்கள் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.

    ’எனக்கு வேறு வசதி இல்லாததால் அரசு தரும் நிவாரணத்தொகையை வைத்துதான் வேறு வீடு கட்ட வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் மற்றும் முதல் மந்திரி பிஜு பட்நாயக் பெயரிலான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கல்வீடு கட்டுவதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

    அப்படி இந்த திட்டங்களின் மூலம் எனக்கு நிலையான வீடு அமைந்திருக்குமானால் என் வீட்டை இழந்து இப்படி கழிப்பறைக்குள் சமைத்து சாப்பிடும் துர்பாக்கியம் நேர்ந்திருக்காது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு வாழ வேண்டி இருக்குமோ?’ என்று வேதனையுடன் கூறுகிறார், கிரோட் ஜேனா.

    கிரோட் ஜேனாவின் நிலைமை பற்றி தெரியவந்ததும் அவருக்கு ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர தேவையான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டு வருவதாக கேன்டிரப்பாரா மாவட்ட கிராமப்புற மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குனர் திலிப் குமார் பாரிடா தெரிவித்துள்ளார்.
    புவனேஸ்வர் மாவட்டம் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பினார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 3-ந்தேதி கரையை கடந்த பானி புயல் அம்மாநிலத்தை புரட்டிப் போட்டது.

    புவனேஸ்வர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்திய புயலால் விமான சேவைகளும், பாதிக்கப்பட்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் ரோஜலின் பிரேதன் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.

    புயலால் ரேடியோ நிலையத்தின் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையிலும், அவர் அச்சப்படாமல் வேலை செய்தார். புயல் கரையை கடப்பதற்கு முதல் நாள் ரோஜலின் இரவு நேர பணியில் இருந்தார். மறுநாள் காலை பணி முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. ஆனால் அந்த ரேடியோ நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் யாரும் அன்று வேலைக்கு வரவில்லை.

    காலை 9 மணிக்கு புயல் தாக்கிய வேளையில் தனி ஆளாக பணிபுரிந்த ரோஜலின் பேரிடர் குறித்த தகவல்களை மக்களுக்கு கூறியதாக ரேடியோ நிலைய அதிபர் ஷா அன்சாரி கூறினார்.


    இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வெளிவந்த புயல் குறித்த தகவல்களை இன்டர்நெட்டில் பார்த்து கிராம மக்களுக்கு காலை 9.30 மணிவரை தெரிவித்துள்ளார். அப்போது வரை அங்கு இன்டர்நெட் சேவை இருந்தது. அதன் பிறகு சிறிது நேரத்தில் புயல் பாதிப்பு அதிகமானதால் இன்டர் நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

    ரோஜலின் கூறிய தகவல்களால் 100 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தப்பித்துள்ளதாகவும் அன்சாரி தெரிவித்தார். புயல் நேரத்திலும் கடமை தவறாமல் துணிச்சலாக பணியாற்றிய ரோஜலினுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
    பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளரிடம் வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க 5-5-2019 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டார்.


    அதன்படி இன்று (13-ந் தேதி) ரூ. 10 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித்குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    பானி புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #CycloneFani
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு  4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அவ்வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் மே 3ந்தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட கடலோர பகுதியில் ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.   #CycloneFani
    வங்கக் கடலில் உருவான பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்தது. 

    இந்நிலையில்,  சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை.

    வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கி.மீ. தொலைவில் நகரும். பானி புயல் கரையை நெருங்கி வரும் நேரத்தில் வட தமிழகம், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். #CycloneFani #Fani #TNRains
    வங்கக் கடலில் உருவான பானி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் தெரிகிறது. பானி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற கூடும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #CycloneFani #Fani #TNRains 
    வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாகும் என்றும், 30ம் தேதி தமிழகத்தை நெருங்கும்போது மணிக்கு 145 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. #CycloneFani #TNRains
    புதுடெல்லி:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அடுத்த நகர்வைப் பொருத்து, எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றி வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தெரிவிக்கும்.

    இந்நிலையில், இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்றும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.

    “சென்னைக்கு தென்கிழக்கில் 1210 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயலாக வலுப்பெறும். இந்த புயல் வரும் 30-ம் தேதி மாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரையை நெருங்கும். புயல் கரையை நெருங்கும்போது, மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. #CycloneFani #TNRains
    ×