என் மலர்
நீங்கள் தேடியது "finance allocated"
பானி புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #CycloneFani
சென்னை:
தமிழகத்தை மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அவ்வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மே 3ந்தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட கடலோர பகுதியில் ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #CycloneFani
தமிழகத்தை மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அவ்வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மே 3ந்தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட கடலோர பகுதியில் ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #CycloneFani
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் ரூ.173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan
சென்னை:
கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன. வேளாண் பயிர்களும் நாசமடைந்தன.
தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். அதன் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய மந்திரி ராதா மோகன்சிங் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
இதில் தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடியும், தோட்ட பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan
கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்தன. வேளாண் பயிர்களும் நாசமடைந்தன.
தமிழக அரசு கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை அளித்தனர். அதன் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக சேத விவரங்களையும், அதற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் மத்திய மந்திரியிடம் மனு கொடுத்தார்.

இதில் தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடியும், தோட்ட பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். #GajaCyclone #CentralGovt #UdumalaiRadhakrishnan






